ஒற்றுமையும், வேற்றுமையும்
இத்தனை வருட தமிழ் சினிமாவில் கல்லூரி வாழ்க்கையை மையப்படுத்தியோ, அதனை ஒரு காரணப்படுத்தியோ எடுக்கப்பட்ட காட்சிகள் இல்லாத படமே கிடையாது. அதில் பெரும்வாரியாக மக்களை சென்று அடைந்த கல்லூரி கதைகளில் நம்மவர் என்ற கமலின் படமும், அடுத்த சாட்டை என்ற சமுத்திரகனி படமும் கண்டிப்பாக 90 ஸ் கிட்ஸ் மற்றும் 2K கிட்ஸ் மனதில் நீங்காத இடம் பிடித்தவை.
ஒரே மாதிரியான எண்ணங்கள் பலருக்கு வரலாம் அதனை எவ்வாறு திரையில் பரதிபலிக்கரோம் என்பதே முக்கியமான ஒன்றாகும். அதுலையே நமது திறமை ஒழிந்துள்ளது. மேலும் அவ்வாறு தயாராகிய இரு படங்கள் தான் இவைகள்.
இந்த இரண்டு படத்திற்கும் ஒரு சில ஒற்றுமையும், வேற்றுமையும் உள்ளது. அவைகளைப் பார்ப்போம். ஆசிரியராக பொறுப்பேற்று வரும் கதாபாத்திரம் கமல் மற்றும் சமுத்திரகனி இருவருமே சிறு வயதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களாக அலிச்சாட்டியம் பண்ணியவர்கள் என்று சொல்லப்படும். ஆனால் காட்சிகள் காட்டப்படாது.
நம்மவர் கதையிலும் அடுத்த சாட்டை கதையிலும் மாணவர்களுக்கு பிடித்த ஒரு ஆசிரியராக காலப்போக்கில் மாறியிடுவர். மேலும் இந்த இரண்டு கதையிலும் கல்லூரி வளாகத்தை சுத்தம் செய்யுற பணியில் ஒரு பாடல் மூலம் ஈடுபட்டுயிபர்..
இரண்டிலும் வில்லனாக ஒரு மாணவன் தான் இருப்பான். ஆனால் நம்மவர் வில்லன் மது, மாது, கஞ்சாவென்று பலவைகளை பயன்படுத்துபவன். ஆனால் அடுத்த சாட்டை வில்லனுக்கு நிதானம் இல்லாத காதல் மட்டுமே அவனை வில்லனாக காட்டும்.
அடுத்த சாட்டை கனி அவர்களுக்கு குடும்பம், கல்யாணம் போன்ற காட்சிகள் இருக்கும். நம்மவர் கமல் அவர்களுக்கு தொற்றுநோய், லிவ்விங் டூ கேதரில் இருப்பர். மேலும் மிக பெரிய ஒற்றுமையாக இரண்டு கதையிலும் கூட வேலைச்செய்யற ஆசிரியரையே காதல் திருமணம் செய்வர்.
மேலும் ஒரு கல்லூரி படம் என்றாலே பெரும்பாலும் இது மாதிரியான காட்சிகள் தான் அமைகிறது. இதுவே அடுத்த சாட்டையில் நம்மவர். நம்மவர் கமல் முக பாவனையில் அடுத்து மாஸ்டர் விஜய் ஸ்டெல் இருப்பதாக தெரிகிறது. அதுவும் கல்லூரி படம் என்பது நாம் அறிந்ததே. இருப்பினும் மாஸ்டரின் புதுமையை பொறுத்திருந்து பார்ப்போம்.
-கீதாபாண்டியன்