Log in

Register



மிடில் கிளாஸ் பசங்களுக்கு இருக்கற கொழுப்ப பாரு... ஒரு சாதாரணமான  மிடில் கிளாஸ் பையன் ஒரு நல்ல செட்டிலான வேலைக்கு போகறதுக்கு ரொம்ப பாடு பாடுவான். ஆனால் போயிட்டானா அவன் பண்ணற அலப்பற இருக்கே...
 
அக்கா-தம்பி இரண்டுப்பேரையும் சொந்தக்கார மாமா "நாரதர் நாயுடு" தான் வளர்க்கறாரு. அப்பறம் கல்யாணம் பண்ணி அக்காவும் மாமாவும் சென்னையில வசிக்கிறாங்க. இரண்டுப்பேருக்கும் எப்பவும் லவ் தான். தம்பிக்காரனுக்கு வேலைக்கிடைச்ச உடனே அவன் சென்னையிலையே வேற இடத்துல தங்கப்போயிட்டான். அடுத்தென்ன கல்யாணம்தான். ஆனால் அதுக்கு அவன் போட்ட கன்டிஷனும் எதார்த்துல நடந்தும் என்ன என்பதுதான் கதையே..
 
கதாநாயகியோட குடும்பத்துல அப்பாக்கு காது கேக்காது. அவரால நிறைய குழப்பம் நடக்கும். ஒரு அண்ணன் வீரமா பையன். வேற்றுமதத்துல கல்யாணம் பண்ணிட்டு போயிடுவான். இன்னொரு மகன் பயந்தாங்கோலி. அம்மா, பொன்னு கல்யாணமான போதும்னு நினைக்கறாங்க. பொன்னு பத்து failஆகிட்டு நாலு வருடமா வீட்டுலையே சும்மா இருக்காள்.
 
கிட்டுமணி கல்யாணம் பண்ணிக்க 8 கன்டிஷன் போடறான். அந்த கன்டிஷன் எல்லாம் ஒத்து வரமாதிரி பொன்னே கிடைக்கல. கிடைச்ச எல்லாரையும் ரீஜட் பண்ணறான். அப்போ, தன் சொந்தக்கார மாமா "நாரதர் நாயுடு"  கல்யாண போகராக இருக்கறனால அவரட்ட அந்த பொறுப்ப ஒப்படைக்கிறான். 
 
"கன்டிஷன் நம்பர் ஒன்னு" -நான் B.Sc  அதனால பொன்னு பி.எஸ்.ஆகவும் இருக்க கூடாது. எஸ்.எஸ்.எல்.சி யாகவும் இருக்க கூடாது. ஆனால் கீழ படிச்சிருக்கனும்
"நாரதர் கழகம்" : கிட்டுமணி பொண்டாட்டி பத்தாவது Fail. ஆனால் பி.எஸ். சி பஸ்ட் இயர்னு சொல்லிருப்பாங்க.
 
கன்டிஷன் நம்பர் ஒன் ஏ: அவளுக்கு ஷந்தி தெரிஞ்சிருக்கனும். எங்க ஆப்ஸ் இந்தியா முழுவதும் இருக்கு. அங்க போன இவ காய்கறி கடைக்காரனோட பேசனும். 
"நாரதர் கழகம்"- எதோ லைடா தெரியும்னு சொல்லிட்டாங்க. ஆனால் உச்சக்கட்டத்துல எல்லா பிரச்சனையில இருந்தும் விடுபட ஷந்திதான் உதவும்.
 
"கன்டிஷன் நம்பர் இரண்டு"- மெட்ரஸ் ல திருட்டு பயம் அதிகம். பகலையே திருடன் வருவான். நான் ஆபிஸ் போயிருக்கும்போது பகல யாராவது திருடன் வந்தா தைரியமா அவன  எதிர்த்துப்போராடனும். 
"நாரதர் கழகம்"- நாரதர் கழகம் எல்லாம் அவன் புருஷனுக்கு தெரிய வரும்போது, புருஷன் கிட்ட போராடுவாள்.
 
"கன்டிஷன் நம்பர் மூன்னு"- நான் சைவம் தான் ஆனால் என் நண்பனுக்கு அசைவம் சமைத்துக் கொடுக்கனும். அதனால அவளுக்கு அசைவம் சமைக்க தெரியனும். 
"நாரதர் கழகம்"- சமையலுக்கு நாரதர் நாயுடு உதவி கண்டதையும் குழம்புல போடுவார். ஆனால் கிட்டுமணியோட நண்பர் அத சாப்பிடாமல் சாமிக்கு மாலப்போட்டு தப்பிச்சுடுவான். 
 
"கன்டிஷன் நம்பர் நாலு"- அந்தப்பொன்னு எனக்கு மட்டும்தான் அழகா இருக்கனும். அடுத்தவன் கண்ணுக்கு அழகாக இருக்க கூடாது. அப்படினா கல்யாணத்துக்கு முன்னாடி அவள யாரும் காதலிருச்ச கூடாது.
"நாரதர் கழகம்"- கிட்டுமணிக்கு போட்டோ காட்டறதுக்கு முன்னாடி. நாயுடு போட்டோ பார்த்துட்டு இந்த போட்டோலையே கேவலமா இருக்கேனு சொல்லுவாரு. ஆனால் கிட்டுமணி கண்ணுக்கு அவ அழகா இருப்பாள். 
 
"கன்டிஷன் நம்பர் ஐஞ்சு"- எனக்கு மிருதங்கம் வாசிக்க தெரியும். அந்த பொன்னு நடனம் ஆடனும். 
"நாரதர் கழகம்"- முதலில் அவளுக்கு நடனம் ஆட தெரியாதுனு கிட்டுமணிக்கிட்ட மாட்டிப்பாள். ஆனால் கிட்டுமணியோட அக்கா திட்டி ஆடச்சொன்ன பிறகு நடனமும் வேணாம் ஒன்னும் வேணானு சொல்லிடுவான். 
 
"கன்டிஷன் நம்பர் ஆறு"- நானே செத்தாகூட அந்தப்பொன்னு அழக்கூடாது. 
"நாரதர் கழகம்"- இந்த கழகத்தில் பொய் சொல்லி மாட்டிக்கிட்டு ஒவ்வொரு நாளும் இவன் அந்த பொன்ன அழ மட்டும்தான் வைப்பான்.
 
"கன்டிஷன் நம்பர் ஏழு"- என்னைப்பற்றிய ரகசியம் அவளுக்கும் அவள பத்தி எனக்கும் தெரியனும். ஆனால் எங்கப்பத்திய ரகசியம் வெளி உலகத்துக்கு தெரியக்கூடாது. 
"நாரதர் கழகம்"- கிட்டுமணி தான் நினைச்சமாதிரி பொண்டாட்டி கிடைக்கல. தெரிஞ்ச உடனே பொண்டாட்டியோட அம்மா வீட்டுல சண்டைப்போட்டு பொண்டாட்டிய கூட்டிட்டு போகும்போது பக்கத்துல குடியிருக்கற எல்லாருக்கும் இவங்க விஷயம் தெரிய வந்திடும்.
 
"கன்டிஷன் நம்பர் எட்டு"- கல்யாணத்துக்கு அப்பறம் நான் செத்துட்டால் அந்த பொன்னு வேற கல்யாணம் பண்ணிக்கனும். 
"நாரதர் கழகம்"- ஆனால் பொய் சொல்லி கல்யாணம் பண்ணி வைச்சப்போது வீட்டுல தினந்தோஷம் வரும் சண்டையில அந்த பொன்னு மனம் உடஞ்சு தற்கொலை முயற்சிச்செய்வால் ஆனால் நாயுடு காப்பாத்திடுவாரு.
 
இந்த கன்டிஷன் போயி தனமாக இருக்கு. இந்த மாதிரி பொன்னு கிடைக்காதுனு. அவன் சொன்ன கன்டிஷனுக்கு ஏற்று மாதிரி பொன்னு இருக்குனு பொன்னோட குடும்பமே பொயி கல்யாணம் நடந்து அது கூட நடந்திடும். ஆனால் தன்னோட எந்த கன்டிஷனும் எதார்த்துல நடக்கலனு நிறைய பிரச்சனைகள் வரும். 
 
அதுக்குப்பின்னும் நாரதர் கழகத்துல மாப்பிள பொன்னு குடும்பமே சேர்ந்து அவங்க இரண்டுப்பேரையும் சேர்த்து வைப்பர். எந்த கன்டிஷனையிலும் ஒத்து வராதவ. கற்பம் தரிப்பாள். அப்போலிருந்து இரண்டுப்பேரும் சேர ஆரம்பிப்பாங்க. 
 
(நாரதர் நாயுடு ஒரு பணக்காரக்குடும்பம். 40 கன்டிஷன் போட்டு ஒரு பொன்ன பார்த்து அந்த பொன்ன ரீஜட் பண்ணிடுவான். அவங்க அவமானம் தாங்கமா செத்துவாங்க. அதுல இருந்து வெளியே வரமுடியாம. கல்யாண போகராகி ஏழையான அவழை பெண்ணுக்கெல்லாம் கல்யாணம் பண்ணி வைப்பாரு. அதுல ஒரு பொன்னுதான். "கிட்டுமணியோட மனைவி உமா". )
 
கடைசியில ஒரு நல்லா பொன்னு கல்யாணமாகி எந்த பிரச்சனையும் இல்லாம இருக்க பாடுபட்டவரை எல்லாருமே தப்பா பேசுவாங்க. ஆனால் கடைசி உமா வந்து நாயுடுவ பார்த்துச் சொல்லுவாள்.
 
" எனக்கு நல்ல வாழ்க்கை கொடுத்ததுக்கு நன்றி" 
 
இங்கையும் போடப்பட்ட கன்டிஷன் முடிச்சுகளை விசு இயக்கி நடித்து அவிழ்கிறார். இதில் சிரிப்பிற்கு பஞ்சமில்லை ....
 
-கீதாபாண்டியன்
Published in Classic Movies