Log in

Register



Wednesday, 15 July 2020 12:35

லாட்டரி டிக்கெட்

Written by Geetha pandian
Rate this item
(1 Vote)
Suhasini, mohan, லாட்டரி டிக்கெட், Suhasini, mohan, லாட்டரி டிக்கெட், 1982
காணாமல் போன லாட்டரி டிக்கெட் கிடைக்குமா? 
 
லாடட்ரி டிக்கெட் மோகன் மற்றும் சுஹாசினி நடிப்பில் வெளியான நகைச்சுவை திரைப்படம். வாழ்க்கையில பொன்னுங்க சமாசாரமே தெரியாம ஒரு பொன்னுட்ட அடிய வாங்கிட்டு, யாரு என்னச்சொன்னாலும் கண் மூடி தனமா நம்பிட்டு ஒருத்தன் இருக்கானா அது இந்த படத்தோட ஹீரோதான். அப்படிப்பட்ட ஒருத்தன் வேலைச்செய்யற கம்பெனிய பத்தி சொல்லிய ஆகனும். 
 
மேனேஜ் இல்லாத நேரத்துல ஒரே கூத்தும்  கும்மாளமும் காமெடியும் தான். வேலை எதுவும் செய்யறதுல்ல. அடிக்கடி மேனேஜ் ட்ட திட்டு வேற வாங்குனாதான் அங்க இருக்கறவங்களுக்கு தூக்கமே வரும். அதுல நம்ப ஜீரோ இல்ல ஹீரோ வாங்காத திட்டே இல்ல. 
 
இவன மாதிரி ஒரு கேரக்டருக்கு கல்யாணம் நடக்கறதே ஒரு லாட்டரி டிக்கெட்தான். இவன் ஒரு ராசியே இல்லாதவன். ஏன் சொல்லறேனு தெரியுமா? ஒருத்தருக்கு கல்யாணம் ஆனா மட்டும் போதுமா ....?
 
முதல் முறை நடக்கற முதல் இரவில், முதல் இரவை பத்தி ஒரு புத்தகம் படிச்சு அதன் படி நடந்துக்கிறான். பாதி புக் படிச்சிட்டு இருக்கும்போதே "ஹீரோவோட அப்பா சரக்கு நினைச்சு பினாயில் குடிச்சு அட்மிட் ஆகிட்டாரு". சோல மக்கா போச்சா..
 
அப்பறம் ஆடி மாசம் காத்துயடிக்க, பொண்டாட்டி அவங்க அம்மா வீட்டுக்குப் போயிட்டாள். மனசு அளவுல மட்டும் இல்ல. எல்லா வகையிலும் ரொம்ப வருத்தம் ஆகிட்டான்.  
 
ஒரு முறை சில்லரை முறிப்பதற்காக லாட்டரி டிக்கெட் வாங்கறாங்க. அது தொலைஞ்சுப்போயி விடுகிறது. அந்த டிக்கெட் சில்க் ஸ்மிதா கையில கிடைக்கவே...அந்த நேரம் பார்த்து லாட்டரில அதிஸ்டம் இல்லாத புது மாப்பிள்ளைக்கு 10 லட்சம் பரிசு விழுது. 
 
இரண்டாவது முறை முதல் இரவில், அந்த லாட்டரி டிக்கெட் காணாம போனாதால், நின்னுப்போச்சு. இதுக்கு நடுவுல சில்க் ஸ்மிதா தன்னோட வேலையை காட்ட,  இரண்டு பேருக்கும் இடையில் சண்டையாகுது. என்னை ரொம்ப நல்லவனு நிர்பிக்க பொண்டாட்டிக்காக 10 லட்சம் எல்.எஸ்.சி போட்டு தன்னை கொலைச்செய்வதாக ஒரு ரவுடியிடம் போன் பேசுகிறான். 
 
10 லட்சம் வருவதை விடக்கூடாதுனு  நினைச்சு என் கணவனோட அன்பை புரிஞ்சுட்டு மனைவி அவனை ஏத்துக்கிறாள். பின்னர் மூன்றாவது முறையாக முதல் இரவுக்கு ஏற்பாடு நடக்குது. எல்லா பிரச்சனையும் சரியாகியிருச்சுனு நினைக்கும்போது அந்த ரவுடியை நேரடியாக பார்த்து தன்னை கொல்ல வேண்டாம் என்று கெஞ்சுக்கிறான். ஆனால் அவனை ரவுடி நம்பவில்லை. இந்த முறையும் முதல் இரவு போச்சா...
 
எப்படி ரவுடியிடமிருந்து ஹீரோ தப்பிப்பார்? பணத்துக்காக பேராசைப்பட்டு வெகுளியான மோகன் and சுஹாசினியை கொல்லத்துடிக்கும் சில்க்யிடமிருந்து ரவுடி பிரபு காப்பாற்றுவாரா? இவர்கள் முதல் இரவு நான்காவது முறையாவது நடக்குமா? லாட்டரி டிக்கெட் கிடைக்குமா? என்பதே இப்படத்தின் உச்சக்கட்டம். 
 
-கீதாபாண்டியன்
 
 
Read 733 times
More in this category: « Actor ISR
Login to post comments