Log in

Register



காணாமல் போன லாட்டரி டிக்கெட் கிடைக்குமா? 
 
லாடட்ரி டிக்கெட் மோகன் மற்றும் சுஹாசினி நடிப்பில் வெளியான நகைச்சுவை திரைப்படம். வாழ்க்கையில பொன்னுங்க சமாசாரமே தெரியாம ஒரு பொன்னுட்ட அடிய வாங்கிட்டு, யாரு என்னச்சொன்னாலும் கண் மூடி தனமா நம்பிட்டு ஒருத்தன் இருக்கானா அது இந்த படத்தோட ஹீரோதான். அப்படிப்பட்ட ஒருத்தன் வேலைச்செய்யற கம்பெனிய பத்தி சொல்லிய ஆகனும். 
 
மேனேஜ் இல்லாத நேரத்துல ஒரே கூத்தும்  கும்மாளமும் காமெடியும் தான். வேலை எதுவும் செய்யறதுல்ல. அடிக்கடி மேனேஜ் ட்ட திட்டு வேற வாங்குனாதான் அங்க இருக்கறவங்களுக்கு தூக்கமே வரும். அதுல நம்ப ஜீரோ இல்ல ஹீரோ வாங்காத திட்டே இல்ல. 
 
இவன மாதிரி ஒரு கேரக்டருக்கு கல்யாணம் நடக்கறதே ஒரு லாட்டரி டிக்கெட்தான். இவன் ஒரு ராசியே இல்லாதவன். ஏன் சொல்லறேனு தெரியுமா? ஒருத்தருக்கு கல்யாணம் ஆனா மட்டும் போதுமா ....?
 
முதல் முறை நடக்கற முதல் இரவில், முதல் இரவை பத்தி ஒரு புத்தகம் படிச்சு அதன் படி நடந்துக்கிறான். பாதி புக் படிச்சிட்டு இருக்கும்போதே "ஹீரோவோட அப்பா சரக்கு நினைச்சு பினாயில் குடிச்சு அட்மிட் ஆகிட்டாரு". சோல மக்கா போச்சா..
 
அப்பறம் ஆடி மாசம் காத்துயடிக்க, பொண்டாட்டி அவங்க அம்மா வீட்டுக்குப் போயிட்டாள். மனசு அளவுல மட்டும் இல்ல. எல்லா வகையிலும் ரொம்ப வருத்தம் ஆகிட்டான்.  
 
ஒரு முறை சில்லரை முறிப்பதற்காக லாட்டரி டிக்கெட் வாங்கறாங்க. அது தொலைஞ்சுப்போயி விடுகிறது. அந்த டிக்கெட் சில்க் ஸ்மிதா கையில கிடைக்கவே...அந்த நேரம் பார்த்து லாட்டரில அதிஸ்டம் இல்லாத புது மாப்பிள்ளைக்கு 10 லட்சம் பரிசு விழுது. 
 
இரண்டாவது முறை முதல் இரவில், அந்த லாட்டரி டிக்கெட் காணாம போனாதால், நின்னுப்போச்சு. இதுக்கு நடுவுல சில்க் ஸ்மிதா தன்னோட வேலையை காட்ட,  இரண்டு பேருக்கும் இடையில் சண்டையாகுது. என்னை ரொம்ப நல்லவனு நிர்பிக்க பொண்டாட்டிக்காக 10 லட்சம் எல்.எஸ்.சி போட்டு தன்னை கொலைச்செய்வதாக ஒரு ரவுடியிடம் போன் பேசுகிறான். 
 
10 லட்சம் வருவதை விடக்கூடாதுனு  நினைச்சு என் கணவனோட அன்பை புரிஞ்சுட்டு மனைவி அவனை ஏத்துக்கிறாள். பின்னர் மூன்றாவது முறையாக முதல் இரவுக்கு ஏற்பாடு நடக்குது. எல்லா பிரச்சனையும் சரியாகியிருச்சுனு நினைக்கும்போது அந்த ரவுடியை நேரடியாக பார்த்து தன்னை கொல்ல வேண்டாம் என்று கெஞ்சுக்கிறான். ஆனால் அவனை ரவுடி நம்பவில்லை. இந்த முறையும் முதல் இரவு போச்சா...
 
எப்படி ரவுடியிடமிருந்து ஹீரோ தப்பிப்பார்? பணத்துக்காக பேராசைப்பட்டு வெகுளியான மோகன் and சுஹாசினியை கொல்லத்துடிக்கும் சில்க்யிடமிருந்து ரவுடி பிரபு காப்பாற்றுவாரா? இவர்கள் முதல் இரவு நான்காவது முறையாவது நடக்குமா? லாட்டரி டிக்கெட் கிடைக்குமா? என்பதே இப்படத்தின் உச்சக்கட்டம். 
 
-கீதாபாண்டியன்
 
 
Published in Actor ISR
 
யார் என்றால் அது நடிகர் மோகன்தான்.. 
 
இன்னும் ஒரு சுவாரஸ்யம்... கமல் படத்தில் சின்ன சின்ன வேடங்களில் அறிமுகமானவர்கள் பிற்காலத்தில் அவருக்கு ரெண்டு பேர் ஃடப் பைட் கொடுத்தார் ஒருவர் ரஜினி மற்றவர் மோகன் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா-?
 
ஆம் ரஜினி கமலுக்கு இணையான சில்வர் ஜூப்ளி நாயகன் மோகன் என்றால் நம்புங்கள்.
 
1980 ஆம் ஆண்டில் இருந்து 1990 வரை ரஜினி கமலின் தூக்கத்தை கெடுத்ததில் மோகனுக்கு முக்கிய பங்குண்டு....
 
1977 ஆம் ஆண்டு கமல் நடித்த கோகிலா மூலம்..... பாலுமகேந்திராவால் அறிமுகம் செய்யப்பட்டார்.. அதன் பின் 1980 ஆம் வெளிவந்த மூடுபனி..மற்றும் மகேந்திரனின் நெஞ்சத்தை கிள்ளாதே... அவருக்கு ஸ்டார் அந்தஸ்தினை பெற்றுக்கொடுத்தது எனலாம்.
 
அதன் பின் வெற்றியோ வெற்றிதான்... 
 
திரும்பி பார்க்க முடியாத , நினைத்து பார்க்க முடியாத, கனவிலும் நினைத்து பார்க்க முடியாத வெற்றி விழா படங்களில் நடித்தவர் மோகன்...
 
பயணங்கள் முடிவதில்லை... மற்றும் கிளிஞ்சல்கள் படங்களில் மோகனை தமிழ் ரசிகர்கள் தலைக்கு மேல் தூக்கி வைத்து கொண்டாடினைர்கள்..
 
25 நாள்  ஓடினால் இப்போது எல்லாம் பெரிய வெற்றி... 
 
மோகன் நடித்த பயணங்கள் முடிவதில்லை...500 நாட்கள் ஓடி சாதனை புரிந்த படம் என்றால் நம்புங்கள்...
 
1978 இல் இருந்து 1988 ஆம் ஆண்டு வரை இருந்த காலம் இருக்கின்றதே... தமிழ் சினிமாவுக்கு நடிகர் மோகனுக்கு அது பொற்காலம் என்றே சொல்லலாம்..
 
ஒரே நாளில் மூன்று படங்கள் ரிலிஸ் செய்த ஒரே தமிழ் நடிகர் மோன்தான்..
 
மூன்றில் ஒன்று பிளாப் ஆக வேண்டும் என்று அக்கலாத்தில் நிறைய பேர் வேண்டிக்கொண்டனர்.. 
 
மூன்று படங்களும் சில்வர் ஜூப்ளி திரைப்படங்கள்.
 
உதாரணத்துக்கு 1984 ஆம் ஆண்டு மட்டும் ஒரே வருடத்தில் மோகன் நடித்த வெளியான திரைப்படங்களின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா...?? 
 
மொத்தம் 19 திரைப்படங்கள்... எனக்கு தெரிந்து தமிழ் திரையுலகில் இந்த சாதனையை வேறு எந்த நடிகரும் முறியடிக்கவில்லை என்றே நினைக்கின்றேன்.
 
 ஒரே நாளில் மூன்று படங்கள் ரிலிஸ் ஆகி மூன்று மே வெள்ளிவிழா படங்கள் என்ற சாதனையையும் இதுவரை எவரும் வெல்லவில்லை.....
 
ஹீரோவாக அறிமுகமாகி முதல் மூன்று வருடங்களிலும் 300 நாட்கள் ஓடி சாதனை படைத்த மூன்று படங்களைக் கொடுத்த ஒரே ஹீரோ மோகன் மட்டுமே..பயணங்கள் முடிவதில்லை.நெஞ்சத்தைகிள்ளாதே, கிளிஞ்சல்கள் என்ற படங்கள் 
 
ஆர் சுந்தர்ராஜன் இசைஞானி மோகன் இணைந்த படம் என்றாலே அது மாபெரும் வெற்றிபடம் என பேசிய காலங்கள்... 
 
ரஜினி கமலுக்கே சவால் விட்ட மோகன் வெற்றி படங்களும், ஓடிய நாட்களும் இயக்குநர்களும்..
 
200 நாட்கள்- மணிவண்ணன் இயக்கத்தில் கோபுரங்கள் சாய்வதில்லை
 
365 நாட்கள்- மகேந்திரன் இயக்கத்தில் நெஞ்சத்தை கிள்ளாதே
 
300 நாட்கள்- ஆர்.சுந்தர்ராஜன்-பயணங்கள் முடிவதில்லை
 
200 நாட்கள்- மணிவண்ணன்-இளமை காலங்கள்
 
300 நாட்கள்- துரை.கிளிஞ்சல்கள்
 
200 நாட்கள்- மணிவண்ணன். நூறாவது நாள்
 
200 நாட்கள்-சுந்தர்ராஜன்.நான் பாடும் பாடல்
 
175 நாட்கள்- கே.பாலாஜி. ஓசை
 
200 நாட்கள்-ரங்கராஜன். உதயகீதம்
 
175 நாட்கள்-சுந்தர்ராஜன். சரணாலயம்
 
250 நாட்கள்- ஸ்ரீதர். தென்றலே என்னை தொடு
 
175 நாட்கள்-சுந்தர்ராஜன்.  குங்குமச்சிமிழ்
 
200 நாட்கள்-மணிரத்னம். இதய கோவில்
 
175 நாட்கள்- பூபதி.டிசம்பர் பூக்கள்
 
175 நாட்கள்- ரங்கராஜன். உயிரே உனக்காக
 
250 நாட்கள்- மணிரத்னம். மௌன ராகம்
 
175 நாட்கள்- தீர்த்தக் கரையினிலே, 500 நாட்கள்- விதி, 175 நாட்கள்- மனைவி சொல்லே மந்திரம், 175 நாட்கள்- ரெட்டைவால் குருவி, 200 நாட்கள்- மெல்ல திறந்த கதவு, 175 நாட்கள்- சகாதேவன் மகாதேவன் 
 
இதெல்லாம் இப்போதைய அல்ல இனி எப்போதும் கற்பனை கூட பண்ண முடியாது..
 
இப்படியாக 10 வருடங்கள் பட்டைய கிளப்பிய சில்வர் ஜூப்ளி நாயகன் நடிகர் மோகன் இன்று எந்த படத்திலும் நடிக்க வில்லை... 1990க்கு பிறகு படம் இல்லாமல் தவித்தார்... ஆனால் ஏன் மோகனை அதன் பிறகு குணச்சித்திர , வில்லன் , காமெடியன் படங்களில் அவருக்கு ஏன் வாய்ப்பு தமிழ் சினிமா வழங்வில்லை என்பது பெரிய  கேள்விதான்..
 
யோசித்து பாருங்கள் மோகனின் பார்வையில் பத்து வருடம் தூங்க கூட நேரம் இல்லாமல் நடித்தவர்... ஷார்ட் ரெடி, ஆக்ஷன், கட் போன்ற எந்த சத்தமும்  கடந்த பல வருடங்களாக  கேட்காமல் இருப்பது எவ்வளவு கொடுமை.. 
 
சினிமா உலகம் அப்படியானதுதான்.
Published in Actors