கணவனை இழந்த 45 வயது நிரம்பிய விதவைப்பெண். தன் குடும்பத்தின் பொருளாதார நிலையை சீர் செய்ய மற்றும் தன் மகனை படிக்க வைக்க விபச்சாரத் தொழில் செய்து வருகிறாள்.
அவள் ஒரு நாளில் தினந்தோறும் எவ்வளவு வேலைகளை செய்து வருகிறாள் என்பதை அப்படியே காட்டியுள்ளனர்.
மேலும், ஒவ்வொரு முறையும் இவளை தேடி வரும் வாடிக்கையாளருக்கு உண்மையாகவும் இருக்கிறாள். தன் மகனுக்கு இதனால எந்த கெட்ட பெயரும் வரக்கூடாது என்பதில் தெளிவாகவும் இருக்கிறாள்.
வாடிக்கையாளருள் ஒருவர் மிகுந்த காம்ம கொடூரனாக இருக்கிறான். தொடர்ந்து தொல்லை தருவதும் மேலும் இவளுக்கு வேதனை தருமாறும் நடந்துக்கொள்கிறான். அவன் முறை என்னைக்கின்றாலும் அவளுடைய நாள் தோறும் செய்யும் வேலையில் சரியாக நடப்பதே இல்ல. ஒரு நாள் அவனை கத்திரிக்கோலால் கொன்று விடுகிறாள். இந்த விஷயத்துல இருந்து மீள முடியாமல் திகைத்துப்போகிறாள்.
இதில் நாம் கவனிக்கதக்கது இங்கு சினிமாவில் வீட்டு வேலைச்செய்வதுப்போல நடிப்பார்கள். இந்தப்படத்தில் வீட்டு வேலைச்செய்வதால் அது எதார்த்தமாக முழுமையான காட்சிகளாக இருக்கும். நாம் ஒரு வேலைச்செய்யும்போது நடப்பது, எடுப்பது, துடைப்பது என்று தனி தனியாக காட்டுவோம். ஆனால் குறிப்பாக இந்த பட்டில் ஒரு ஏங்கில் தான் முழு வேலையும் காட்டும். இதுதான் இந்த படத்தின் சிறப்பு. நம் படங்கள் சிலவைகளில் வீட்டு வேலைச் செய்வதென்று ஒரு காட்சி இருப்பதே அதிசியம்.
பெண்கள் தினத்தை முன்னிட்டு தமிழ் ஸ்டியோ நடத்திய பெண்கள் சார்ந்த திரைப்படங்கள் திரையிடல் நடைப்பெற்றது. முதல் நாள் 07/03/20 அன்று "ஹாலிவுட் திரைப்படம் Jeanne dielman, 23commerce quar 1080Brussels" , "பாலிவுட் Queen", kollywood shortfilm மற்றும் ஆவணப்படம் திரையிடல் நடைப்பெற்றது. அந்த நிகழ்ச்சி பலரும் கலந்துக்கொண்டனர். 2020