சினிமா தொடர்பாக டெக்ஸ்ட் புக் எழுதும் பணி. தகவல் திரட்டுக்காக பல புத்தகங்களை வாசிக்கிறேன். அதில் நம் ஓவியர் ஜீவா எழுதிய தேசிய விருது பெற்ற திரைச்சீலை புத்தகத்தை கடந்த ஒரு வாரமாக திரும்பத்திரும்ப வாசிக்கிறேன். தனிக்காரணம் ஏதுமில்லை. தினமும் ஏதோ ஒரு பக்கத்தை திறந்து அதிலிருந்து வாசிக்கிறேன். எந்தப்பக்கத்தை திறந்தாலும் தமிழ்சினிமாவின் அரை நூற்றாண்டு வரலாறு துளித்துளியாக வெளிப்பட்டு எனக்குள் இறங்கிக் கொண்டே இருக்கிறது.
தமிழ்சினிமாவின் (தட்டி, பிட் நோட்டீஸ், போஸ்டர், கட்அவுட், மோஷன் போஸ்டர், டீசர், டிரையலர் உள்ளிட்ட) விளம்பர உத்திகளை டாக்குமெண்டரியாக பதிவு செய்யலாம் என ஒரு யோசனை இருந்தது. முதல் செயலாக ஜீவாவைத்தான் சந்தித்தேன். அவருடைய மிகப்பிரபலமான சிறிய அலுவலகத்தில் நோட்டுப்புத்தகத்தில் எடுத்த குறிப்புகள் அப்படியே இருக்கின்றன. கொரோனாவின் திடீர் வருகையால் அந்த டாகுமெண்டரியை அப்படியே நிறுத்திவிட்டேன். ஜீவாவின் திரைச்சீலையை வாசிக்கும்போதெல்லாம், டாகுமெண்டரியை எப்படியாவது முடித்துவிடலாமே என்கிற எண்ணம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
#யாதெனக்கேட்டேன் ரிலீசாகும்போது ”தமிழ்சினிமாவில் விளம்பர உத்திகள்” ஆவணப்படத்தின் முதல்கட்டப் பணிகளையாவது நிறைவு செய்ய ஆசை.
ஆவணங்களாக்கும் முயற்சிகளைப் பொறுத்தவரை கடற்கரய் எனக்கு எப்போதுமே உந்து சக்தி. எடுத்தால் முடித்துவிடுவார். அவருடைய பணிகள் என்னை அசர வைக்கின்றன. இன்று ஹிந்துவில் அவருடைய ”மணிக்கொடி சினிமா” பற்றிய புத்தகம் பற்றி வெளியாகியிருக்கிறது. அதை வாசித்ததும் வேகம் கூடியிருக்கிறது. எனவே இன்றே ஆவணப்பட வேலை துவங்குகிறது.
சியர்ஸ் மக்காஸ்! உற்சாகமான வணக்கம்!