"கல்யாணத்திற்கு பின்னாடி காதலை மறக்கறதும் கணவனையே மறப்பதும் இன்றைய காதலாகிப்போச்சு"
இயக்குனர் மாரி நடித்து இயக்கும் 3 முடிச்சு யூடூப் தொடர் வெளியாகி மக்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
உயிருக்கு உயிராக காதலித்து 2018 கல்யாணம் ஆகி ஒருத்தரால ஒருத்தர் நிறைய சந்தோஷத்தை தொலைத்திருக்காங்க. அதனால இரண்டு வருடத்துல வாழ்க்கையே கசந்துபோச்சு. ஆனாலும் மனசுக்குள் இருக்கற அன்ப வெளிக்காட்டாமலே வாழ்றாங்க.
இரண்டுப்பேருமே மனசு விட்டு பேசாதது தான் அந்த சண்டைக்குக் காரணம். ஒரு நாள் பேசறாங்க. அவங்க அவங்க எதிர்பார்ப்புக்கு ஏற்றமாதிரி மீண்டும் காதலர்களா மாறுக்கின்றனர். வாழ்க்கையோட ஒவ்வொரு நொடியும் சந்தோஷமா கழிக்கறாங்க. இதுக்கு இடையில் வீடு தேடி வருகிற பிரச்சனையை எப்படி கடக்கின்றனர் என்பதே தற்போது போகும் காட்சிகள்.
"கல்யாணத்திற்கு பின்னாடி காதலை மறக்கறதும் கணவனையே மறப்பதும் இன்றைய காதலாகிப்போச்சு", இன்றைய சமூக கட்டமைப்பு மனுஷனுக்கு ஒரு வித அழுத்தத்த கொடுத்திட்டேதான் இருக்கு. ஒரு 3 முடிச்சு என்பது கழுத்தில் கட்டுவது அதை ரொம்பவும் இறுக்கி கட்டினால் என்னாகும்.
மாரியின் திரைக்கதை, எடிட்டிங் மற்றும் அடுத்த எபிசோடுக் காட்சியைப்பற்றிய தூண்டுதலை இந்த காட்சியிலையே கொடுப்பது போன்ற அனைத்தும் அவருக்கே ஏற்ற பாணி.
எதோயொரு காரணத்தினால் கதாநாயகி கடத்தப்படுகிறாள். அதற்கு யார் காரணம்? கதாநாயகன் நிலைமை என்னவாகும்? அடுத்த அடுத்த எபிசோடுகளில் தொடர்ந்து 3 முடிச்சு தொடரும்...நீங்களும் பாருங்க.
-கீதாபாண்டியன்