”நல்ல கதை தேடிக் கொண்டிருக்கிறேன்” தமிழ் திரை உலகில் உச்சரிக்கப்படும் வார்த்தைகள் இவை. பாக்கியராஜ் வெற்றிக்குப் பின் திரைக்கு வந்த அனைத்து இயக்குநர்களும், தானே கதை எழுதி இயக்கும் மனநிலைக்கு வந்துவிட்டார்கள். எந்தக் கதாசிரியராக இருந்தாலும் தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களைத்தான் கற்பனைகள் கலந்து கதையாக்குகிறார். அவருடைய அனுபவங்கள் தீர்ந்தபின், தான் கேட்டு வளர்ந்த பிறர் அனுபவங்களை கதையாக்குகிறார். இரண்டும் தீர்ந்த பின் தேங்கிவிடுகிறார். நல்ல கதை தேடிக் கொண்டிருக்கிறேன் என்கிறார்.…