Log in

Register



அவர்வர் தலைவிதியை ஆண்டவன் தான் எழுதுவான்" ஆனால் நீ ...??
 
திரு. இயக்குநர் விசு அவர்கள் இயக்கிய படம் மீண்டும் சாவித்திரி(1996). இந்த கதையின் கதாநாயகி வரலாற்றில் வரும் சாவித்திரி போலக் குணத்தைக்
கொண்டுயிருப்பவள்.  தன் வாழ்க்கையில் தான் எடுக்கும் முடிவு சரியானதாகதான் இருக்கும் என்று எண்ணும் தைரியமான பெண்ணாக வளர்ந்தவள். 
 
பொதுவாக ஒரு குடும்பத்தில் இருக்கும் நபர்களுக்கு ஏற்றார் போல் அக்குடும்பத்தின் குழந்தைகள் வளரும். அதுப்போல அப்பா, மகள் இருவரை மட்டும் கொண்ட குடும்பம். வீரமான பார்வை, தைரியமான பேச்சு, தப்புகளை தட்டிக்கேட்கும் பெண், புத்திசாலிதனமாக எடுக்கும் முடிவுகள் இது அனைத்தும் அவளுக்கே கூரிய குணம். அவளைப்பார்க்கும்போது இந்த பெண் மாதிரி நாமும் இருக்கனும் என்ற எண்ணம் கண்டிப்பாக வரும். 
 
ஒரு வயசான அப்பா பொது மக்களுக்கு நல்லது நடக்கனுனா என்ன வேணா செய்யலாம்னு நினைக்கற ஒருத்தர். இளைஞர்கள் நினைச்சால்தான் நாடு முன்னேறும் என்று இளைஞர்களை வழி நடத்தக்கூடியவர். இருந்தாலும் தன் மகள் விஷயத்துல ஒரு சுயநலவாதி. ஒரு ஏழைக்குடும்பம் கையில கிடைக்கற ஒரு நாலு காசுதான் அவங்க வாழ்க்கையில அவங்க எடுக்கற முடிவுக்கெல்லம் காரணம். அளவான வீடு.  தேவையான அளவுக்கு நிம்மதியும் சந்தோஷமும் கொண்ட குடும்பம். 
 
"அவர்வர் தலைவிதியை ஆண்டவன் தான் எழுதுவான்" ஆனால் இவளுடைய வாழ்க்கை தலை எழுத்தை இவளே எழுதிக்கொண்டாள். என்னதான் தைரியமான பெண்ணாக இருந்தாலும் தனக்குனு ஒரு கல்யாணம் குடும்பம்னு வாழனுமென்று ஏங்கிப்போயிருக்காள். அந்த ஏக்கத்திற்கு அவள் வீட்டில் கல்யாண பேச்சு பேச ஒரு தாய் இல்லை என்பதோ, தந்தையை தனி விட மனசு இல்லாம இருப்பதோ, கல்யாணத்துக்கு நகை போடனும் என்ற எண்ணமோ அல்லது தான் ஒரு ஏழை குடும்பம் என்பதோ என்ற எதாவது ஒரு காரணம் இருக்கலாம். 
 
அந்த சமயத்தில் நீயுஸ் பேப்பரில் வந்த வித்தியாசமான விளம்பரத்தை பார்த்து வியந்தாள். "மணமகள் தேவை" 
தன் அப்பாவுடைய வார்த்தையை ஏற்காமல் மறுப்பு தெளிவித்து பதில் கடிதம் போட்டாள். அந்த சமயத்தில் ஒரு அழகான இளம் ஆண் தன் குடும்பத்தில் அவர்  சுமக்கும் சுமையை எடுத்துச்சொல்லினார். "அம்மாக்கும் ஆஸ்துமா, அப்பாயொரு மனநோயாளி, தம்பியொரு குடிக்காரன், தங்கை கற்பழிக்கப்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீளாத பெண். இப்படிப்பட்டவர்கள் பார்த்துக்கொள்ளும் ஒரு பெண் தான் வேண்டும் என்று விளம்பரம் போட்டேன்". 
 
நமது கதாநாயகியின் அப்பா பேச்சுக்கு மறுப்பு தெளிவித்து கணவனை கைப்பிடித்து முதலிரவில் பாலங்குழியில் விழுந்தாள். "ஏற்கனவே கல்யாணமாகி இரவில் மட்டும் புத்தி பேதலித்து மயங்கி விழும் மனநோயாளி" என்று தெளிய வருகிறது. குடும்பமே சேர்ந்து ஏமார்த்திருச்சு. அவளை அந்த குடும்பத்தில் இருக்கும் யாருமே மதிக்கல. தனது புத்திசாலிதனத்தில் எடுத்த முடிவின் இயலாமையால் அவள் பட்டபாடு பெரும் பாடு. 
 
இறுதியில் தன் தலையெழுத்தை தவறாக எழுதிய அந்த புத்திசாலிதனமே மீண்டும் திருத்தி எழுதிய விதமாக தன்னை உதாசினம் படுத்திய மாமனார் குடும்பமே கையெடுத்து கும்பிடும் விதமாக, தன் கணவனின் இந்த நிலைமைக்கு காரணமானவனை கண்டுப்பிடித்து ஜெயிலில் அடைத்தாள். கணவனோட முதல் பொண்டாட்டி ரொம்ப நல்லவள் என்று நிருப்பித்து இருவரையும் சேர்த்து வைத்து விட்டு மீண்டும் தன் அப்பாவோட பழைய மகளாக வீட்டுற்கு வந்து விடுவாள். எப்படினு படத்துல பாருக்கும்போது.  நீங்களே சொல்லுவிங்க,
 
"நானும் இவளைப்போல இருக்கனும்"
 
வெவ்வொரு முடிச்சுக்களை ஒரே மாதிரியாக போட்டு வேறு விதமாக அவிழ்ப்பதே விசு அவர்களின் திரைக்கதை. 
 
GEETHA PANDIAN
 
Published in Classic Movies