இந்தப்படத்தை பார்க்க வேண்டாம். ஆனால் இந்த படத்தில் வரும் நிகழ்வுகளை நேரடியாக சந்திப்பிங்க.
எட்டுத்திக்கும் பற...
வறுமை, அடையாளத்தை இழத்தல், மதம் மாற்று திருமணம், ஆணவக்கொலை, கொள்கை ரீதியாக போராடுபவர்கள், சாதி அரசியல், மானத்தை இழந்து சம்பாதிப்பவர்கள் இதுப்போன்ற எல்லா பிரச்சனையும் ஒன்று திரட்டி எடுக்கப்பட்ட படம் "எட்டுத்திக்கும் பற".
சராசரியான மக்களாகியவர்கள், அவகளது அன்றாட வாழ்வில் இதுப்போல பல வித பிரச்சனைகளை கடந்துச்செல்கிறோம். இந்த பிரச்சனைக்குள்ளும் மாட்டிக்கொண்டுதான் இருக்கோம். ஆனால் அதனை சரிச்செய்ய முடியல என்பது தான் நிசத்தமான உண்மை.
மகனுக்கு உடல்நிலை சரியில்ல தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பார்க்க பணமில்லை. முற்றிலும் வறுமை.
சொந்த நிலத்தையும் அடையாளத்தையும் இழந்து தங்குவதற்கு வீடு இல்லாமல் "Care of platform" வாழும் அடிதட்டு மக்களின் நிலை.
முதியோர் திருமணம், தனது வாழ்க்கை துணை இறந்து பேச்சுத்துணைக்குக்கூட ஆள் இல்லாமல் தவிக்கும் வெவ்வேறு மதத்தினரின் திருமணம்
ஒரே ஊர், வெவ்வேறு சாதியினரின் காதல். சாதிக்காரன் உடைய பொழப்பு. ஆணவக்கொலை.
கொள்கை ரீதியாக, அணிநயத்திற்கு எதிராக போராடுபவர்களின் அர்த்தமற்ற சாவு.
அரசியல்வாதிகளின் சாதி அரசியல் எல்லா ஆளுங்களையும் கைக்குள் போட்டுக்கொண்டு, தன் சாதிக்கொரு இழுக்கு வந்தால் விடாமல் இரத்தத்தை சுவைக்கும் அரசியல்
மானத்தை பறிக்கொடுத்து ஆடிபாடி வயிற்றை கழுவும் பெண்கள்.
வன்மம், வஞ்சம், லஞ்சம், கொலை, கௌவரம், கற்பழிப்பு, சாதி,மத பாகுபாடு
.............................. ....................... ........................................................ ........................................................................ .......................................................... ................................................... ..................................
இது ஒரு தொடர்கதை...நாட்டின் சாபகேடு...
இவைகள் இல்லாத ஒரு நல்ல சமூகம் வளர்வது தான் ஒரு விடியல் இல்லவிடில் பிணங்கள் மயமாகும் சமூகம்
-கீதாபாண்டியன்