Log in

Register



கல்யாணம் நின்ற வேதனையை சரிசெய்ய
 
ராணி என்ற டெல்லிப்பொன்னும் விஜய் என்கிற பையனும் காதலிக்கின்றனர். படிக்கும்போது இருவரும் ஒன்னுக்குள் ஒன்னாக இருக்காங்க. இந்த இருவரையும் பார்த்திட்டு இவங்க குடும்பத்துல இருக்கறவங்க கல்யாணம் ஏற்பாடு பண்ணறாங்க. இதற்கிடையில் பிரான்ஸ் க்கு வேலைக்குப்போகிறார் விஜய். 
 
வேலைக்குப்போற இடத்துல இருக்கற கல்சருக்கு ராணி ஒத்து வரமாட்டாள் என்று நினைத்தும் அவனுடைய வாழ்க்கையில் அவன் நிறைய அனுபவங்களை பெறனும் என்றும் கல்யாணம் வேணாம் என்று முடிவு எடுக்கிறான். 
 
இது, கல்யாணத்தைப்பற்றி பல கனவுகளை மனதில் சுமந்தவளுக்கு மிகுந்த அதிர்ச்சி ஆகியது. திரும்ப திரும்ப கெஞ்சுக்கிறாள். என்னை கல்யாணம் பண்ணுக்கோ..என்று ஆனால் விஜய் அதனை காதிலே போட்டுக்கொள்ளவில்லை. கல்யாணம் நின்ற வேதனையை சரிசெய்ய பிரான்ஸ்க்கு சுற்றுலா பயணம் செல்கிறாள் ராணி.
 
அங்கு, அந்த கல்சரை பழகுவதற்கு நீண்ட காலமாயிற்று. தனிமையில் ஊரைச்சுற்றி வருகிறாள். விதிமுறை மீறல் போன்ற பல பிரச்சனைகளிலும் மாட்டிக்கொள்கிறாள். மேலும் அங்கு அவளுக்கு விஜயலட்சுமி என்ற பெண்ணுடன் நட்புக்கொள்கிறாள். ஆட்டம், பாட்டம், குடி, கூத்து கும்மாளம் என்று அவளது வாழ்க்கையே மகிழ்ச்சியாகிறது. பின்னர், அங்கிலிருந்து வேறொரு இடத்துக்கு பயணிக்கிறாள். அங்க சில ஆண் நண்பர்களுடன் நட்புக்கொண்டு சுற்றுக்கின்றனர். ஒவ்வொருத்தர்க்குள்ளையும் ஒரு பிரச்சனை கண்டிப்பா இருக்கும் என்று புரிந்துக்கொள்கிறாள். அவளுடைய கூச்சம் போன்றவைகள் அங்கே தகர்த்து விடுகிறாள். 
 
எந்த மாதிரியான கலாசாரத்துக்கு நீ ஒற்று வரமாட்டேனு தூக்கிப்போட்டு போனானோ. அந்த கலாசாரத்தில் மின்னும் பெண்ணாக பார்த்து அவளை ரொம்ப மிஸ் பண்ணறான் விஜய். திரும்ப திரும்ப ராணியிடம் பேச முயற்சிப் பண்ணறான். 
 
வெளி நாட்டில் ஒரு கட்டத்தில் ராணி, எனக்கு நீ வேணும் என்று வந்து நிற்கும்போது எனக்கு என் நண்பர்கள் முக்கியம் என்று விஜயை விட்டுட்டு போகிறாள். பிறகு டெல்லி திரும்பியவள், விஜய் வீட்டிற்கு வருகிறாள். "ராணி நீ வந்திட்டையா, என்னால நீ இல்லாம இருக்க முடியாது. ஐ லவ் யூ ராணி" ஆனால் ராணி, அவன் அவளுக்குப்போட்ட மோதரத்தை திருப்பிக்கொடுத்திட்டு விஜயை தூக்கிப்போட்டு போயிட்டாள். இதுவே Queen படத்தின் கதை.
 
கீதா பாண்டியன்
Published in Classic Movies
ஆண்களே உங்க அம்மா, மனைவி, அக்கா, தங்கைப்படும் கஷ்டத்தில் நீங்கள் பங்கெடுத்திருக்கீர்களா?
 
வீட்டில் இல்லத்தரசியாக இருக்கும் பெண்கள் தினந்தோறும் பலவித சவால்களை மேற்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் படும் கஷ்டத்தை பல  ஆண்கள் புரிந்துக்கொள்வதில்லை மேலும் தனக்கெனவொரு அடையாளம் வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு இங்க எத்தனை ஆண்கள் வழி விடுகின்றனர். 
 
பாலிவுட் குறும்படம் ஒன்றில், திருமணமாகி 4 வருடம் ஆன மனைவி தினந்தோறும் செய்யும் வேலையில் பங்கெடுக்காத  கணவன் இருக்கிறார். மனைவியுடன் கூட உக்கார்ந்து சாப்பிடுவதில்லை. அந்த பெண், தினமும் வீட்டு வேலைகளையும் செய்து விட்டு MNC கம்பெனியிலும் எட்டு மணி நேரம் வேலைச் செய்கிறாள். அவளுடைய சிறு வயது கனவு பாரதநாட்டியம். ஆனால் அதனை செய்யக்கூடாது என்று தடைப்போட்டுள்ளார் கணவன். 
 
அவளுக்கு அவள் செய்யும் வேலையே பிடிக்கல. கணவனோட பேசவும் முடியல. இவ பேச வந்தாலே "எனக்கு வேலையிருக்கு உன்ன மாதிரி நான் சும்மாவா இருக்கேன்" என்று வீட்டு வேலையோட சேர்த்து ஆபிஸ் வேலைக்கும் செய்கிற தன் மனைவியைப் பார்த்து சொல்லறான். 
 
இவளுடைய சிறு வயது கனவு "நடனம்". அதுதான் இவளுடைய அடையாளம் என்று நினைக்கறாள். அவளுக்கு நடனத்தில் விருப்பம் இருப்பதால் விரும்பமில்லாத MNC  கம்பெனியில் வேலையை விட்டு நின்று ஒரு யூடூப் சேனல் ஆரம்பித்து விடியோ போடறேன். ஒரு ஐஞ்சு ஆறுப்பேருக்கு கிளாஸ் எடுக்கறேன் என்று சொல்லுகிறாள். மேலும் இத்தனை வருடம் ஆச்சு கல்யாணமாகி ஆனால் நீங்க என்னை புரிஞ்சுக்க மாட்டேங்க.
 
ஆனால் கணவனோ, அதுல்லாம் வேணாம். உனக்கு வேலைக்குப்போக விருப்பம் இல்லைனா வீட்டுல சும்மா இரு. நடனமெல்லாம் நம்ம குடும்பத்துக்கு செட் ஆகாது. போயிம் போயிம் இந்த பாட்டு, நடனத்துல உனக்கு என்ன வரப்போகுது என்று கூறி விட்டு தூங்கப்போகிறான்.
 
இல்ல, நான் இப்ப விட்டால் எப்பவும் எனக்கென ஒரு சுயம் இல்லாம போயிடும். என்று முடிவெடுத்து மறுநாள் வீட்டே அதிரும் அளவிற்கு நடனமாடி வீடியோ எடுக்கிறாள். 
 
பெண்கள் எல்லா வயதிலும் ஆண்களாக இருக்கும் எல்லா உறவுகள் சொல்லதை கேட்க கூடியவர்களாகதான் இருக்காங்க. அப்பா சொல்லறத  செய்வதிலிருந்து கணவன் வரைக்கும். ஆனால் அவள் மனசு எப்படிப்பட்டது. அவ யாரோட பேச நினைக்கிறாள். என்ன பேச நினைக்கறாள். அவளுடைய ஆசை என்ன?  அவளுடைய விருப்பம் என்ன தெரிக்கொள்வதே இல்லை. அவள் செய்யும் வேலையில் உதவியாக இருக்க கூட நினைப்பதே இல்லை என்பதே இந்த குறும்படத்தின் கதை.
 
என்னிக்கு இந்த நிலைமை முழுசா மாறுதோ, எல்லா பெண்கள் நினைப்பதும் நடக்குதோ அப்போதான் உண்மையாக பெண்கள் தினம் சந்தோஷத்திற்குரியதாக  இருக்கும். 
ஆண்களே, முதலில் வாட்சப்பில் யாரோரு பெண்ணுக்கு பெண்கள் தின வாழ்த்துச்சொல்வதை விட வீட்டிலுள்ள பெண்கள வாழ்த்துங்கள்.
 
Bollywood women's special Award winning shortfilm for "Stay Housewife" 
 
Geetha pandian
 
Published in Reviews