Log in

Register



அறிமுகமாகிறார் விஹான்!
இன்று வெளியாகும் மார்க்கெட்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் விஹான் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்

அவர் நமது ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ”யாதெனக்கேட்டேன்” படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

இயக்குநர் சுபாஷ்கய் மும்பையில் நடத்தும் ”விசிலிங் ஹுட்ஸ்” கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற்றவர். மிகுந்த திறமைசாலி.

கவியரசு கண்ணதாசனின் பேரன் முத்தைய்யா கண்ணதாசனுடன் இணைந்து அருமையாக நடித்திருக்கிறான். 

ஷனாயா, விஷாலி, முத்து, சுபா, சித்தன் கார்த்திஷ் என்று எங்கள் டீமே ஜாலியான இளமையும் அனுபவமும் கலந்த டீம். எங்கள் எல்லோருக்குமே இன்று மகிழ்ச்சியான நாள்.

அவர் வெற்றிபெற வேண்டுமென்று யாதெனக்கேட்டேன் படக்குழு மற்றும் ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் சார்பாக வாழ்த்துகிறோம்.

Published in ISR Press Release

நீங்கள் யாரும் எங்களை பார்க்காமல் இருக்க முடியாது. அதை அந்த நான்கு பெண்கள் சொல்லவில்லை. அலட்சியமாக காற்றில் பறந்த அவர்களின் கூந்தல் சொன்னது.
மாநிறத்துக்கும் கொஞ்சம் கம்மி. ஆனால் பளீரென்று இருந்தார்கள்.
அரக்கு நிறத்தில் மிகச் சாதாரண புடவை. கூந்தலுடன் சேர்ந்து புடவையும் காற்றில் சிலுசிலுத்தது.
காது ஜிமிக்கி, வளையல் உட்பட எல்லாமே நால்வரும் ஒரே நிறத்தில் அணிந்திருந்தார்கள்.
கொலுசு அணிந்திருந்தார்களா எனத் தெரியவில்லை. ஆனால் அவர்கள் நடக்கும்போது ஒரு சங்கீதம் கேட்டது.
படு நெரிசலான புகை படர்ந்த ஹார்ன் அலறிய டிராபிக்.
ஆனால் அவர்களுக்கு கடல் ஒதுங்குவது போல வழி கிடைத்துக் கொண்டே இருந்தது.
அவர்கள் எதிர்சாலையை அடையும் வரை சிக்னல் கூட ஸ்தம்பித்து மாறாமல் நின்று கொண்டிருந்தது.

அழகு என்பது நிறத்திலோ, முகத்திலோ, ஆடையிலோ இல்லை. தன் தோற்றம் பற்றிய நம்பிக்கையிலும், துளைக்கும் பார்வைகளை பார்க்காமலே முறியடிப்பதிலும், அகத்தின் தெளிவை திசையெங்கும் சிதறடிப்பதிலும் இருக்கிறது என்பதை அந்தப் பெண்கள் நிரூபித்தார்கள்.

மீண்டும் அவர்களை நேரில் பார்த்தால் ஹலோ சொல்வேன். பெயர் கேட்பேன்.

என்னைப் போலவே அசோக் பில்லர் சிக்னலில் அவர்களை இரசித்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா?

Published in ISR Selva speaking

குளத்தில் கல்லெறிந்து உண்டாக்கும் ஓசையில் தெறிக்கும் ப்ரியம்!

Page 2 of 2