ஒரு சூட்டிங் னா சும்மா இல்ல. எவ்வளவு பேரோட உழைப்பு. எவ்வளவு பேரோட உருவாக்கம். சிவாஜி மாபெரும் நடிகர் ஆனால் கேம்ராவோட சேர்த்து மற்றவர்கள் மற்றும் பிற துறைகளைச் சார்ந்தவர்கள் இல்லையென்றால் சிவாஜி மட்டும் இல்லை எந்த நடிகராக இருந்தாலும் அவர்கள்.......?
பொதுவாகவே சில நேயர்கள் எதாவது சூட்டிங்க நேரில் பார்ப்பவர்கள் சொல்வார்கள். "சூட்டிங் நேருல பாக்க நல்லாவே இருக்காது. ரொம்ப சத்தமா கையாமொய்யேனு கையாமொய்யேனு இருக்குமென்று" ஆனால் ஒரு வகுப்பில் குறைந்தது 45 பேர ஒரு லீடர் அமைதிப்படுத்துவதை காட்டினும் பெரிய வேலை இத்தனை துறைகளையும் ஒன்று திரட்டி சூட்டிங் எடுத்து அதற்கு பின்னாடி பல வேலைகள் செய்து படத்த வெளியிடறது.
ஆனால் சினிமா என்னதான் இத்தனை துறைச்சார்ந்தவர்கள் இருந்தால்தான் இயங்கும் என்றாலும் இதில் பலர் சினிமாவை கனவு லட்சியமாகவும் சிலர் இதுவும் ஒரு வேலை என்று அலட்சியமாகவும் எடுத்துட்டு செயல்படுகின்றனர். அது உண்மைதானே...
சினிமா தோன்றிய காலத்தில் இருந்து இவ்வாறு அமர்களமாகதான் திரைப்படம் சூட்டிங் எடுத்துட்டு இருந்தனர். காலப்போக்கில் ஐந்து நடிகரும் மூன்று தொழிற்நுட்ப கலைஞரும் இருந்தால் போதும்னு குறும்படம் என்று ஒன்று வர ஆரம்பத்தது. அது இளைஞர்களின் திறமையை மற்றவர்களுக்கு புரிய வைக்கும்படி அமைந்தது. இப்போ #லாக்டவுன் நேரத்துல சினிமால சாதித்தவர்கள் அங்க அங்க அவங்க வீட்டுல இருந்தே ஒருங்கிணைத்து நடித்து குறும்படமா போடறாங்க. ஏற்கனவே எடுக்கப்பட்ட திரைப்படம் எல்லாம் OTT வெளியாகி Middle மற்றும் High தரப்பினருக்கும் சினிமாவை நேசிப்பவர்களுக்கும் சுவாசிப்பவர்களுக்கும் மட்டும் சென்று சேர்கிறது. மற்ற மக்களுக்கு அதை பற்றிய விழிப்புணர்வே இல்லை. என்பதும் உண்மைதானே....
சூட்டிங் உடைய தன்மையே மாறிக்கொண்டு வருகிறது இது சினிமாவின் புதிய அத்தியாயம்மா? இல்ல அழிவா?
தொகுப்பாளர்கள் சீரியலையோ அல்லது திரைப்படத்திலையோ நடிகர் ஆவதும் நடிகை ஆவதும் கடந்த சில காலமாக டிரென்டிங்கா நடந்திட்டு இருக்கு. அவங்க நடிப்புலகத்திற்கு வந்து ஜெய்ப்பதும் தோற்பதும் அவர் அவர் திறமையைப்பொருத்தது. நடிகர் மற்றும் நடிகையை தேர்ந்தெடுப்பதில் பல அரசியல்கள் இருந்தாலும் வாய்ப்புகளும் அளிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அது எல்லாருக்கும் கிடைப்பதில்லை.
அந்த வகையில் வெள்ளித்திரையில் வாய்ப்புக் கிடைக்காத பல நளிவுடைந்தவர்கள் சின்னத்திரையில் நடிக்க வருக்கிறார்கள். சின்னத்திரையில் மக்கள் மனம் கவர்ந்த சிலர் வெள்ளித்திரையில் மின்னவும் செய்கிறார்கள். அந்த வகையில் சிவகார்த்திகேயன் போல பல வருடமாக விஜய் டிவி Product யாக இருக்கக்கூடிய ரக்ஷன் முன்னால ராஜ் டிவி, கலைஞர் டிவியினு பல இடங்கள தன் முகத்த காட்டிருந்தாலும் விஜய் டிவி தான் ஒரு நல்ல அடையாளத்தக்கொடுத்தது.
கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி, மேலும் பல நிகழ்ச்சிகள் கடந்த 5வருடமாக செய்ற இவரு இப்ப திரைப்படங்களையும் நடிக்கறாரு. இவருதானே என்று அடையாளப்படுத்தும் வகையில் அந்த படம் அமைந்தது. கிட்டத்தட்ட முதல் படத்துலையே நல்ல நகைச்சுவைக்கலந்த படம் முழுவதும் பயணம் செய்யக்கூடிய செகண்டூ ஹீரோவாக கலக்கிருந்தார்.
"விஜய் டிவி Product னா சும்மாவா" தொடர்ந்து கலக்கும் ரக்ஷன் இன்னும் பல பரிமாணங்களைப் பாக்கனும் என்று நாம் வாழ்த்துவோம்.
"வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம்" என்று சொல்லற மாதிரி, எட்டு வருடம் எட்டிய உயரம். ஆறு முதல் அறுபது வரை உள்ள அனைத்து தரப்பினர்களின் மனத்தில் பதிந்த "நம்ப வீட்டுப்பிள்ளை".
"மெரினா"வில் சுற்றி திரிந்த நம் "மனம் கொத்தி பறவை" சிவகார்த்திகேயன். "கேடி பில்லா கில்லாடி ரங்கா"வாக விஜய் டிவியில் களம் கண்டவர். எத்தனை கிண்டல் கேலிகள் வந்தாலும் வாழ்வில் "எதிர்நீச்சல்" போட்டுக்கொண்டு, "வருத்தப்படாத வாலிபர் சங்க"த்தில் சினிமாவில் வாய்ப்பு தேடுபவர்களுக்கு முன் உதாரண தலைவராக திகழ்ந்தவர்.
ஊரில் உள்ள மக்கள்கள் இவர் மீது வைத்த அன்பை "காக்கி சட்டை"யாகப் போட்டுக் கொண்டு, கண்ணுக்கு தெரியாத பல எதிரிகளிடமிருந்து "மான் கராத்தே" அடித்து, உணர்வுப்பூர்வமா ரஜினி ரசிகனாக இருந்து "ரஜினி முருகன்" நடித்து "ரெமோ" என்ற ரெஜினா மோத்வாணி பெண் போல வாழ்ந்து 90கிட்ஸ் 2கே கிட்ஸ் கனவு கன்னியாக வலம் வந்து, நல்லா "வேலைக்காரன்" என்ற பெயரைப்பெற்றார். தமிழ்நாட்டின் "மிஸ்டர் லோக்கல"ஆக இருந்து குறைந்த காலத்தில் சினிமாவின் "சீமராஜா" வாக மாற பல "கனா"க்கள் கண்டு இன்று மக்களின் "ஹீரோ"வாக மாறியிருக்கிறார்.
மேலும் அவர் அவருக்கே "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா" என்று பல வெற்றி தோல்விகளை கண்டும் ஒரு வீரனாக களத்தில் நிற்கிறார். இந்த முன்னேற்றமும் மக்களின் அன்பும், பல நடிகர்களுக்கு கிடைக்காத ஒன்று. 25 வருடமாவது போராடினால் தான் அந்த இடம் (மக்களின் மனம், மார்கெட் பீஸ், உயர்ந்த சம்பளம், விருதுகள் ) கிடைக்கும்.
ஆனால் 12 வருடத்தில் இவருக்கு கிடைத்த அன்பு(அண்ணன் தம்பி தங்கை, பக்கத்து வீட்டு பையன்), விருதுகள், பல திறமைசாலிகளின் முன் உதாரணம், அனுபவ மோட்டிவேஷன் போன்ற அனைத்திற்கும் சேர்த்து அவருக்கு "டாக்டர்" பட்டத்தையே கொடுக்கலாம்.
மேலும் பல படங்களை திரையுலகிற்கு தர உள்ளார் சிவகார்த்திகேயன். இந்த 2020 க்கு பிறகு "இவர் அடுத்த சூப்பர் ஸ்டார்" தான். எத்தனை வெற்றி தோல்விகள் வந்தாலும் "3" ஜென்மங்கள் ஆனாலும் "நான் வீழ்வேன்று நினைத்தாயோ" என்று கண்டிப்பாக எழுந்து வருவார் நம்ப வீட்டுப்பிள்ளை.
இவரைப்பொறுத்தவரை
உள்ளத்து தூய்மையே முதல் முதலீடு, இல்லத்து அமைதியே இரண்டாவது முதலீடு, மக்களை பொழுதுப்போக்கு செய்யும் தருணங்கள் மூன்றாவது முதலீடு, நல்ல விஷயத்தை விதைக்கனும் என்னும் எண்ணமும், திட்டமுடுதலும் நான்காவது முதலீடு, திறமைசாலிகளை வளர்ப்பது ஐந்தாவது முதலீடு, Negativity இல்லாமல் இருப்பது ஆறாவது முதலீடு, கைதட்டலை கர்வமாக எடுக்காமை ஏழாவது முதலீடு, தன்னுடைய திறமையை நம்பி பல விஷயங்கள கற்றுக்கொண்டு செயல்படுவது எட்டாவது முதலீடு, பழைய விஷயத்தை மறகாமல் இருப்பதும், பெரியோரையும் மக்களையும் நட்பையும் மதிப்பதும் ஒன்பதாவது முதலீடு.
இத்தனை முதலீடுகள் போட்டுதான் இன்று சிவகார்த்திகேயன்.
இவர் நல்ல தயாரிப்பாளர், சிறந்த நடிகர், தேர்ந்த பாடகர், துள்ளிய பாடலாசிரியர், வெண்ணிற மனம் கொண்ட நகைச்சுவை நடிகர், இதை எல்லாத்தையும் விட
ஹீரோ என்று சொல்லும் பாடல் மட்டுமே முழு கதையில் Hero vizhum காட்டுகிறது
சமீபத்துல நடிகர் அர்ஜீன் மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான Hero திரைப்படம் மக்கள் மத்தியில் பெருமளவில் சென்று சேரவில்லை. மையக்கருவை குறைச்சொல்ல முடியாது. ஆனால் அந்த மையத்தைச் சொல்ல வந்த விதம் ஏமாற்றத்தை அளித்தது.
குழந்தைகள் இடத்தில் நல்லதையும் கெட்டதையும் சேர்த்து இறக்கினால் அதிகம் சென்று சேர்வது கெட்டது தான். உதாரணத்திற்கு, சக்தி எனும் 12 வயது பையனுக்கு சக்திமான் பிடித்தது. அவன் தன்னையும் ஒரு ஹீரோவாக நினைச்சான். ஆனால் அதற்கு அவன் செய்த முட்டாள் தனம், மாட்டியிலிருந்து பறக்க முயன்று கீழே விழுந்தது. ஒரு அடிப்படை சிந்தனை கூட அந்த பதிரெண்டு வயது பையனுக்கு இல்லாமல் போன மாதிரி இருக்கு.
அடுத்து, அப்பாவிற்கு உடல்நலம் சரியில்ல. காப்பாற்றுவது கஷ்டம். சான்றிதழை இந்த மாதிரி மாற்றி கொடுத்தால் பணம் கிடைக்கும் என்று இதைப் பற்றி தெரியாத பலருக்கு தெரியப்படுக்கின்றனர்.
என்னதான் வசதியில்லாமல் இருந்தாலும் உதவ முன்வரும் அளவிற்கு ஒரு உறவு கூடவா இல்லை.
ஒரு வேளை பெயர் மாற்றி சான்றிதழ் விற்கப்பட்டது. ஆனால் அந்த மார்க் சீட்டில் போட்டோ போடாமலா? அரசாங்கம் ஒரு மாணவனுக்கு மார்க் சீட் கொடுத்தது. இந்த காட்சிக்கு முன்பு தான் மார்க் வந்த விவரம் தெரிந்து Result பார்க்க சென்றனர். அடுத்த காட்சியிலே சான்றிதழில் பெயர் மாற்றம் இது நம்புவதாக இல்லை. ஏன் என்றால் Result வந்து மார்க் சீட் வர ஒரு மாதமாவது ஆகும்.
சான்றிதழ் விற்று வந்த பணத்தில், அப்பாவை காப்பாற்றியது, எதோ பரவால. மாவட்ட அளவில் 12 ம் வகுப்பில் மார்க் எடுத்தவனை டிவி, நீயூஸ் பேப்பர் எதுவும் எப்படி கவனிக்காமல் போனது. கஷ்டப்பட்டு படிச்சு, கஷ்டப்பட்டு எடுத்த மார்க் இதற்கெல்லாம் ஒரு அங்கீகாரம் இல்லாமல் போன வருத்தம் இருந்தப்போதிலும் அதே வேலையே செய்யவும் இறங்கிட்டான் சக்தி அது ஒரு தவறான முன் உதாரணம்.
மதி எனும் பெண் aeronautical engineering படிக்க ஆசை படுகிறாள். ஆசைகள் நல்ல விஷயம் தான். மதிப்பெண்ணுக்கும் திறமைக்கும் சமந்தம் இல்லதான். ஆனால் +2ல 1200 க்கு 256 மதிப்பெண் மட்டுமே எடுத்தப் பெண்ணுக்கு aeronautical engineering படிப்பதற்கு eligibility யே கிடையாது. அப்பறம் எப்படி சீட் கிடைக்கும். இதுவே மிக பெரிய லாஜிக் மிஸ்கேட்.
நம்ப ஹீரோக்கு டாஸ்கே பணம் தராம
நேர்மையாக சீட்டு வாங்கனும் என்பதுதான், அதற்கு முயற்சிக்கும்போது, வர பிரச்சனையில்...
கோர்ட்டில் (மைனர்) 17 வயது கூட நிரம்பாத 12 ம் வகுப்பு படித்த பெண்ணை நிறுத்தி வைச்சி கல்லூரி மாணவரை கேக்க வேண்டி கேள்விகளை கேட்பது முட்டாள்தனமா இருக்கு.
செய்முறை என்பது ஒன்றே, அதனை பார்த்து கூட மற்றொன்று அதே மாதிரி செய்வது அறிவு திருட்டு என்று அர்த்தம் ஆகாது. அப்படியே ஒரு செய்முறையில் செய்தாலும் அதற்கும் இதற்கும் உள்ள வேறுப்பாட்டை கூட அறிவியலில் அனுமதிக்கலாம். இன்று ஒன்றை விட ஒன்று அதிசியம் என்றும், புதுமை என்றும், சொல்லும் அத்தனை ஆராய்ச்சிக்குமே வித்தியாசம் ஒரு சதவீதம் தான். இதனை Researcher Perspective என்றும் சொல்லலாம்.
ஏன்யென்றால் கல்லூரி படிப்பு இல்லாம Basic Knowledge வைச்சும், இதற்கு முன்பு யாராவது இதே மாதிரி பண்ணிருக்காங்களானு தெரியாம இருப்பவர்கள், ஒரு பொருளை உருவாக்குவதுதான் நேர்மையான முறை. இந்த மாதிரி காட்சி பொருந்தா வண்ணம் உள்ளது.
அந்த பொன்னு மதியைப் பற்றிய விவரங்களை போனில் பேசும்போது வண்டியில் பயணம் செய்துக்கொண்டியிருந்த சக்தி, கோர்ட்டிலிருந்து மதியை அழைத்துக்கொண்டு கிளம்பும்போது ஏன் ரயிலில் செல்லுமாறு காட்சி வைக்கப்பட்டது.
ஓடும் ரயிலிலிருந்து கீழ விழுகிற மாதிரி காட்சி வைப்பதுக்காவே..தற்கொலை செய்ய தூண்டும் காட்சி இது. இதனை படத்தில் வைத்தது தவறான முன் உதாரணம். அந்த பெண் மதி ஸ்டேஷ்னுக்கும் கோர்ட்டுக்கும் அழையும்போது அவளுடைய பெற்றோருக்கு ஏன் தகவல் சொல்லல. கோட்டில் பெற்றோரை பற்றி ஏன் விசாரிக்கல.
ஒரு சின்ன பொண்ணுக்கு எதிராக பேசும் வக்கில், அடிப்பட்டு சாகும் நிலைமையில் வந்த நோயாளியை திரும்பி அனுப்பிய தனியார் மருத்துவமனை, பொறுப்பில்லாம பேசிய அரசாங்க ஆம்பன்ஸ் டிரைவர், கோர்ட்டில் சக்தி, இன்பராஜ் கைதி செய்யனும் என்று சொன்ன பிறகும் அதுக்கு உண்டான பிற நடவடிக்கை எடுக்காமல் போன போலீஸ். மாஸ்டர் என்ற பெயரில் மாஸ்க் போட்ட திருடனைப் பற்றிய விவரத்துடன் இரண்டாம் கட்டத்திற்கு கதை வேற மாதிரி நகருது.
உண்மையான இளமை ஏழை எளிய விஞ்ஞானிகளை Corporate system வளர விட மாட்டைங்கது என்று கொஞ்சம் கற்பனை நயத்துடன், Education system சரியில்ல, அரசியல்வாதிகள் corporate க்குதான் சப்போர்ட் பண்ணறாங்க என்று குறைச்சொல்லுமாறு காட்சிகள் வடிவமைக்கப்பட்டது.
இளம் விஞ்ஞானிகள் நான்கு பேரை வைத்துக்கொண்டு ஒரு சூப்பர் ஹீரோவை எப்படி உருவாக்குவது என்று கற்று தருகிறது கதை களம். யாரெல்லாம் ஹீரோ என்று சொல்லும் பாடல் மட்டுமே முழு கதையில் Hero vizhum காட்டுகிறது.
கதையில் முன் பகுதியில் தவறு செய்தவரை அடித்து தட்டிக்கேக்கும் ஹீரோ, இளம் விஞ்ஞானிகளின் idea வை அழிப்பதையே வேலையாக இருப்பவனை ஹீரோ எப்படி அழிக்கறாரு.
பொது மக்கள் இடத்தில் "பெற்றோர்களே உங்க வீட்டுக்குழந்தைங்க ரப் ரோட்டு எடுத்துப்பார்ங்க அவங்க என்னவாகனும் ஆசைப்படறாங்களோ அதை செய்ங்க" சொல்லுவது கதையின் மையக்கருத்து.
இங்க இரண்டாம் கட்டத்தில் நிறையா லாஜிக் மிஸ்டேக் இருக்கு. ஹீரோ என்று ஒருவரை உருவாக்குவது லாஜிக்காவே இல்ல. எந்திரன் மாதிரியான படத்தில் எந்திரனுக்கு ஒரு தனித்துவம் இருக்கு. ஆனால் சாதாரணமான படத்தில் ஹீரோ என்று ஒரு சாதாரண மனிதனை அனைத்து வளங்களையும் வலிமையும் கொண்டவாக மாற்றுவது எதார்த்ததில் சாத்தியம் இல்ல.
அப்படி பார்த்தால் முழுக்க முழுக்க "சக்திமான்" என்ற கற்பனை கதாபாத்திரத்தை அப்படியே உதாரணமா எடுத்திருக்காங்க. ஆனால் சக்திமான் துணி மட்டும்தான் மாற்றுவாரு மீதி எல்லாமே அவங்க உடலில் உள்ள சக்தி. இந்த சக்திக்கு எல்லாமே இளம் விஞ்ஞானிகளுடைய கண்டுபிடிப்பு.
இவங்கள் பயன்படுத்தும் Technical instrument and laptop போன்ற பொருள்கள் வில்லனால் அழிய அழிய திரும்ப திரும்ப எங்கிலிருந்து கிடைக்குது. பணம் எங்கிலிருந்து வருது. அப்படி அரசாங்க கன்டைனர், ஹீரோவால காணாம போனாலும் அரசு சும்மா இருக்குமா?
தீடிரென பணமழை என்று செய்தி வெளியீடு செய்பவருக்கு அது என்ன பணம் என்று தெரியாமல் போகிடுமா? அது என்ன பணம் என்று தெரியாத செய்தியாளருக்கள் வானத்தில் இருந்து கொட்டும் பணம் எவ்வளவு இருக்கும் என்று எப்படி சொல்லறாங்க.
இதை எல்லாம் விட, செயற்கைகோள் தயார் செய்து வானில் அனுப்பவதற்கு NASA போன்ற விண்வெளி ஆராய்ச்சிக்கூடங்கள் நூற்றுக்
கணக்கான பேரை பயன்படுத்தி பல வருடங்கள் எடுக்கும் சூழ்நிலையில்,
நாலு பசங்க சேர்ந்து செயற்கோளை(satellite) ஒரு சில நாளுல அனுப்புவது எப்படி சாத்தியம் இது எதார்த்ததிற்கு எதிர்மறையான லாஜிக்.
மேலும் எல்லா சேனல் களிலும் ஒரே Live Program எப்படி சாத்தியம். மற்ற தொலைக்காட்சிகள் எப்படி அமைதியாக இருந்தது. டிவி சேனல்களில் சிறிது நேரம் சிகுனல் இல்லைனா கூட பல ஏற்பாடுகள் பறக்கும். ஆனால் இப்படியொரு நிகழ்வ பார்த்திட்டு, அவர்களும் அமைதியாக இருந்திருக்காங்க போல.
இதையெல்லாம் தாண்டி, சக்தியுடைய அப்பாவை காப்பாற்றிய பின்னாடி Climax ல மட்டும் வாராரு. நடுவுல பையன காணாம், அப்பா என்ன பண்ணுவாருனு ஒரு காட்சி கூட இல்ல. ஹீரோ படத்தின் கதாநாயகி ஒரு இரண்டு பாட்டுயோட நல்ல கேரக்டர் ரோல் பண்ணிருக்காங்க. அர்ஜீன் வந்த வரைக்கும் மாஸ்தான். நடுவுல செத்துப்போயிடாருனு நினைச்சால் திரும்ப வந்திட்டாரு. தேவையே இல்லாம அரஸ்ட் பண்ணற மாதிரி வந்து போலீஸ் கூட்டுட்டு போகுது, போர வழியெல்லாம் இளம் ஏழை எளிய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்புகள் கடைசியா "இந்த ஹீரோ இருக்கனும். ஹீரோ இருக்கனுனா ஜென்டில்மேனும் இருக்கனுமில்ல" போலீஸ் கிளம்புது.
போலீஸ் விட்ட இடத்துல இருந்து ஹீரோ எப்படி போயிருப்பாரு.
நாடு முழுக்க இருக்கற விஞ்ஞானிகளை அடையாளம் கண்டுப்பிடிச்சு இறுதிக்காட்சியில காட்டறாங்க.
இன்று நேற்று நாளை என்ற வித்தியாசமான படத்தின் இயக்குனர் ரவிக்குமார், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக்கிய படம் ஒன்றிற்கு, "அயலான்" என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் சிவகார்த்திகேயனா?
சிறுத்தை சிவா இயக்கித்தில் ரஜினிகாந்த் அவர்கள், #Thalaivar168 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் எதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமென ரசிகர்கள் ட்விட்டர்யில் கூறிஉள்ளார். இதனால், #WeWantSKForThalaivar168 என்ற hastag ட்விட்டர்யில் ட்ரெண்டிங்கில் உள்ளது.