Log in

Register



Palasa  1978 இந்த படமானது தெலுங்கில் 2020 ல் வந்த 40 வருட கதையாகும். ஒரு கிராமத்தில் சாதி வெறிப் பிடித்தவர்கள் கீழ் சாதி மக்களை அசிங்கப்படுத்துவதும், இழிவு செய்வதும், தீண்டாமை செய்வது,  ஏளானம் செய்வதுமே அவரவது தலையாய வேலையாகும்.  
 
பள்ளி பருவத்தில் இருந்த கதாநாயகனுக்கு சாதி வெறிப்பிடித்தவர்கள் மீது மிகுந்த கோபம் இருந்தது. அவன் எப்படி வன்மதோடு கொலை செய்ய ஆரம்பித்து போலீசாரால் தேடப்படும் குற்றவாளி ஆனான் என்பதே இந்த நாற்பது வருட கதை. 
 
கதையின் திருப்பமே, ஒரு பெண்ணை திருமணம் செய்ய, கல்லை தூக்கி பின்னல போடுவது மாதிரி.. ஒரு ஆம்பளையா முன்னாடி வந்து நிக்கவே அந்த தகுதி தேவைப்படுகிறது. பாகுபலி மாதிரி கல்லை தூக்கி தன்னை தானே நிருபித்துக்கொண்டு, அருவாளை எடுத்து சூரை யாட ஆரம்பிப்பான் கதாநாயகன்.
 
தமிழ் படமா வேங்கையும், அசுரனையும் எடுத்துக்கொள்ளலாம். "கோபக்காரன் அருவா எடுத்ததான்டா தப்பு, காவக்காரன் அருவா எடுத்த தப்புல்லடா"  என்று ஒரு வசனம் நிகழ்காலத்தில் வேங்கை திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும், அதே போல "மேற்சாதியிரின் கொடுமைக்கு காவு வாங்கும் கடவுள் போல அசுர தனமாக வெறிக்கொண்ட கோபத்தோடு இறந்தகாலத்தில் அனைவரையும் வெட்டி சாய்பார்" நடிகர் தனுஷ். 
 
கிட்டதட்ட இந்த இரண்டு விஷயத்துக்காக அருவாள் எடுத்து வெட்ட ஆரம்பிப்பார்  palasa  நடிகர். அந்த மேல்சாதி வெறிப்பிடித்தவர்களை வெட்டி சாய்த்து விடுவார். பின்னர் தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்கு அருவாள் எடுப்பார்.  ஊரில் பலரும் பயப்படக்கூடிய ஒருவராக மாறி விடுவார்கள். காலங்கள் போக போக அருவாளுக்கு, அரசியல் சாயப்பூசப்பட்டு அடியாளு போல அரசியல்வாதிகளுக்கு அடிபணிச்சு அவர்களுக்கு எதிரானவர்களை வெட்டி சாய்பான். 
 
எல்லாத்தையும் விட்டுட்டு குடும்பம், குழந்தையென்று எதார்த்த வாழ்க்கை வாழ முற்படும்போது, எதிரிகள் சும்மா விடமாட்டார்கள். பின்னர், அணிநயத்தை தட்டிக்கேட்கும் ஒருவரான தலை மறையில் எதிரிகளை வெட்டி சாய்த்து, தலையை மூட்டை கட்டி போலீஸ் ஸ்டேஷனிலே கொண்டு வந்து கொடுப்பான். இதற்கு பின்னர் தேடப்படும் குற்றவாளியாக மாறி விடுவான். 
 
வெறிக்கொண்டு போலீஸ்சாரால் கண்டுப்பிடிக்கப்பட்டாலும், அவன் இப்படியான சோககதையை கேட்டு, போலீஸ் விட்டுட்டு போயி விடுவார். தலைமறைவாக அவரது வேட்டை நடந்துக்கொண்டே இருந்தது. ஒரு பக்கம் 2018 வரை போலீஸ் இந்த கேஸ்சை முடிக்க முடியாமல் தேடிக்கொண்டே இருப்பார்கள். 
 
ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு விதமான அடிமைகள் தேவைப்படுக்கின்றனர் என்பது நீசத்தமான உண்மை. அதுபோக..படத்தில் அழகான சிறு வயது காதல் ஒன்று உருவாகுகிறது. காலகாலமாக தெலுங்கு படத்தில் இருக்ககூடிய வெறியும் தெளிவாக இருக்கிறது. பொறுமையின் உச்சத்தில் பார்க்கிற அளவு எடிட்டிங் செய்யப்பட்டுள்ளது. 
 
 
எப்படி, சிறு வயதியிலே ஒரு கொலைக்காரன் உருவாகுகிறான். வன்மம் என்பது எங்களை வாழ விடமாட்டேங்கறாங்களே என்ற அதீத கோபத்தின் கடைசி நிலை என்பதை பச்சையாக சொல்லக்கூடிய படம். 
 
-கீதாபாண்டியன் #geethapandian
 
 
Published in Movies this week
இந்தப்படத்தை பார்க்க வேண்டாம். ஆனால் இந்த படத்தில் வரும் நிகழ்வுகளை நேரடியாக சந்திப்பிங்க. 
 
எட்டுத்திக்கும் பற...
 
வறுமை, அடையாளத்தை இழத்தல், மதம் மாற்று திருமணம், ஆணவக்கொலை, கொள்கை ரீதியாக போராடுபவர்கள், சாதி அரசியல், மானத்தை இழந்து சம்பாதிப்பவர்கள் இதுப்போன்ற எல்லா பிரச்சனையும் ஒன்று திரட்டி எடுக்கப்பட்ட படம் "எட்டுத்திக்கும் பற". 
 
சராசரியான மக்களாகியவர்கள், அவகளது அன்றாட வாழ்வில் இதுப்போல பல வித பிரச்சனைகளை கடந்துச்செல்கிறோம். இந்த பிரச்சனைக்குள்ளும் மாட்டிக்கொண்டுதான் இருக்கோம். ஆனால் அதனை சரிச்செய்ய முடியல என்பது தான் நிசத்தமான உண்மை. 
 
மகனுக்கு உடல்நிலை சரியில்ல தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பார்க்க பணமில்லை. முற்றிலும் வறுமை.
சொந்த நிலத்தையும் அடையாளத்தையும் இழந்து தங்குவதற்கு வீடு இல்லாமல் "Care of platform" வாழும் அடிதட்டு மக்களின் நிலை. 
முதியோர் திருமணம், தனது வாழ்க்கை துணை இறந்து பேச்சுத்துணைக்குக்கூட ஆள் இல்லாமல் தவிக்கும் வெவ்வேறு மதத்தினரின் திருமணம்
 
ஒரே ஊர், வெவ்வேறு சாதியினரின் காதல். சாதிக்காரன் உடைய பொழப்பு. ஆணவக்கொலை.
கொள்கை ரீதியாக, அணிநயத்திற்கு எதிராக போராடுபவர்களின் அர்த்தமற்ற சாவு. 
அரசியல்வாதிகளின் சாதி அரசியல் எல்லா ஆளுங்களையும் கைக்குள் போட்டுக்கொண்டு, தன் சாதிக்கொரு இழுக்கு வந்தால் விடாமல் இரத்தத்தை சுவைக்கும் அரசியல்
மானத்தை பறிக்கொடுத்து ஆடிபாடி வயிற்றை கழுவும் பெண்கள். 
 
வன்மம், வஞ்சம், லஞ்சம், கொலை, கௌவரம், கற்பழிப்பு, சாதி,மத பாகுபாடு
..................................................... ........................................................ ........................................................................ .......................................................... ................................................... ..................................
 
இது ஒரு தொடர்கதை...நாட்டின் சாபகேடு...
 
இவைகள் இல்லாத ஒரு நல்ல சமூகம் வளர்வது தான் ஒரு விடியல் இல்லவிடில் பிணங்கள் மயமாகும் சமூகம்
 
-கீதாபாண்டியன்
Published in Movies this week