மனம் திரும்புதே என்ற நிகழ்ச்சிக்காக இயக்குநர் ரஞ்சித்தை சந்தித்தபோது நிகழ்ந்தவை. இயக்குநர் ரஞ்சித். சமீபத்தில் அதிகம் பேசப்பட்ட படங்களை இயக்கியவர்(அட்டகத்தி, மெட்ராஸ்). அவரிடம் சினிமா உலகிற்கான எந்தப்பூச்சும் இல்லை. ”இன்னா சார் பேசணும்”, பேச்சில் அவ்வப்போது மெட்ராஸ் தமிழ். ”பொதுவா நான் டிவின்னாலே அவாய்ட் பண்ணிடுவேன் சார். இயல்பாவே பேச முடியல. நடிக்க வேண்டியதிருக்கு”, என்றார். நீங்கள் தயங்க வேண்டியதில்லை. இந்த நிகழ்ச்சி முழுவதும் நீங்கள் நீங்களாகவே இருப்பீங்க. இது வெறும் நிகழ்ச்சி அல்ல. அனுபவம்”, என்று இளக வைக்க முயற்சித்தேன். இரண்டு மணி நேரம் கழித்து படப்பிடிப்பு முடிந்ததும் ”ரொம்ப தேங்ஸ். பயந்துகிட்டே வந்தேன். ஆனா சூப்பரா பண்ட்டீங்க” என்றார். அதைச் சொல்லும்போது அவரும் அவருடைய தோளில் இருந்த குழந்தையும் ஜெம்ஸ் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். அவர் காதலித்து மணந்த மனைவி அதனை இரசித்துக்கொண்டிருந்தார். உடனிருந்த நண்பர்களும், சகோதரர்களும், பெற்றோர்களும் அப்போதுதான் முதல்முறையாக பார்ப்பது போல மலர்ச்சியாக இன்னமும் பேசிக்கொண்டே இருந்தார்கள். குழந்தை தன் மழலைக்குரலில் டாட்டா என்றது. டாட்டா சொல்லும்போது கைகளில் ஒட்டியிருந்த ஜெம்ஸ் மிட்டாய்போல இனிய நினைவுகளை சுமந்து கொண்டு விடைபெற்றார் ரஞ்சித். வாழ்க ரஞ்சித்தும் அவர் குடும்பத்தினரும். மனம் திரும்புதே (6/12/2014) #manamthirumbuthey #puthuyugamtv ரஞ்சித்தின் பிறந்தநாளில் இந்நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி!