Print this page
Thursday, 02 April 2020 10:05

மீண்டும் கோகிலா

Written by GEETHA PANDIAN
Rate this item
(1 Vote)
MEENDUM KOKILA MEENDUM KOKILA KAMAL AND SRI DEVI
கமல் ஒரு சபல புத்திக்காரர்
 
கமலின் சபல நடிப்பில் வெளியான நகைச்சுவை திரைப்படம்.  வீட்டுல சுறுசுறுப்பாக காலை எழுந்து யோகா செய்து விட்டு பொண்டாட்டி கையால தலைக்கு எண்ணெய் தேய்ச்சு குளிச்சு பொண்டாட்டி அயன் பண்ணி வைச்ச துணியப்போட்டுட்டு, பொண்டாட்டி கையால் சாப்பிட்டு சூவ் போட்டுட்டு டிப் டாபா கிளம்பி ஆபிஸ் போயி ஈ ஓட்டிட்டு வேலையே செய்யாம அசதியில தூங்கற வக்கீல் தான் மீண்டும் கோகிலா ஹீரோ.
 
நம் ஐயர் ஆளவா மணிக்கு ஒரேயொரு மனைவியும் ஒரு பொன்னும் இருக்காங்க. ஆத்துக்காரிக்கு புருஷன் மேல அப்படியொரு பாசம் நம்பிக்க. ஆனால் சார்வால் பொண்டாட்டிய பொது இடத்துக்கு கூட்டிட்டு போகறதே கௌரவ குறைச்சல். நெட்டுல மட்டும் கௌரவம் காணாம போயிடும். அது மட்டுமா இன்னொரு பொன்னு மேல அப்படியொரு நெருக்கமாவில்ல இருக்கான். 
இவன் வக்கீள் மணியா? இல்ல வழியற மணியா?
 
கேஸ் சே கிடைக்காம இருந்து, நண்பர் ஒருத்தரால ஒரு நடிகையோட சவகாசம் கிடைக்குது. அவளோட கேஸ் இந்த மணி எடுத்து நடத்துனா நல்லாயிருக்கும் னு அந்த மேனாமினிக்கி ஆசைப்பட்டாள்...
மணிக்கும் கோகிலாக்கும் கேஸ் கிடைச்சுதுல அப்படியொரு சந்தோஷம். ஆனால் மணி வக்கீலா மட்டுமா இருந்தாரு. பொண்டாட்டிட்ட பொயிச்சொல்லிட்டு அந்த நடிகையிட்ட வழிஞ்சுட்டுதானே இருந்தாரு. வெளியுர் போறது என்ன? பாட்டுப்படறது என்ன, சைக்கிள் ஓட்டறது என்ன? கதை பேசறது என்ன? சபலத்தோட பாக்கறது என்ன?...
 
ஒரு வழியா, அந்த நடிகையோட கேஸ் ல ஜெயிச்சுக்கொடுத்திட்டாரு. நாளாக நாளாக கோகிலாக்கு பயம் வந்திருச்சு. எங்க தான் புருஷன் தன்னை விட்டுட்டு போயிடுவானோனு பயந்து நேரா அந்த மேனாமினிட்டப்போயி பேசி ஒரு வாங்கு வாங்கிட்டு வந்திட்டாள்.
கடைசியா அந்த நடிகையே கண்டப்படி பேசி மணிய அவமானம் படுத்திட்டாளே..
 
சுகத்துக்காகவும் என்னோட பணத்துக்காவும் என்னோட பேசுனவங்க மத்தியில நீங்க என்னை சிரிக்க வைச்சிங்க. உங்க கிட்ட நல்ல நட்புதான் எதிர்ப்பாத்தேன். ஆனால் நீங்க தப்பான எண்ணத்தோட பழகியிருக்கேங்களே 
ஐ சே யு கெட்அவுட் னு சூட்டிங் ல எல்லாத்து முன்னாடியும் கத்திட்டாள். 
 
 பெத்த பிள்ளை உயிருக்கு போராடிட்டு கிடக்கு. அந்த நேரத்துல அந்த நடிகைதான் வந்துக்காப்பாத்துனாள். மணி, தன்னோட தவற புரிச்சுட்டு மீண்டும் கோகிலாட்டையே வந்துட்டான். 
 
கையில வெண்ணெய் வைச்சிட்டு நெயிக்கு அழச்சாங்கற கதை தான் மணியுது.
 
-கீதாபாண்டியன்
Read 445 times Last modified on Thursday, 02 April 2020 10:16

Related items

Login to post comments