Log in

Register



 
மதுர ஜில்லா மச்சான் தாண்டி என் ஜாதகத்தில் குரு உச்சம் தாண்டி!!!
 
இந்த வரியின் போது தனுஷ், நீல ஆடையும் தலைப்பாவும் போட்டு வெளியூர் ஆள் பூம்பூம் மாட்டுக்காரன் மாதிரி இருக்கார். மேலும் 'என் நேரம் நல்லாயிருக்கு உன்ன நான் தூக்கிட்டு போயிட்டுவேன்' அர்த்தம் போல.
 
 முதல் பத்தியில் இவரு இப்படி கேட்டு அந்த பொண்ணோட தோப்பில வர்ணிக்காரு அதுக்கு அந்த பொன்னு 'ஏய் நான் சிட்டு தான் ஆனால்  நான் தமிழ் பொன்னு நீ என் பக்கம் வந்தா நான் உன்ன வெட்டுப்போடுவேனு' சொல்லுது. 
 
அடுத்த பத்தியில் சாதாரணமான பையன் மாதிரியான உடையில் தனுஷ் வந்து, 'என்ன உடல் மா இது. நான் பறந்து வந்து நீ குளிக்கறத பார்ப்பேன்' மீண்டும் வர்ணிக்காரு. திரும்பவும் 'நீ சொல்லறமாதிரி நடந்தா உனக்கு கண்ணே இல்லாம பன்னிடுவேன்' சொல்லுது அந்த பொன்னு. அந்த பத்தி முழுவதும் இவன் தன் காம உணர்வை வார்த்தையாக வெளிபடுத்த அவளோ, திட்டிட்டே இருக்கறாள். கோபம் அதிகமாகி 'என்னை கொலைகாரி ஆகாதனு' சொல்லுகிறாள். 
 
மூன்றாவது பத்தியில் வயசான ஒருத்தன்  அதிலும் பணக்காரன் மாதிரி இருக்கான். 'நீ காலியான கழுத்தோட வா நான் தாலியோட வரேன்' சொல்வதை கேட்டு, 'தாலி கட்டுனா நான் தாராளமா என்னையே தரேன்' சொல்கிறாள். மேலும் இப்போ அந்த பணக்கார கெட்டப் ல இருக்கற வயசான ஆள் வர்ணிக்கறத கேட்டு, 'என்னோட வயச வெடியாகி கொளுத்தாத சும்மா பேசிட்டே இருக்காதனு சொல்கிறாள்' அதோட உன்ன கல்யாணம் பண்ணிட்டு 'ஆளப்போறேன்' அந்த வார்த்தைக்கு அந்த சின்ன பொன்னு மயங்கி 'இப்ப முத்தம் மட்டும் வாங்கிக்கோ பின்னால மொத்தமா தரேன்' சொல்லி வளையில விழுந்திடறாள். 
 
வரிக்கு ஏற்றமாதிரி உடை மற்றும் கெட்பட் எப்படி தீர்மானிக்கறாங்க. பாடலின் நோக்கம், வரிகள், உடை மற்றும் உடைக்கேற்ற கெட்பட், நடனம், பாடலுக்கான செட், எடிட்டிங் இதுமாதிரி 7 துறை சார்ந்தவர்கள் இதில் இயங்கினால்தான் ஒரு பாடல் பிறக்கிறது. 
 
 
-GEETHA PANDIAN
Published in Classic Movies
 
 
அந்திமழை பொழிகிறது. ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது. என் காதலிலே நான் உன்னைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பதால் பொழிகிற மழை துளியில் கூட உன் முகம் தெரிகிறது. நீ எப்பேர்ப்பட்டவள் தெரியுமா, உயிரோடு இருக்கும்போது நாம் காணாத அந்த இந்திரத்தோட்டத்தில் விளைகிற விலை உயர்ந்த முந்திரி மாதிரி உன் குணமானவள். 
மன்மத நாட்டிற்கு மந்திரியே. அந்த இறைவனுக்கு நீ நெருக்கமானவள் போல,  உன்னை மட்டும் பாத்து பாத்து செதுக்கிருக்கான். 
 
காதலி காதலனைப் பார்த்து, தேன் போன்ற நீ தனிமையென்ற வண்டுக்கடியில் சிக்கிருப்பதை பார்த்து உன்னை மீட்டுயெடுக்க வந்த பெண்தான் நான். உன் நெஞ்சுக்குள் எரிகிற தீயைப்போன்ற சோகத்தை மோகம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறாய். தனிமை எனும் தாக்கத்தில் இருந்தாய் அதிலிருந்து உன்னை வெளியே கூட்டிக்கொண்டு வரப்
போகிறேன். 
 
காதலன் மனமோ! உன் கரம் பிடித்த நானோ,  இளமையில் எத்தனை நாள் தனிமையில் வாழ்வது. எனக்கு எதைப்பார்த்தாலும் உன் நினைவாகவே உள்ளது. உடல் முழுவதும் மோகம் எனும் தாக்கத்தில் இருக்கிறேன். அந்த தாகத்தை தீர்க்க உன்னால தான் முடியும். இப்போது எனது கண்களில் முட்களாக இருக்கிறது. தண்ணிக்குள்ள இருக்கும்போது கூட வியர்வை சொட்டுகிறது. 
 
காதலி! கொஞ்சம் பொறு அதற்கும் காலம் வரும். உன் தனிமையில் காயத்திற்கு மருந்தாகவும் உன் மோகத்திற்கு தீர்வாகவும் வருகிறேன். உன் மன்மத அம்பிற்கு சந்தனத்தை புசி ஆறுதல் அளிக்கிறேன். என்று காதலி காதலனுடைய ஆர்வ வார்த்தைக்கு பதில் அளிகிறாள். 
 
இந்த பாடலில் பார்வையற்ற காதலன், காதலி மேல் இருக்கும் காதலில் எப்படி வர்ணித்து தனது மன நெருக்கடியை வெளிப்படுத்துகிறான். அதற்கு காதலி கண் தெரியாத காதலுக்கு கண்ணுக்கு கண்ணாக வாழ ஆசைப்பட்டு எப்படி பதில் அளிக்கிறாள் எனும் உணர்வே இந்த பாடல். இதை நீங்க உணர்கிறேங்களா? 
 
-GEETHA PANDIAN
Published in Classic Movies