Log in

Register



Saturday, 07 March 2020 03:29

அந்திமழை பொழிகிறது -ராஜ பார்வை

Written by GEETHA PANDIAN
Rate this item
(1 Vote)
#பாட்டோபாட்டு #பாட்டோபாட்டு ராஜ பார்வை- KING LOOK
 
 
அந்திமழை பொழிகிறது. ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது. என் காதலிலே நான் உன்னைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பதால் பொழிகிற மழை துளியில் கூட உன் முகம் தெரிகிறது. நீ எப்பேர்ப்பட்டவள் தெரியுமா, உயிரோடு இருக்கும்போது நாம் காணாத அந்த இந்திரத்தோட்டத்தில் விளைகிற விலை உயர்ந்த முந்திரி மாதிரி உன் குணமானவள். 
மன்மத நாட்டிற்கு மந்திரியே. அந்த இறைவனுக்கு நீ நெருக்கமானவள் போல,  உன்னை மட்டும் பாத்து பாத்து செதுக்கிருக்கான். 
 
காதலி காதலனைப் பார்த்து, தேன் போன்ற நீ தனிமையென்ற வண்டுக்கடியில் சிக்கிருப்பதை பார்த்து உன்னை மீட்டுயெடுக்க வந்த பெண்தான் நான். உன் நெஞ்சுக்குள் எரிகிற தீயைப்போன்ற சோகத்தை மோகம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறாய். தனிமை எனும் தாக்கத்தில் இருந்தாய் அதிலிருந்து உன்னை வெளியே கூட்டிக்கொண்டு வரப்
போகிறேன். 
 
காதலன் மனமோ! உன் கரம் பிடித்த நானோ,  இளமையில் எத்தனை நாள் தனிமையில் வாழ்வது. எனக்கு எதைப்பார்த்தாலும் உன் நினைவாகவே உள்ளது. உடல் முழுவதும் மோகம் எனும் தாக்கத்தில் இருக்கிறேன். அந்த தாகத்தை தீர்க்க உன்னால தான் முடியும். இப்போது எனது கண்களில் முட்களாக இருக்கிறது. தண்ணிக்குள்ள இருக்கும்போது கூட வியர்வை சொட்டுகிறது. 
 
காதலி! கொஞ்சம் பொறு அதற்கும் காலம் வரும். உன் தனிமையில் காயத்திற்கு மருந்தாகவும் உன் மோகத்திற்கு தீர்வாகவும் வருகிறேன். உன் மன்மத அம்பிற்கு சந்தனத்தை புசி ஆறுதல் அளிக்கிறேன். என்று காதலி காதலனுடைய ஆர்வ வார்த்தைக்கு பதில் அளிகிறாள். 
 
இந்த பாடலில் பார்வையற்ற காதலன், காதலி மேல் இருக்கும் காதலில் எப்படி வர்ணித்து தனது மன நெருக்கடியை வெளிப்படுத்துகிறான். அதற்கு காதலி கண் தெரியாத காதலுக்கு கண்ணுக்கு கண்ணாக வாழ ஆசைப்பட்டு எப்படி பதில் அளிக்கிறாள் எனும் உணர்வே இந்த பாடல். இதை நீங்க உணர்கிறேங்களா? 
 
-GEETHA PANDIAN
Read 577 times
Login to post comments

Calendar

« April 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30