நமக்கு நினைவு தெரிந்து நாம் அனுபவித்த முதல் நெகிழ்ச்சியான விஷயத்தை எப்படி என்றென்றும் நம் நினைவில் அழியாது இருக்குமோ, அதேபோல் சினிமா ரசிகராக இருக்கும் ஒருவருக்கு முதன் முதலில் திரையில் பார்த்த திரைப்படமும், அந்த அனுபவமும் நீங்கா நினைவாக இருக்கும் .ஏன் இந்த இரண்டு விஷயத்தையும் ஒப்பிட்டு சொல்கிறேன் என்றால், ஒரு சினிமா ரசிகனாக நான் என் வாழ்வில் நடந்த சம்பவத்தைபோல ஏதாவது ஒரு படத்தில் பார்த்தாலோ, இல்லை படத்தில் பார்த்த எதாவது ஒரு சம்பவத்தை போல என் வாழ்வில் நடந்தாலோ அப்படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும்.
அப்படி பார்க்கையில் விஜய் நடித்த திருமலை படம் தான் நான் முதன்முதலில் திரையில் பார்த்த திரைப்படம். அப்படத்தில் ஒரு காட்சியில் ரகுவரனும் கௌசல்யாவும் விஜய் மற்றும் அவரது நண்பர்களை வீட்டிற்கு சாப்பிட வருமாறு அழைப்பார்கள்.சாப்பிட்டு கொண்டிருக்கும் விஜய் திடீரென தனது நண்பர்களை பார்த்து "உங்களுக்கு கூட இது தோனலல ,வீட்டுல ஏதாவது விஷேசம் நடந்த ஒரு டிபன் பாக்ஸ்ல கேசரி பாயசம்னு கடைக்கு குடுத்துஅனுப்புவாங்களே தவிற வீட்டுக்கு கூப்பிட்டு யாரும் சோறு போட்டது கிடையாது, நானும் இதெல்லாம் ஆசைப்பட்டது இல்ல, இப்பதான் ஒரு வீட்டுல இழை போட்டு சாப்புடுறேன்”, என மனம் நெகிழ்ந்து கூறுவார்
இதே போல் ஒரு நெகழ்ச்சியான சம்பவம் என் வாழ்கையிலும் நடந்தது .இதுவரை 25 பிறந்தநாளை கடந்த எனக்கு ஒருமுறை கூட பிறந்தநாள் பரிசு கிடைத்தது கிடையாது நானும் அதை எதிர்பாக்கவில்லை. சமீபத்தில் பழகிய ஒரு நண்பர் கடந்த பிறந்தநாளன்று எனக்கு ஒரு கைக்கடிகாரம் பரிசாக குடுத்தார், அப்போது 20 வருடம் என்னுடன் பழகிய என் நண்பர்களும் கூட இருந்தனர். அப்போது நான் அவரிடம் 20 வருடம் கூட இருந்த நண்பர்களுக்கு கூட எனக்கு பரிசு குடுக்கனுன்னு தோணல, ஆனா ஆறு மாதம் பழகிய உங்களுக்கு தோணிருக்கு, இது என் வாழ்க்கையில் நான் பெற்ற முதல் பரிசு, ரொம்ப நன்றி என்றேன். முதன்முதலில் வீட்டுக்கு கூப்பிட்டு சாப்பாடு போடுவதையும், பிறந்தநாள் பரிசு பெறுவதையும் ஒப்பிடுவது சரியா என்பது எனக்கு தெரியவில்லை, ஆனாலும் அதிலிருந்து நமக்கு ஏற்படும் நெகிழ்ச்சியான உணர்வு ஒன்றுதானே!
- வினோத் குமார்
இந்தியன் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன் வயதான சேனாதிபதி வேடத்திற்கான மேக்கப் டெஸ்டிற்கு கமல் தயாராகிக்கொண்டிருந்தார் ,தயாரானபின் படக்குழு முன் வந்து நின்ற கமலை அனைவரும் வியந்து பார்த்தனர் . கதாப்பாத்திரத்தின் வடிவத்திற்கு ஏற்ப அவரது லுக் கனகச்சிதமாக இருந்தது என ஷங்கர் உட்பட அனைவரும் பாராட்டினார் ஆனால் கமல் திடீரென மீசையை மறந்துட்டேன் ஓட்டிட்டு வந்துடுறேன் எனக்கூற, இதுவே அற்புதமாக இருக்கின்றது மீசை தேவையில்லை என எல்லோரும் கூறினார் ,சங்கருக்கும் பிடித்துப்போக படப்பிடிப்பை ஆரம்பித்தனர்.
ஆனால் ஷங்கர் கதாபாத்திரத்தை வடிவமைக்கும்போது வயதான கமலுக்கு மீசை இருக்கும்படிதான் வைத்திருந்தார் ,ஆனாலும் மீசை இல்லாத ளுக்கும் அவருக்கு பிடித்துபோகவே படப்பிடிப்பை ஆரம்பித்தார் .ஷங்கருக்கோ வயதான கமலை மீசையுடன் காட்டவேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டுதான் இருந்தது .
படத்தில் நாட்டுக்காக சேனாதிபதி தனது பிள்ளையான சந்துருவை கொள்ளவேண்டிய சூழல் ஏற்படும் .அப்போது சேனாதிபதி தான் தவமிருந்து பெற்ற பிள்ளையை தன் கையாலேயே கொள்ளும்போது எவ்வளவு வலி நிறைந்திருக்கும் என்பதை உணர்த்துவதற்காக ஒரு வசனம் பேசவேண்டும் .அந்த வசனத்தை யோசித்துக்கொண்டிருக்கும்போது ஷங்கருக்கு அந்த மீசை கதை ஞாபகத்திற்கு வந்தது ,எனவேதான் " எங்களுக்கு கல்யாணம் ஆகி பத்து வருஷம் கழிச்சி பொறந்தவன் சந்துரு ,சின்னவயசுல தூக்கி கொஞ்சும்போது மீசை முடி குத்துதுன்னு அழுவான் ,அன்னிக்கு அவனுக்காக மீசையை இழந்த இந்த சேனாதிபதி இன்னிக்கு நாட்டுக்காக அவனையே இழக்க முடிவு பண்ணிட்டேன்னு” சொல்லி சந்துருவை கொன்றபின் கிளைமாக்ஸில் சேனாதிபதி கதாபாத்திரத்திற்கு மீசை இருக்கும்படி செய்து இந்த இந்தியனுக்கு சாவே கிடையாதுன்னு முடித்திருப்பார்
இவ்வாறு தான் யோசித்த ஒரு விஷயத்தை முதலில் கதையில் செலுத்தமுடியாவிட்டாலும் ,பின்பு மிகவும் நேர்த்தியாக கதையின் போக்கை மாற்றாமல் அமைப்பதில் வல்லவராய் இருப்பதால் தான் அவர் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் இயக்குனரில் ஒருவராக திகழ்கிறார்.
- வினோத் குமார்