முன்னணி நடிகர்களைக் கொண்டு வெளிவந்து நம்மை ஏமாற்றிய படம் தம்பி...
தன் மகள் செய்த ஒரு தவறை மறைக்க திரும்ப திரும்ப தப்புச்செய்கின்ற குடும்பத்துடன் தப்பு தப்பா செய்தவன் உள்ளே நுழைந்து நல்லவனாய் மாறுகிறான்.
காணாம போன தம்பி யார் அவனுக்கு என்ன ஆச்சு என்பதே கதை. தேவையில்லாம திரைக்கதை நீண்டுக்கொண்டு இருக்கிறது. டிரைலர்காக படம் எடுத்தமாறி இருந்தது. ஒரு குடும்பமே நடிக்குது.
படத்தின் கடைசி நிமிடம் வரை உண்மையான சரவணன் யார் என்று விறுவிறுப்பைக் கொடுக்கிறது. ஜோதிகாவை மையமாக வைத்து படம் நகர்கிறது இருப்பினும் ஜோதிகாவின் பங்கு குறைவுதான். ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் நடிக்கும் படத்தின் எதிர்ப்பார்ப்பை உடைகிறது.
பாதி வில்லனாக சத்யராஜ் தன்னுடைய பழைய முகத்தைக்காட்டிள்ளார். ஆரம்பத்துல இருந்து வில்லனா இருக்கறவன் முடிவு மொக்கையாகுகிறது.
கூடவே இருக்கறவன் கெட்டவனாகவும், பொறுக்கியை ஹீரோவாகவும் கதாபாத்திரம் சித்தரித்துள்ளனர்.
பழங்குடியினர் நல்வாழ்வு என்ற ஒரு விஷயத்தை (TOOL) உதவியாக எடுத்து கதை அடுத்த அடுத்த கட்டத்திற்கு கதை நகருக்கிறது. ஆனால் அதனால் பழங்குடியினருக்கு என்ன உபயோகம் இருக்குனு படத்துல பார்த்தா தெரியும்.
குழந்தைகளை வளர்க்கும்போதே கண்காணித்து நல்லது கெட்டது சொல்லிக்கொடுத்து வளர்க்கனும். அம்மா, பாட்டி, அக்கா, அப்பானு எல்லாரும் இருக்கறவன் தப்புப்பண்ணறான் அப்படினா அது யாரு மேல தப்பு.
இப்படி கதைய போற போக்குல விட்டுட்டு பின்னாடி Flashback சொல்லி கதைய இழுத்துப்பிடிக்கறாங்க.
இறுதியில் தவறை உணர்ந்தவர்கள் உண்மையான பாசத்துடன் ஒரே குடும்பமாக வாழப்போகிறார்கள் என்பதே முடிவு.