Log in

Register



 
 
#பாட்டோபாட்டு
 
20 வயது நிரம்பிய ஒரு இளைஞனுக்கு  கண்டிப்பாக ஒரு Dream Girl இருப்பாங்க. அந்த பொன்னு ஒரு சினிமா பிரபலமாக இருக்கலாம், பக்கத்து வீட்டு அக்காவாக இருக்கலாம், எதிர் வீட்டு ஆன்டியாக கூட இருக்கலாம். ஏன், யாருனே முன்ன பின்ன தெரியாத பெண்ணாக கூட இருக்கலாம். 
 
அப்படிதான் இந்த பையனுக்கு கனவுல ஒரு பொன்னு வருது. அதோட நேருல பேச முடியலனு ஏங்கறான். ஆனால் கனவுல நேருல இருப்பதுப்போல நினைச்சு அந்த பொன்னுட்ட என்னன்ன சொல்லறானு பார்ப்போம். 
 
பார்ப்பதற்கு அந்த நிலவைப்போல அழகாக இருக்கும்  பெண்ணே, என் கனவில் வருவது நீ தானா..நீ வரும்போது உன் பெண்மைக்குரிய வாசனை வருகிறது. அப்போ நிஜமாதான் வருகிறாயா...
 
உன் கண்ணை பார்க்கையில் ஒரு நூறு நிலாக்கள் ஒன்று திரண்டால் எப்படியிருக்குமோ அவ்வளவு வெளிச்சம் வருகிறது. அப்போது என் மனம் ஒரு நூறு புறாக்கள் ஒன்னு திரண்டால் எப்படியிருக்குமோ அவ்வளவு கரைபடியாத வெண்மையாக இருக்கிறது என் மனம். நான் தூங்குவதற்கு கண்ணை மூடினாலே உனது ஞாபகங்கள் தான். நீ என் வாலிபத்தை தூண்டுகிறாய்.
 
கண்களுக்கு தெரியாத காற்று மாதிரி என் கனவில் நீ வந்திட்டுப்போகிறாய். பிறகு எனது தூக்கம்
கலைந்துப்போகிறது. 
உன்னை எங்கே வந்து பார்ப்பது என்று யோசனையாக இருக்கிறது. என் கனவில் உன் முகத்தை பார்க்க வந்தால்
அந்த பௌணர்மி நிலாவைப்போல உன்னை பார்த்தும் பார்க்காமலும் ஏங்குகிறேன். உன் பெயராவது தெரிஞ்சுக்கனும்.
 
என் கனவில் நீ வந்து தரும் ஆர்வத்தை நிஜமாகவே வந்து தருவையா..என்னோடு நீ உன்னோட நான் என்று உயிர்க்கு உயிராக உறவாட வருவாயா...
 
நீ யார் என்று தெரிந்துக்கொள்ளாமல் இருப்பது பூதங்கள் நினைந்த காட்டில் இருப்பது போல இருக்கு. நீ எங்கே இருக்கிறாய் என்று தேடிட்டுயிருக்கும் என்னோட கதி என்னாகும். ஒரு வேளை நான் மழை மேகமாக இருந்திருந்தால் உன் வீட்டில் மழைப்பொழிந்து என் ஆசை தீர உன்னையும் நினைத்திருப்பேன். 
 
கனவுல வரகிற பெண்ணே நீ நேரில் வரும் நேரம் எப்போ வரும். நான் உனக்காக இருக்கும் தவம் பாத்தாது என்று நினைத்து நீ என்னை பார்க்க நேரில் வரலையோ..என்ன ஆனாலும் உன்னைதான் தேடிக்கொண்டு இருப்பேன். கண்டிப்பாக நாம் இருவரும் ஒன்றுச்சேருவோம்.
 
-GeethaPandian
Published in Classic Movies