Log in

Register



Thursday, 02 April 2020 10:05

மீண்டும் கோகிலா

கமல் ஒரு சபல புத்திக்காரர்
 
கமலின் சபல நடிப்பில் வெளியான நகைச்சுவை திரைப்படம்.  வீட்டுல சுறுசுறுப்பாக காலை எழுந்து யோகா செய்து விட்டு பொண்டாட்டி கையால தலைக்கு எண்ணெய் தேய்ச்சு குளிச்சு பொண்டாட்டி அயன் பண்ணி வைச்ச துணியப்போட்டுட்டு, பொண்டாட்டி கையால் சாப்பிட்டு சூவ் போட்டுட்டு டிப் டாபா கிளம்பி ஆபிஸ் போயி ஈ ஓட்டிட்டு வேலையே செய்யாம அசதியில தூங்கற வக்கீல் தான் மீண்டும் கோகிலா ஹீரோ.
 
நம் ஐயர் ஆளவா மணிக்கு ஒரேயொரு மனைவியும் ஒரு பொன்னும் இருக்காங்க. ஆத்துக்காரிக்கு புருஷன் மேல அப்படியொரு பாசம் நம்பிக்க. ஆனால் சார்வால் பொண்டாட்டிய பொது இடத்துக்கு கூட்டிட்டு போகறதே கௌரவ குறைச்சல். நெட்டுல மட்டும் கௌரவம் காணாம போயிடும். அது மட்டுமா இன்னொரு பொன்னு மேல அப்படியொரு நெருக்கமாவில்ல இருக்கான். 
இவன் வக்கீள் மணியா? இல்ல வழியற மணியா?
 
கேஸ் சே கிடைக்காம இருந்து, நண்பர் ஒருத்தரால ஒரு நடிகையோட சவகாசம் கிடைக்குது. அவளோட கேஸ் இந்த மணி எடுத்து நடத்துனா நல்லாயிருக்கும் னு அந்த மேனாமினிக்கி ஆசைப்பட்டாள்...
மணிக்கும் கோகிலாக்கும் கேஸ் கிடைச்சுதுல அப்படியொரு சந்தோஷம். ஆனால் மணி வக்கீலா மட்டுமா இருந்தாரு. பொண்டாட்டிட்ட பொயிச்சொல்லிட்டு அந்த நடிகையிட்ட வழிஞ்சுட்டுதானே இருந்தாரு. வெளியுர் போறது என்ன? பாட்டுப்படறது என்ன, சைக்கிள் ஓட்டறது என்ன? கதை பேசறது என்ன? சபலத்தோட பாக்கறது என்ன?...
 
ஒரு வழியா, அந்த நடிகையோட கேஸ் ல ஜெயிச்சுக்கொடுத்திட்டாரு. நாளாக நாளாக கோகிலாக்கு பயம் வந்திருச்சு. எங்க தான் புருஷன் தன்னை விட்டுட்டு போயிடுவானோனு பயந்து நேரா அந்த மேனாமினிட்டப்போயி பேசி ஒரு வாங்கு வாங்கிட்டு வந்திட்டாள்.
கடைசியா அந்த நடிகையே கண்டப்படி பேசி மணிய அவமானம் படுத்திட்டாளே..
 
சுகத்துக்காகவும் என்னோட பணத்துக்காவும் என்னோட பேசுனவங்க மத்தியில நீங்க என்னை சிரிக்க வைச்சிங்க. உங்க கிட்ட நல்ல நட்புதான் எதிர்ப்பாத்தேன். ஆனால் நீங்க தப்பான எண்ணத்தோட பழகியிருக்கேங்களே 
ஐ சே யு கெட்அவுட் னு சூட்டிங் ல எல்லாத்து முன்னாடியும் கத்திட்டாள். 
 
 பெத்த பிள்ளை உயிருக்கு போராடிட்டு கிடக்கு. அந்த நேரத்துல அந்த நடிகைதான் வந்துக்காப்பாத்துனாள். மணி, தன்னோட தவற புரிச்சுட்டு மீண்டும் கோகிலாட்டையே வந்துட்டான். 
 
கையில வெண்ணெய் வைச்சிட்டு நெயிக்கு அழச்சாங்கற கதை தான் மணியுது.
 
-கீதாபாண்டியன்
Published in Classic Movies
இறந்த காலத்திற்கும் நிகழ் காலத்திற்கு உள்ள படைப்பு ஒற்றுமை
 
ராஜ பார்வையில் அம்மா இல்லாம சித்திக்கொடுமையில் வளர்ந்த மகன். ஒரு அதிர்ச்சியின் மூலம் வந்த நோயால் கண் பார்வையற்று பார்வையற்றோர் விடுதியில தங்கியிருந்து பின்னர் அங்கிலிருந்து வெளியே வந்து ஒரு எளிய வீட்டில் தங்கியிருப்பார் கமல். படம் முழுக்க ஒரே நண்பர்.
 
சைகோவில் அம்மா அப்பா கனடாவில் இருப்பதாக கூறி விட்டு ஒரு நல்ல வீட்டில் தனிமை கலந்து ஒரு நண்பருடன் தங்கியிருப்பார் உதயநிதி. 
 
ராஜ பார்வையில் அழகான ஒரு பெண் லிப்பிட்டில் கமலை தப்பாக நினைச்சி குச்சியை கீழே தள்ளி விடுவாள். பின்னர் கமலுக்கு பார்வையில்லை என்று புரிந்துக்கொள்வாள். பின்னர் ஒரு இசை நிகழ்ச்சிகளுக்கு போயி பார்த்து விட்டு கமலிடம் மனிப்புக்கேப்பாள்.
 
சைகோவில் பிரபல வானொலியில் ஆர்.ஜே வாக இருக்கும் தாகினிக்குரல் வளையில் விழுந்து பின் தொடர்ந்து காதலை வெளிப்படுத்த முயற்சிப்பண்ணுவான். அப்போ, பார்வையற்ற உதையை கீழே தள்ளி விடுவாள். பின்னர் பாடலை கேட்டு விட்டு மன்னிப்புக்கேப்பாள்.
 
இரண்டுப் படத்துலையும் வீட்டில் நடக்கும்போது குச்சியை பயன்படுத்தாமல் நடப்பர். எங்கையாவது தெரியாத இடத்தில் குச்சியின் உதவியோடு நடப்பர்.
 
பார்வையில்லாதவர்களின் மனநிலையை அடிப்படையே இரண்டு படமும் பிரதிபலிக்கும். தொடுதல் உணர்வை வைத்து ஒரு கண்டுப்பிடிப்பதும் காதல் செய்வதும் செய்வர். 
 
இரண்டு படங்களிலும் கதாநாயகனுக்கு தானொரு "குருடன் என்பதும் தன்னால் என்ன முடியும்" என்ற தாழ்வு மனப்பான்மையும் இருக்கும்.
 
இரண்டுப்படத்திலும் இசையை மையப்படுத்திய படத்தின் முக்கியமான காட்சிகள் பிரதிபலிக்கும். 
 
வயலின் இசை கலைஞராக "அந்திமழை பொழிகிறது" என்பதில் காதல் உருவாகியது ராஜ பார்வையில். கிட்டார் ஆர்ட்டிஸ்டாக நடிக்க வைத்து "உன்ன நினைச்சு உருகிப்போனேன்" என்று பாடி கதாநாயகின் மனதை மாறும்.
 
சமையல் போன்ற விஷயங்களை கதாநாயகி சொல்ல சொல்ல செய்யும் முயற்சியை பார்வையற்ற கமல் செய்வார். நண்பரும் தோழியும் சொல்ல சொல்ல கார் ஓட்டும் முயற்சியை பார்வை தெரியாத உதயநிதி செய்திருப்பார். 
 
இசையோட இளையராஜாவின் பிம்பம் கலந்த படம் ராஜ பார்வை மற்றும் சைகோ.
 
ராஜ பார்வையில் படத்தின் ஒரு இடையில் கமலை கதாநாயகி ஒரு இடத்திற்கு வரச்சொல்வாள். அப்போது கதாநாயகியை பார்க்க முடியாது. கமல் நண்பனை ஹேட்டலுக்கு வரச்சொல்லிட்டு போக மறந்திடுவான்.
 
 அதே போல சைகோவில் தாகினி உதயநிதியை ஒரு இடத்தைக் கண்டுப்பிடித்து வரச்சொல்லிருப்பாள். அங்கதான் கதாநாயகி தொலைந்துப்போவாள். கதைகளம் சூடுப்பிடிக்கும். 
 
கமலை சில இடங்களில் பார்க்கும்போது பார்வையாளருக்கு பரிதாபம் வரும். உதயநிதியின் பரிதாபம் வருமாறு காட்சிகள் அமையாது. கமலின் இயல்பும் உதயநிதிக்கு கட்டுபாடும் நடிப்பில் தெரிஞ்சுயிருக்கும். 
 
இவ்வாறு இரண்டு படங்களுக்கும் இடையில் ஒற்றுமை இருக்கிறது. இதுவே  சைகோவில் ராஜபார்வை.
 
இரண்டுப்படத்தின் இறுதி கட்டம் சிறு மாறுபாடுகள் ஆனாலும் கதாநாயகனுக்குதான் கதாநாயகி என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.
 
-கீதாபாண்டியன்
Published in Classic Movies