Log in

Register



அமீரகத்தில் வசிக்கும் தமிழர்களுக்காகவே ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது "The Tamil Radio"

இந்த இணைய வானொலியில் காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. தொகுப்பாளர் நாகா வழங்கும் இந்நிகழ்ச்சியில் அவருடன் இயக்குநர் ஐ.எஸ்.ஆர் செல்வகுமார் உரையாடுகிறார் இந்நிகழ்ச்சி இன்று (16.02.2022) இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

இந்நிகழ்ச்சியில் ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் எதையெல்லாம் இரசிக்கிறான், Crush, Pubbly Love என்றால் என்ன? யாதெனக்கேட்டேன் படத்தில் உள்ள காதல் - போன்ற பல சுவாரசியமான தகவல்களை இயக்குநர் ஐ.எஸ்.ஆர் செல்வகுமார் பகிர்ந்து கொள்கிறார்.

நிகழ்ச்சியை பின்வரும் இழையில் கேட்கலாம்.

https://thetamilradio.com/#/

வாய்ப்பும் நேரமும் உள்ளோர் உரையாடலை கேட்டுவிட்டு உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

 

 

Published in ISR Press Release
MovieWud OTTயில் வித்தையடி நானுக்கு ரிலீஸ்!
 
தமிழ் திரையுலகம் மிகத்துரிதமாக மாற்றங்களுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. MovieWud என்பது ஒரு மாற்றத்தின் அடையாளம். நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற ஓடிடி. செயலிகள் தமிழ் சினிமாவிற்கான கதவைத் திறந்துவிட்டிருக்கின்றன. ஆனால் அவற்றில் பெரும்பாலும் மற்ற மொழிப்படங்கள், பெரிய நட்சத்திங்கள் இல்லாத தமிழ் படங்களுக்கு குறைவான வாய்ப்பு என்கிற குறைகள் உள்ளன.
 
இதுபோன்ற சூழல்கள்தான் மூவிவுட் போன்ற புதிய ஓடிடி செயலிகளுக்கு தூண்டுதல். தூர்தர்ஷன் கதவை இறுக்கமாக மூடியிருந்தபோது, சாமானியனும் தன் முகத்தை டிவியில் பார்க்க முடியும் என்கிற சூழலை சன்டிவி உண்டாக்கியது. அதன் மூலம் வேகமாக மக்களைச் சென்றடைந்தது. பின்னாளில் ஸ்டார் டிவி வந்தாலும் அதில் தமிழ் நிகழ்ச்சிகள் இல்லாத காரணத்தால் சன் டிவியின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.
 
கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு சூழல் ஓடிடி உலகில் உண்டாக்கியிருக்கிறது. நெட்ஃபிளிக்ஸ், அமேசான் போன்ற தளங்கள் இன்னும் எல்லோருக்குமானதாக மாறவில்லை. அவை மாறுவதற்குள் அந்த மாற்றத்தை மனதில் வைத்து எல்லோருக்குமான ஓடிடியாக MovieWud வந்துள்ளது. இதற்கும் போட்டியாக இன்னும் பல ஓடிடிகள் வரும்.
மாறிவரும் இந்தச் சூழலில் எங்கள் ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனமும் புதிதாக ஓடிடியை உருவாக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறது. ஆனால் அதன் வடிவமும், உத்திகளும் முடிவாக இன்னும் சில காலம் பிடிக்கலாம். ஆனால் எந்த வடிவத்தில் வந்தாலும் அதற்கு படத் தயாரிப்பு நிறுவனங்களும், ஓடிடி நிறுவனங்களும் கைகோர்த்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
எனவே புதிய ஓடிடி தளங்களுடன் கை கோர்க்க முடிவெடுத்திருக்கிறோம். அடுத்த படம் ”யாதெனக் கேட்டேன்” நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்தச் சூழலில் அதுவும் ஓடிடியில் வௌியாகத்தான் அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே அதற்கு முன் முதல் முயற்சியாக எங்களின் முதல் திரைப்படம் ”வித்தையடி நானுனக்கு” MovieWud OTTயில் வெளியாகியிருக்கிறது.
இரண்டே இரண்டு பேர் நடித்துள்ள அந்தப் படத்தை ராமநாதன் கே.பகவதி இயக்கியுள்ளார். வெளியானபோது நல்ல தியேட்டர்கள் கிடைப்பதில் சிரமமிருந்தது. அதனால் அதிக இரசிகர்களை சென்றடையவில்லை. இப்போது மூவிவுட் ஓடிடியில் மிக எளிதாக வெளியாகியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
படத்தை பார்த்துவிட்டு படத்தைப் பற்றியும் MovieWud OTTயும் எப்படி இருக்கின்றன என்பதை பதிவு செய்யுங்கள்.
 
This is the download link for MovieWud App.
 
நன்றி!
ஐ.எஸ்.ஆர் செல்வகுமார்
ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ்
Published in ISR Selva speaking
Sunday, 22 March 2020 07:11

#StayAtHome அண்ணாத்த!

#StayAtHome அண்ணாத்த!

ரஜினிகாந்தைச் சுற்றி 10 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் வைத்திருக்கும் யுடியூப் அரசியல் அறிஞர்கள் இருக்கிறார்கள் என நினைக்கிறேன். அவர்களின் வாட்ஸ்அப் அறிவையும், மேம்போக்கான வைரல் உளறல்களையும் தன்னுடைய கருத்துக்களாக ரஜினிகாந்த் பேச ஆரம்பித்திருக்கிறோரா என்கிற சந்தேகம் வர ஆரம்பித்துவிட்டது. கொரோனா வைரஸ் தொடர்பாக அவர் தவறான தகவல் தந்ததாக அவருடைய ட்வீட் ஒன்றை டிவிட்டர் நிறுவனமே நீக்கிவிட்டது. இந்த நடவடிக்கை ரஜினி இரசிகர்களுக்கு மட்டுமல்ல, ரஜினிகாந்துக்கே மிகப் பெரிய அதிர்ச்சி தந்திருக்கும். அவருடைய ஒவ்வொரு வார்த்தைக்காகவும் காந்திருந்த மீடியா, அவர் தானாக முன் வந்து பேசியதையே நீக்கியிருக்கிறது.

திரு.ரஜினிகாந்த் அவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். அந்த யுடியூபர்களின் கருத்துக்களை நிறைய பேர் இரசிக்கிறார்கள் என்பது உண்மைதான். தனக்குப் பிடிக்காதவர்களை அவர்கள் தைரியமாக விமர்சிக்கிறார்கள் என்கிற ஒரே காரணத்துக்காக அவர்களை பல பேருக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் அவர்கள் வெறும் எண்டர்டெயினர்கள்தான். அதை நமட்டுச் சிரிப்போடு ஃபார்வர்டு செய்வதோடு சகலரும் மறந்து போய்விடுவார்கள். ஆனால் அதையே நீங்கள் சொன்னால், அதை அந்த அரைகுறை யுடியூபர்களைத் தவிர எவரும் ஏற்கமாட்டார்கள். வார்த்தைக்கு வார்த்தை ஆராய்வார்கள், ஏன் இந்த விமர்சனம் அல்லது ஆதரவு என்று கேள்வி கேட்பார்கள்.

ஏனென்றால் நீங்களும் அந்த அரை குறை வாட்ஸ்அப் அறிஞர்களும் வேறு வேறு. உங்களுக்கென்று கோடிக்கணக்கான இரசிகர்கள் கடந்த 40 வருடங்களாக இருக்கிறார்கள். அவர்களின் துணையோடு நீங்கள் அரசியலுக்கு வந்துவிடுவீர்களோ என்கிற எண்ணமும், எதிர்பார்ப்பும் தமிழகம் முழுக்க இப்போதும் இருக்கிறது. அதனால் நீங்கள் மைக் முன்னால் பேசும் வார்த்தைகளில் அரசியல் நேர்மையும், விமர்சனங்களில் அனுபவ அறிவும், கருத்துகளில் அரசியல் தெளிவும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால் கடந்த சில மாதங்களாக நீங்கள் உங்களுக்கு நெருங்கியவர்களாக காட்டிக் கொள்பவர்களும், உங்களுடைய வாட்ஸ்அப்தனமான பேச்சுகளும், அரசியல் முன்னெடுப்புகளும் மிகுந்த ஏமாற்றத்தைத் தருகின்றன. நான் உட்பட உங்களை இரசித்த இரசிகர்களில் 90% சதவிகிதம் பேரை தர்மசங்கடத்துக்குள்ளாக்கிவிட்டீர்கள். இரசிகர்களுக்கே இந்த ஏமாற்றம் என்றால், உங்களை மாபெரும் சக்தியாக நினைத்து உங்களுக்கு ஆதரவு தரத் தயாராக இருந்த அனுபவம் மிகுந்த அரசியல் தலைவர்களின் மனநிலை இன்னும் ஏமாற்றமாக இருக்கும் என யூகிக்கிறேன்.

கருணாநிதி, ஜெயலலிதா என்கிற ஆளுமைகள் இருந்தபோது அவர்களுக்கு எதிரானவர்கள், உங்களின் பிம்பத்தைக் காட்டி அவர்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தார்கள். அதனால் அப்போது பெரிய அளவில் எடுபட்ட உங்கள் பிம்பம் தற்போது எடுபடவில்லை. உங்கள் பிம்பம் யாருக்கு ஆதரவானது அல்லது எதிரானது என்பதில் உங்களுக்கே குழப்பம் வந்துவிட்டது. அதனால் மிக இயல்பாகவே உங்களின் 40 வருட பிம்பம் அந்த ஆளுமைகளுக்குப் பின் மெல்ல மெல்ல மங்கி வருகிறது.

இ.பி.எஸ், ஓ.பி.எஸ், தினகரன், ஸ்டாலின் போன்றவர்களின் பதவி சேஸிங் விளையாட்டை மக்கள் இரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஏனென்றால் அவர்கள் தைரியமாக களத்தில் இருக்கிறார்கள். அவர்களில் யாராவது ஒருவரை தங்களை ஆள தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். நீங்கள் இவர்கள் உள்ள களத்தில் இல்லவே இல்லை. ஆனால் நீங்களும் ரேஸில் இருப்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்க நினைத்து தோற்றுக் கொண்டிருக்கிறீர்கள். இந்த விஷயத்தில் உங்கள் நண்பர் கமல் பரவாயில்லை. களத்தில் இருக்கிறார்.

நீங்கள் மதித்த ”சோ சார்” என்பவருக்கு மாற்றாக சில்லறைத்தனமாகப் பேசி கைதட்டல் வாங்கும் ”ஆன்லைன் பிரபலங்களை” உங்களைச் சுற்றி நியமனம் செய்திருப்பதாக கேள்விப்படுகிறேன். இது உண்மையோ, பொய்யோ உங்களுடைய இன்றைய நிலை மிகவும் பரிதாபகரமானது.

நீங்கள் குறிப்பிட்ட வெற்றிடம் உருவாகிக்கொண்டிருக்கிறது. ஆனால் அரசியலில் அல்ல, சினிமாவில். சினிமா நீங்கள் விட்டுக் கொண்டிருக்கும் இடம், அரசியல் நீங்கள் தொடத் தயங்கும் இடம். உங்களுடைய இப்போதைய இடம் என்ன? மிகப் பெரிய கேள்விக் குறிதான் பதில்.

பி.கு - அண்ணாத்த படம் ரிலீசாகும்போது வழக்கம் போல பார்ப்பேன், அதே போல டிஸ்கவரில் சேனலில் ஒளிபரப்பாகும் ”Into the Wild" அட்வென்சர் (?) நிகழ்ச்சியையும் பார்ப்பேன்.

- ISR Selvakumar

Published in ISR Selva speaking

”கொஞ்சம் வழுகலா கொடுங்க”

விசுக்கென்று தலை சீவிய இளநியை தந்துவிட்டு, ஒரு பேப்பர் ஸ்ட்ராவை செருக முயன்றார் இளநிக்காரர். திடீரென்று கொரானா ஞாபகம் வந்தவுடன் மின்னல் வேகத்தில் ஸ்ட்ராவை மறுத்துவிட்டு, நான் அப்படியே இளநியை உறிஞ்சினேன். அதற்குப்பின் அவர் இளநியைப் பிளந்து தேங்காயை எடுத்து தரும்போது, சீவிய அரிவாளில் கொரானோ இருந்திருக்குமோ என சந்தேகம் வந்துவிட்டது. இப்போது தேங்காயை சாப்பிடலாமா? வேண்டாமா? என ஒரு ஊசலாட்டம். அந்த இளம் தேங்காய் சாப்பிடு என்றது. கொரோனா பயம் வேண்டாம் என்றது. யோசனையுடன் தடுமாறிக்கொண்டிந்தபோது, அந்தப் பெண்ணின் குரல் கேட்டது.

”எனக்கும் ஸ்டிரா வேண்டாம். அவருக்கு மாதிரியே நல்லா சீவி தந்திடுங்க. நானும் அப்படியே சாப்பிடுறேன்” என்ற பெண்ணின் குரல் அன்றைய ரேவதியை ஞாபகப்படுத்தியது. தோற்றம் இன்றைய த்ரிஷா. பளிச்சென்று கருநீலம் மின்னிய சுடிதாரில், காலையில் அவள் சில்லென்று என்னைப் பார்த்த பார்வை இப்போது வரை ஞாபகம் இருக்கிறது. கிட்டத்தட்ட 3 கிலோ மீட்டர், எதிரில் வந்த வாகனம், டிராபிக் மற்றும் கொரோனா உட்பட எல்லாமே மறந்துவிட்டது.

பிரேக்கிங் நியூஸ் - கருநீல சுடிதார் பெண்களிடம் கொரோனா பயத்தை பளிச்சென்று மறக்கவைக்கும் வசீகரப் புன்னகை இருக்கிறது.

- ISR Selvakumar

Published in ISR Selva speaking

இரவு பதினோரு மணிக்கு செக்கில் ஆட்டிய எண்ணையைத் தேடி ஒரு மளிகைக் கடைக்குள் நுழைந்தபோது...

வாசலில் இருந்த பூண்டு மூட்டைகளை தூக்கி வைத்தபடியே அவன் கேட்டான்.

”என்ன அண்ணே இப்படி ஆயிருச்சு? எல்லாத்தையும் மூடச் சொல்லிட்டா எப்படிண்ணே பொழைக்கிறது?”

”டேய்ய்ய்ய்... ரொம்ப ஃபீல் பண்ணாத. உன் டாஸ்மாக்கை மூடச் சொல்லல. அது தெறந்துதான் இருக்கு.”, என்றார் பில் போட்டுக்கொண்டிருந்தவன்(ர்)

நான் எண்ணையை எடுத்துக் கொண்டு பில் போட வந்துவிட்டேன்.

அவன் அடுத்த பூண்டு மூட்டையை தூக்க முடியாமல் தடுமாறிக் கொண்டே.. ”ஐயய்யோ நாளைக்கு கிடைக்காதுன்னு நெனச்சு எக்ஸ்ட்ராவா ரெண்டு குவார்ட்டரை வாங்கிட்டேனே.”, என்றான்.

எருமை, உன் வேட்டிக்குள்ள இருந்து பாட்டில் சத்தம் வந்தப்பவே நெனச்சேன். கஸ்டமர் இருக்கும்போது ஏண்டா இங்க வர்ற, உங்களுக்கு வேற என்ன சார்?

நான் பதில் சொல்லும் முன் இன்னொரு குரல் கேட்டது, அரை டிரவுசரில் தாடி வைத்த பாச்சுலர் பையன். அவன் எப்போது உள்ளே வந்தானோ...

”குமாரு (பெயரை மாற்றிவிட்டேன்), எனக்கு அவன் கிட்ட இருந்து ஒரு பாட்டிலை தேத்திக் குடு. வாங்க மறந்துட்டேன்”, என்றான்

வாசலிலிருந்தே, ”மேல பத்து ரூபா”, என்றான் பூண்டு மூட்டைக்காரன்.

உற்சாகமான இரவு வணக்கம் மக்காஸ்! குடி குடியைக் கெடுக்கும். கொரானாவை என்ன செய்யும் எனத் தெரியவில்லை. ஊரெல்லாம் டாஸ்மாக் கடை வழக்கம்போல இயங்கிக் கொண்டிருக்கிறது.

Published in ISR Selva speaking

பஹீரா - பிரபுதேவா படத்துக்கு நண்பர் சிவாவின் டைட்டில் டிசைன்.

ஐ.எஸ்.ஆர்.வென்சர்ஸ் தயாரித்து வரும் யாதெனக்கேட்டேன் பட டைட்டிலையும் இவர்தான் டிசைன் செய்தார்.

Title Design for the upcoming Tamil movie #Bagheera, Starring Prabhudeva Master. and directed by Adhik Ravichandran.

#யாதெனக்கேட்டேன் பட நாயகி விஷாலி, இயக்குநர் ஐ.எஸ்.ஆர் செல்வகுமார் மற்றும் சிவா (Siva Digital Art)

#யாதெனக்கேட்டேன் இயக்குநர் ஐ.எஸ்.ஆர் செல்வகுமார் மற்றும் டைட்டில் டிசைனர் சிவா (Siva Digital Art)

 

Published in Cine bytes

ஆயில் புல்லிங் என்கிற புதிய பழக்கம் ஆரம்பித்திருக்கிறது. பல்வலிக்கு மாத்திரையை விழுங்குவதற்கு பதில் ஆயில் புல்லிங் பலன் தருமென்று என் சித்தப்பா சொன்னார். அவருடைய நல்லெண்ணை வாக்கு பலித்துவிட்டது. பல்வலியைக் காணோம். தற்போது வாயில் நல்லெண்ணையை நிரப்பிக் கொண்டு, அதை வெளியேற்றும் வரையில், ஏதாவது புத்தகத்தைப் புரட்டும் புதிய உபரிப்பழக்கம் வந்துவிட்டது.

இன்றைய புரட்டல் கணையாழிக் கதைகள் (1995-2000) என்கிற சிறுகதைத் தொகுப்பு. என்றைக்கு வாங்கினேன் எனத் தெரியவில்லை. இன்றைக்குத்தான் சிக்கியது. அதில் ”ஆளில்லாச் சந்துகளில் மரணக் குரலின் நடமாட்டம்” என்கிற கதைதான் முதலில் கண்ணில் பட்டது. தமயந்தி எழுதியது. ஆனால் கதையின் பெயர் அதிகாலை புத்தக ஆர்வத்துக்கு பொருந்தவில்லை. எனவே வேறொரு கதைக்குத் தாவினேன்.

நள்ளிரவில் தூக்கம் வராமல் டீக்கடைக்குப் போகும் குமார், அங்கே கடைசி பஸ்ஸை தவறவிட்டுவிட்டு காத்திருக்கும், ஊர்க்கார பெண்ணைக் காண்கிறான். கண்ணாடி ஜாக்கெட், மல்லிகைப் பூ, நீண்ட ஜடை என அவளைப் பற்றிய வர்ணனை நாயகன் குமாருக்குள்ளும், வாசிக்கும் எனக்குள்ளும், அந்தப் பெண்ணைப் பற்றி, ஒரே மாதிரியான எண்ணங்களைத்தான் உருவாக்கியதா எனத் தெரியவில்லை.

ஆனால் அவள் குமாருடன் அவனுடைய வீட்டில் அன்றைய இரவு தங்கிக் கொள்ளட்டுமா எனக் கேட்கும்போது எனக்கு சுவாரசியம் அதிகமாகிவிட்டது. இந்த வரியில் இதை வாசிக்கும் உங்களுக்கும் சுவாரசியம் வந்திருக்கும். இருவரும் வீட்டுக்கு நடந்து போகும் சொற்ப தூரத்தில் அந்தப் பெண், பழைய முதலாளியின் பெண் என்பதும், தற்போது நொடித்துப் போயிருக்கிறாள் என்பதையும் கதை நமக்குச் சொல்லிவிடுகிறது.

அவள் சூடியிருந்த மல்லிகைவாசம் இருவரும் ஒன்றாக வீட்டுக்குள் நுழைந்த மறுவினாடி குமாருக்கும் எனக்கும் இரட்டிப்பாகிவிட்டது. அந்த மல்லிகைவாசமும், இரவில் தனியாக ஒரு பெண்ணின் அருகாமையும் தன்னை புரட்டிப் போட்டுவிடக் கூடாது என்பதற்காக அவன் அவளுக்கு தன் அறையைக் கொடுத்துவிட்டு, விளக்கெறியும் வெளி அறையில் ஏதோ புத்தகத்தைப் புரட்டுகிறான். உறக்கம் வராமல் அவளும் தன் கணவன் தன்னை விட்டுப் போனதையும், வேறொரு பெண்ணுடன் வாழ்வதையும் அழுகையுடன் சொல்கிறாள்.

இறுதியில் உன்னைப் போல மனதில் களங்கம் இல்லாத ஒருவன் இருப்பதால்தான் நான் இன்னமும் உயிரோடு இருக்கிறேன் என்பாள். அத்துடன் கதை முடிகிறது. ”அவள் நல்லதொரு சகோதரியாய், தோழியாய் தெரிந்தாள்” என கடைசி வரி முடிகிறது.

கிட்டத்தட்ட இதே கருவில் ”சந்நியாசிகள்” என்றொரு சிறுகதை நான் எழுதியிருந்தேன். விகடனில் பிரசுரமானது. இதில் வரும் குமாருக்குப் பதில் அதில் சுரேஷ். பெயரில்லாத ஊர்காரப் பெண்ணுக்குப் பதில் அவனுடைய தோழி. இருவரும் தனியாக அவளுடைய வீட்டில் இருக்க நேர்கிறது. அப்போது அவர்களுக்கு இடையே ஏற்படும் டீன் ஏஜ் மனக்குழப்பங்கள் இப்படித்தான் கடைசி வரியில் முடிந்துவிடும். அதற்கு முந்தைய சில வரிகளில் அப்பெண்ணின் அண்ணன் வருவான். அவர்கள் தனியாக இருப்பதைப் பற்றி எந்த புருவ உயர்த்தலும் இல்லாமல் இயல்பாகப் பேசுவான். எந்த சந்தேகமும் இல்லாத அவனுடைய இயல்பு இவர்களுக்குத் தெளிவு தரும்.

இரண்டுமே இரு இளைஞர்களின் பார்வையிலிருந்து எழுதப்பட்டது. அந்தப் பெண்களின் கோணத்திலிருந்து யாராவது இதே கதைகளை எழுதினால் அது இன்னும் நிச்சயம் வித்தியாசமாக இருக்கும். அதை பெண்கள் மட்டுமே எழுத முடியும் என நினைக்கிறேன்.

சொல்ல மறந்துவிட்டேனே.. நான் வாசித்த கதாசிரியரின் பெயர் ”பாப்லோ அறிவுக்குயில்”, கதையின் பெயர் ”தோழமை என்பது…”

உங்க அனுபவத்திலிருந்து நீங்க சொல்லுங்க… தோழமை என்பது என்ன…?

Published in ISR Selva speaking
Friday, 17 January 2020 08:37

The Comapany

 THE COMPANY

Based in Chennai, ISR Ventures' mission is and will always be to create fresh talents to deliver value based quality content with innovation and detail, that touch lives across the globe.”

Mr. ISR Selvakumar has been the lead man of ISR Ventures. In his capacity at the helm, he not only leads from front but keep working with the students and youngsters.

With nearly 25 years of experience in Television Media he has committed himself to blend experience with fresh talents.

we nurture an environment of mutual respect and integrity. Every member of this family is encouraged to innovate, and supported to deliver work to the best of their potential.

He motivates every team member to innovate processes that facilitates continuous learning and elevates the quality of team as well the individual.

Published in Management
Friday, 17 January 2020 08:37

Our Story

OUR STORY

Founded in 2009 by ISR Selvakumar & Actor Solai is an innovative and creative production house.Now focusing on Independent film production, Web series and Life coach programs for aspiring Media enthusiasts.

Vithiyadi Naanunakku (2016)
ISR Ventures co produced this movie with L9 productions. The thriller is very unique with just two characters.

Yadena Kayten (2020)
This movie is directed by ISR Selvakumar with freshers in the lead is in the final stages of production.

The company is very proud to be a gateway for new comers aiming to create a content rich digital media. ISR Ventures are content creators, unbound by formats and methods of making.

We strongly believe in creating content that not only entertains, but fuels the imagination of the viewer and trigger them to think and discuss.

Our strength is value based story telling, strong narratives with quality production. We are passionate to have a ever expanding team of fresh story developers with a free flowing creativity, to develop them into audio-visual scripts.

Published in Management
Monday, 30 December 2019 03:40

Thank you Kathadi Ramamurthy sir

Thank you so much Kathadi Ramamurthy Sir!

A true legendary actor, even after 5 decades, his love and passion towards acting is amazing. He continuously performs stage plays even at this age.

He gracefully accepted to talk about his experiences with our father actor ISR.

So we are happy to announce that along with Mr. Delhi Ganesh, Mr. Kathadi Ramamurthy will also feature in our documentary about our father ISR.

A big thanks from ISR Family and ISR Ventures sir!

In the photo (L-R): Mr. Solai (ISR's brother), Mr. Kathadi Ramamurthy and Mr. Ravikumar (ISR's son)

Published in ISR Press Release
Page 1 of 2