பொம்மை இதழில் வெளியாகியுள்ள என் தந்தை ஐ.எஸ்.ஆர் பற்றிய கட்டுரை இது. இனிய ஆச்சரியமாக திரு. சித்ராலட்சுமணன் இன்று அனுப்பி வைத்தார்.
உங்கள் வலைமனையில் இன்று நீங்கள் எழுதிய கவிதையை நானூறு வருடங்கள் கழித்து செக்கோஸ்லேவாக்கியாவில் யாரோ ஒருவர் முதன் முதலாகப் படிக்கலாம். இன்டர்நெட் வந்த புதிதில், நாற்பது வருடங்களுக்கு முன்பு, சுஜாதா எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி இது.
அவருடைய கணிப்பு உறுதியாகியிருக்கிறது. 50 வருடங்களுக்கு முன்பு என் அப்பாவைப் பற்றி ”பொம்மை” இதழில் வெளியான இந்தக் கட்டுரையை யாரோ டிஜிட்டல் வடிவத்திற்கு ஸ்கேன் செய்து பாதுகாத்திருக்கிறார்கள். உற்று நோக்கினால் ”Digitized by RMRL" என்ற பதிவு பொடி எழுத்தில் பதிவானது தெரிகிறது. அவர்களுக்கு நன்றி!
இதில் நான் வியப்பது திரு.சித்ரா லட்சுமணன் அவர்களின் அக்கறையை. குறைந்தபட்சம் 50 வருட தமிழ் சினிமாவை அவர் தன் ஞாபக அடுக்குகளில் சேமித்து வைத்திருக்கிறார். அந்த நினைவுகளில் என்னைப் போன்றவர்கை கோர்த்தும் வைத்திருக்கிறார். இன்று எங்கள் தந்தையைப் பற்றிய நினைவலைகளில் மீண்டும் எங்களை திளைக்க வைத்திருக்கிறார். நன்றி சார்!
- ISR செல்வகுமார்





