விஜய்! சிவப்பு காரில் கறுப்பு மாஸ்க்! என நேற்று சன் டி.வி. குதூகலித்தது. அதை ஒரு கூட்டம் கொண்டாடிக் கொண்டிருந்தது.
இது எல்லோருக்கும் தெரியும்.
அதே சமயத்தில் விஜய் அந்தக் காருக்கும் இன்னமும் வரி கட்டல என்று இன்னொரு கூட்டம் விஜய்யை கிண்டலடித்துக் கொண்டிருந்தது.
பதிலுக்கு அவர் வரி கட்டிவிட்டார் என்று மக்கள் தொடர்பாளர் ரியாஸ், ஒரு டாகுமெண்டை வெளியிட்டுள்ளார்.
ஸ்ஸ்ஸ்ஸ்... யப்பா... விஜய்யாக இருப்பதும், அரசியல் ஆசை வைத்திருப்பதும்தான் எவ்வளவு பெரிய இம்சை.
சென்ற தேர்தலின் சைக்கிள் கதை ஏற்கனவே முடிந்தது. இந்தத் தேர்தலின் கார் கதை இன்றுடன் முடிவடைந்துவிடும் என்றுதான் நினைக்கிறோம். நாளை இன்னொரு கதை பிறக்கும், விஜய் அரசியலில் இறங்கப்போவதில்லை என்று அறிவிக்கிற வரைக்கும்..