ஆசிரியர்களை காதலிக்கும் மாணவர்களின் அனுபவமே அழியாத கோலங்கள்.
குழந்தையின் மழலை தன்மை முதல் இருந்தே நம்மை கவர்க்கும் ஒருவர் ஆசிரியர்கள். அந்த கவர்ச்சி என்பது அந்த ஆசிரியரின் பேச்சிலோ செயலிலோ அல்லது பாடம் நடத்தும் விதத்திலோ நட்பு பாராட்டும் வகையிலோ இப்படி எதுலையாவது இருக்கலாம். (அசிரியர்களை காதலிக்கும் மாணவர்கள்) உதாரணத்திற்கு நிறைய திரைப்படங்களிலும் மற்றும் உண்மையான அனுபவமே அனைவருக்கும் இருக்ககூடும். அசிரியர்கள் என்று நம்மை கவர்ந்தவரை நாம் பார்ப்பது ஒரே பக்கம் மட்டும்தான். அந்த பக்கத்தில் அவர்கள் ஹீரோவாக இருப்பர். யாருக்கு அந்த ஆசிரியரை பிடிக்குதோ அவங்களுக்கு மட்டும். மற்றவர்களுக்கு வில்லன் தான்.
அந்த ஆசிரியரை முழுவதும் கவனித்து அவங்க அப்படி பண்ணாங்க. இப்படிச்சொன்னாங்க என்று நண்பர்களிடம் பேசி மகிழும் பலர் நம்மை சுற்றி இருக்கின்றனர். ஒரு பெண் ஆசிரியரைப் பார்த்து ஒரு பையன் காதலிப்பான் அவங்க சொல்லற வார்த்தையை வேத வாக்காகயெடுத்து செய்வான். அவங்க முன்னாடி நம்ப கௌரவம் போக கூடாதென்று நினைப்பான். ஒரு பொனோ அவங்க நமக்கிட்ட பேச மாட்டாங்களானு ஏங்குவாள்.
ஒரு ஆண் ஆசிரியரைப் பார்த்து ஒரு பையன் அவர மாதிரியே நாபோலும் இருக்கனும் என்றும், ஒரு பொன் ஓர கண்ணால ஆசிரியரைப் பார்ப்பதும் அவரு ஒரு வார்த்தை பேசிட்டால் போதும் எதோ வரமே கிடைச்சமாதிரி நினைக்கும். நாம் படிக்கும் காலத்தில் நமக்கு பிடித்த ஆசிரியரிடம் அவமானம் பட்டு நிற்பது ரொம்ப கொடுமை. இந்த மாதிரி பள்ளி பருவம் முதல் பல்கலைகழக பருவம் வரை பல காதல் கதைகள் இருக்கு. நான் நிறையவே என் கண்ணால பார்த்திருக்கேன்.
திரைப்படங்களிலும் ஆசிரியர்கள் மீது மரியாதையும் அன்பும் இருக்கற பல காட்சிகளைப் பார்த்திருப்போம். மேலும் சினிமா ஆரம்பித்த காலத்துல இருந்தே பல படங்களின் ஆசிரியர்கள் மீது மாணவர்கள் காதல் வளர்ப்பதும். உதாரணமாக எடுத்துக்கொள்வதும், ஆதித அன்பு வைப்பதும் போன்ற பல காட்சிகள் அமைந்திருக்கு. நிஜத்திலும் படிக்கும்போது அந்த அனுபவம் கண்டிப்பாக எல்லாருக்கும் இருக்கும். அந்த நினைவுகளை ஞாபகப்படுத்தி திருப்பி பார்ப்பதே நம் அழியாத நினைவுகள்.
இப்படி உங்களுக்கும் நிறைய அழியாத நினைவுகள் கண்டிப்பாக இருக்கும். யோசித்துப்பாருங்க.
20 வயது நிரம்பிய ஒரு இளைஞனுக்கு கண்டிப்பாக ஒரு Dream Girl இருப்பாங்க. அந்த பொன்னு ஒரு சினிமா பிரபலமாக இருக்கலாம், பக்கத்து வீட்டு அக்காவாக இருக்கலாம், எதிர் வீட்டு ஆன்டியாக கூட இருக்கலாம். ஏன், யாருனே முன்ன பின்ன தெரியாத பெண்ணாக கூட இருக்கலாம்.
அப்படிதான் இந்த பையனுக்கு கனவுல ஒரு பொன்னு வருது. அதோட நேருல பேச முடியலனு ஏங்கறான். ஆனால் கனவுல நேருல இருப்பதுப்போல நினைச்சு அந்த பொன்னுட்ட என்னன்ன சொல்லறானு பார்ப்போம்.
பார்ப்பதற்கு அந்த நிலவைப்போல அழகாக இருக்கும் பெண்ணே, என் கனவில் வருவது நீ தானா..நீ வரும்போது உன் பெண்மைக்குரிய வாசனை வருகிறது. அப்போ நிஜமாதான் வருகிறாயா...
உன் கண்ணை பார்க்கையில் ஒரு நூறு நிலாக்கள் ஒன்று திரண்டால் எப்படியிருக்குமோ அவ்வளவு வெளிச்சம் வருகிறது. அப்போது என் மனம் ஒரு நூறு புறாக்கள் ஒன்னு திரண்டால் எப்படியிருக்குமோ அவ்வளவு கரைபடியாத வெண்மையாக இருக்கிறது என் மனம். நான் தூங்குவதற்கு கண்ணை மூடினாலே உனது ஞாபகங்கள் தான். நீ என் வாலிபத்தை தூண்டுகிறாய்.
கண்களுக்கு தெரியாத காற்று மாதிரி என் கனவில் நீ வந்திட்டுப்போகிறாய். பிறகு எனது தூக்கம்
கலைந்துப்போகிறது.
உன்னை எங்கே வந்து பார்ப்பது என்று யோசனையாக இருக்கிறது. என் கனவில் உன் முகத்தை பார்க்க வந்தால்
அந்த பௌணர்மி நிலாவைப்போல உன்னை பார்த்தும் பார்க்காமலும் ஏங்குகிறேன். உன் பெயராவது தெரிஞ்சுக்கனும்.
என் கனவில் நீ வந்து தரும் ஆர்வத்தை நிஜமாகவே வந்து தருவையா..என்னோடு நீ உன்னோட நான் என்று உயிர்க்கு உயிராக உறவாட வருவாயா...
நீ யார் என்று தெரிந்துக்கொள்ளாமல் இருப்பது பூதங்கள் நினைந்த காட்டில் இருப்பது போல இருக்கு. நீ எங்கே இருக்கிறாய் என்று தேடிட்டுயிருக்கும் என்னோட கதி என்னாகும். ஒரு வேளை நான் மழை மேகமாக இருந்திருந்தால் உன் வீட்டில் மழைப்பொழிந்து என் ஆசை தீர உன்னையும் நினைத்திருப்பேன்.
கனவுல வரகிற பெண்ணே நீ நேரில் வரும் நேரம் எப்போ வரும். நான் உனக்காக இருக்கும் தவம் பாத்தாது என்று நினைத்து நீ என்னை பார்க்க நேரில் வரலையோ..என்ன ஆனாலும் உன்னைதான் தேடிக்கொண்டு இருப்பேன். கண்டிப்பாக நாம் இருவரும் ஒன்றுச்சேருவோம்.