வாருங்கள் படிப்போம் என்கிற வாட்சப் (இன்னான்ற) குழுவில் என்னை கொஞ்சம் கொஞ்சமாக இலக்கிய ஆர்வலனாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
மானே, தேனே என கோடிட்ட இடங்களை நிரப்புவது எனக்கு எளிது. ஆனால் திடீரென்று மீண்டும் கவிதை, கிவிதை எழுதிவிடுவேனோ என பயமாக இருக்கிறது.
எதற்கும் ரிவர்ஸ் மெட்டஃபர் அது இது என்று ஆங்கில பிரயோகங்களை தயாராக வைத்துக்கொள்கிறேன். என்னய்யா எழுதியிருக்க என்று கேட்டால் தப்பிக்க உதவும்.
குழுவில் வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் பலர் உற்சாகமாக பங்கேற்கிறார்கள். சீனியர்களும், விருந்தினர்களும் அவர்களை கூர்மையாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் இரு வருடங்களுக்குள் இந்தக் குழு தனித்துவம் பெற்றதாக மாறிவிடும். நம்பிக்கை தரும் புதிய எழுத்தாளர்கள் வெளிப்படுவார்கள்.
ISR செல்வகுமார்