Log in

Register



கல்யாணம் நின்ற வேதனையை சரிசெய்ய
 
ராணி என்ற டெல்லிப்பொன்னும் விஜய் என்கிற பையனும் காதலிக்கின்றனர். படிக்கும்போது இருவரும் ஒன்னுக்குள் ஒன்னாக இருக்காங்க. இந்த இருவரையும் பார்த்திட்டு இவங்க குடும்பத்துல இருக்கறவங்க கல்யாணம் ஏற்பாடு பண்ணறாங்க. இதற்கிடையில் பிரான்ஸ் க்கு வேலைக்குப்போகிறார் விஜய். 
 
வேலைக்குப்போற இடத்துல இருக்கற கல்சருக்கு ராணி ஒத்து வரமாட்டாள் என்று நினைத்தும் அவனுடைய வாழ்க்கையில் அவன் நிறைய அனுபவங்களை பெறனும் என்றும் கல்யாணம் வேணாம் என்று முடிவு எடுக்கிறான். 
 
இது, கல்யாணத்தைப்பற்றி பல கனவுகளை மனதில் சுமந்தவளுக்கு மிகுந்த அதிர்ச்சி ஆகியது. திரும்ப திரும்ப கெஞ்சுக்கிறாள். என்னை கல்யாணம் பண்ணுக்கோ..என்று ஆனால் விஜய் அதனை காதிலே போட்டுக்கொள்ளவில்லை. கல்யாணம் நின்ற வேதனையை சரிசெய்ய பிரான்ஸ்க்கு சுற்றுலா பயணம் செல்கிறாள் ராணி.
 
அங்கு, அந்த கல்சரை பழகுவதற்கு நீண்ட காலமாயிற்று. தனிமையில் ஊரைச்சுற்றி வருகிறாள். விதிமுறை மீறல் போன்ற பல பிரச்சனைகளிலும் மாட்டிக்கொள்கிறாள். மேலும் அங்கு அவளுக்கு விஜயலட்சுமி என்ற பெண்ணுடன் நட்புக்கொள்கிறாள். ஆட்டம், பாட்டம், குடி, கூத்து கும்மாளம் என்று அவளது வாழ்க்கையே மகிழ்ச்சியாகிறது. பின்னர், அங்கிலிருந்து வேறொரு இடத்துக்கு பயணிக்கிறாள். அங்க சில ஆண் நண்பர்களுடன் நட்புக்கொண்டு சுற்றுக்கின்றனர். ஒவ்வொருத்தர்க்குள்ளையும் ஒரு பிரச்சனை கண்டிப்பா இருக்கும் என்று புரிந்துக்கொள்கிறாள். அவளுடைய கூச்சம் போன்றவைகள் அங்கே தகர்த்து விடுகிறாள். 
 
எந்த மாதிரியான கலாசாரத்துக்கு நீ ஒற்று வரமாட்டேனு தூக்கிப்போட்டு போனானோ. அந்த கலாசாரத்தில் மின்னும் பெண்ணாக பார்த்து அவளை ரொம்ப மிஸ் பண்ணறான் விஜய். திரும்ப திரும்ப ராணியிடம் பேச முயற்சிப் பண்ணறான். 
 
வெளி நாட்டில் ஒரு கட்டத்தில் ராணி, எனக்கு நீ வேணும் என்று வந்து நிற்கும்போது எனக்கு என் நண்பர்கள் முக்கியம் என்று விஜயை விட்டுட்டு போகிறாள். பிறகு டெல்லி திரும்பியவள், விஜய் வீட்டிற்கு வருகிறாள். "ராணி நீ வந்திட்டையா, என்னால நீ இல்லாம இருக்க முடியாது. ஐ லவ் யூ ராணி" ஆனால் ராணி, அவன் அவளுக்குப்போட்ட மோதரத்தை திருப்பிக்கொடுத்திட்டு விஜயை தூக்கிப்போட்டு போயிட்டாள். இதுவே Queen படத்தின் கதை.
 
கீதா பாண்டியன்
Published in Classic Movies
 
மதுர ஜில்லா மச்சான் தாண்டி என் ஜாதகத்தில் குரு உச்சம் தாண்டி!!!
 
இந்த வரியின் போது தனுஷ், நீல ஆடையும் தலைப்பாவும் போட்டு வெளியூர் ஆள் பூம்பூம் மாட்டுக்காரன் மாதிரி இருக்கார். மேலும் 'என் நேரம் நல்லாயிருக்கு உன்ன நான் தூக்கிட்டு போயிட்டுவேன்' அர்த்தம் போல.
 
 முதல் பத்தியில் இவரு இப்படி கேட்டு அந்த பொண்ணோட தோப்பில வர்ணிக்காரு அதுக்கு அந்த பொன்னு 'ஏய் நான் சிட்டு தான் ஆனால்  நான் தமிழ் பொன்னு நீ என் பக்கம் வந்தா நான் உன்ன வெட்டுப்போடுவேனு' சொல்லுது. 
 
அடுத்த பத்தியில் சாதாரணமான பையன் மாதிரியான உடையில் தனுஷ் வந்து, 'என்ன உடல் மா இது. நான் பறந்து வந்து நீ குளிக்கறத பார்ப்பேன்' மீண்டும் வர்ணிக்காரு. திரும்பவும் 'நீ சொல்லறமாதிரி நடந்தா உனக்கு கண்ணே இல்லாம பன்னிடுவேன்' சொல்லுது அந்த பொன்னு. அந்த பத்தி முழுவதும் இவன் தன் காம உணர்வை வார்த்தையாக வெளிபடுத்த அவளோ, திட்டிட்டே இருக்கறாள். கோபம் அதிகமாகி 'என்னை கொலைகாரி ஆகாதனு' சொல்லுகிறாள். 
 
மூன்றாவது பத்தியில் வயசான ஒருத்தன்  அதிலும் பணக்காரன் மாதிரி இருக்கான். 'நீ காலியான கழுத்தோட வா நான் தாலியோட வரேன்' சொல்வதை கேட்டு, 'தாலி கட்டுனா நான் தாராளமா என்னையே தரேன்' சொல்கிறாள். மேலும் இப்போ அந்த பணக்கார கெட்டப் ல இருக்கற வயசான ஆள் வர்ணிக்கறத கேட்டு, 'என்னோட வயச வெடியாகி கொளுத்தாத சும்மா பேசிட்டே இருக்காதனு சொல்கிறாள்' அதோட உன்ன கல்யாணம் பண்ணிட்டு 'ஆளப்போறேன்' அந்த வார்த்தைக்கு அந்த சின்ன பொன்னு மயங்கி 'இப்ப முத்தம் மட்டும் வாங்கிக்கோ பின்னால மொத்தமா தரேன்' சொல்லி வளையில விழுந்திடறாள். 
 
வரிக்கு ஏற்றமாதிரி உடை மற்றும் கெட்பட் எப்படி தீர்மானிக்கறாங்க. பாடலின் நோக்கம், வரிகள், உடை மற்றும் உடைக்கேற்ற கெட்பட், நடனம், பாடலுக்கான செட், எடிட்டிங் இதுமாதிரி 7 துறை சார்ந்தவர்கள் இதில் இயங்கினால்தான் ஒரு பாடல் பிறக்கிறது. 
 
 
-GEETHA PANDIAN
Published in Classic Movies