Log in

Register



Items filtered by date: Wednesday, 08 July 2020
போலீஸ் மகன் சமூக விரோதி தந்தையை கொல்லும் கதை. இயக்குனர் பாக்கியராஜ் கதை வசனம் எழுதி எடுக்கப்பட்ட கதை. கதாபாத்திரத்தின் வடிவமைப்பைப் பொறுத்தவரை அதித அல்லது திணிக்கப்பட்டவையாக இருந்தது. தந்தை கமலுடைய கதாபாத்திரம் ஆங்கிலம் தெரியாதனாலே வெகுளியாக காட்டப்பட்டார். கண்மூடிதனமாக ஒரு கட்சியின் தொண்டராக இருக்கிறார். 
 
அநியாயத்திற்கு  ராதாவை கற்பழிக்கும் காட்சியில் அரசியலின் ஆளுமையை வெளிப்படையாக காட்டியிருப்பர். கணவன் கமலுடைய பரிதாபகரமான நிலையை பார்ப்பர்கள் மனதில் ஆணி அடிச்சமாதிரி காட்சியை வடிவமைத்திருப்பர். கமல் நம்பும் போலீஸ் அவனை ஏமாற்றி, கண் முன்னாடியே அதாரத்தை கலத்திருப்பான். அரசியல் வாதிக்கு டாக்டர் உடந்தை என்பது கைதியின் டைரி படத்தின் இந்த காட்சியில் வந்த சம்பவங்கள் (இன்றளவு பேசப்படும் சாத்தான்குளம் பிரச்சனையை கண் முன்னே காட்டியவாறு தோன்னியது. அடித்து உதைத்த போலீஸ்காரர்கள், போலி சான்றிதழ் தந்த மருத்துவர்கள், மேலும் உள்ளார்ந்த அரசியல்வாதிகள் மற்றும் பலருடைய அராஜகத்தை கண் கூட பார்த்த மாதிரி இருந்தது) 
 
ரேவதி கதாபாத்திரம் விளையாட்டாகவும் எளிமையாக ஏமாற்றி விடலாம் என்ற வகையிலும் காட்டப்பட்டது. இயல்பான விளையாட்டுப்பொன்னுடைய காதல், கோபம், அன்பு இவர் வந்த இடங்கள் ஸ்டெலாகவும் அழகாகவும் இருந்தது. தந்தை கமல் மற்றும் மகன் கமல் என்று இருவருடமும் இவர் நடிக்கும்போது வித்தியாசம் காட்டியிருப்பார். ரேவதிக்கு தனிதன்மை இருந்தாலும் துணையாக ஒரு கதாபாத்திரம் வரனுமே என்று வைத்தது மாதிரி இருந்தது. மகன் கமலின் வளர்ப்பு தந்தையுடன் 20 வருடம் வளர்த்திய பாசத்தை இன்னும் வெளிப்படுத்திருக்கலாம். 
 
ஜெயிலிலிருந்து வந்தவருக்கு துப்பாக்கி மற்றும் கொலை செய்வதற்கு தேவையான உபகரங்கள் எவ்வாறு கிடைத்தது என்ற விளக்கத்தை படத்தில் காட்டவே இல்லை. 
 
எனது தாய் கற்பழித்தார்கள் அதனாலே தற்கொலை செய்துக்கொண்டாள். தந்தை ஜெயிலுக்கு சென்று வந்த கைதி என்ற எமோஸ்னல் மகன் கமலிடம் இல்லாதது போற் இன்றைய பார்வையாளருக்கு தெரிகிறது. ஆங்கிலம் பேச தெரிந்த தைரியசாலியாக தந்தை கமலை படத்தின் இறுதியில் காட்டியிருப்பர். இந்த ஆங்கிலத்தை வைத்து கதாபாத்திர வடிவமைப்பின் வித்தியாசம் வர்க்கப்பிரிவினை போற் தெரிகிறது. மேலும் தந்தை கமலின் இளமை மற்றும் முழுமை, மகன் கமலின் போலீஸ் தனம் அனைத்தும் தலைமுடி, மீசையில் வித்தியாசத்தைக்காட்டிருப்பர். 
 
கடைசி ஐந்து நிமிடம் யார் யாரை கொல்லுவார் என்ற பதட்டத்தையும் எதிர்ப்பார்ப்பையும் உண்டு பண்ணியிருப்பர். எனவே மொத்தத்தில் கைதியின் டைரியில் சில எழுத்து பிழையுடன் இருந்தது என்று தெரிகிறது. 
 
-கீதாபாண்டியன்
Published in Classic Movies