இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அஜித்!
டிவிட்டர் முழுவதும் இன்று உங்கள் புகைப்படம்தான்!
ரசிகர் மன்றத்தைக் கலைத்தபிறகும் ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தை உங்கள் பின்னால் வரவழைப்பது உண்மையிலேயே ஆச்சரியம்தான்!
வாழ்த்துகள்!
- ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ்
- யாதெனக்கேட்டேன் திரைப்படக் குழு
சில படங்களைப் பார்க்கும்போது இறுதிக் காட்சி முடிவதற்குள்ளாகவே பார்வையாளர்கள் எழுந்து கிளம்பத் தொடங்குவர். இனி அடுத்து எல்லாம் ஒன்றாகச் சேர்வார்கள், யாவும் நலமாக முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும். அம்முடிவும் அவ்வாறுதான் இருக்கும். இரண்டரை மணிநேரத்திற்கு அமைதியாக அமர்ந்திருந்தவர்கள் கடைசி இரண்டு மணித்துளிகளைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் எழுந்து ஓடுவார்கள். வேறு சில படங்களில் இதற்கு நேர்மாறாகவும் நடக்கும். இறுதிக் காட்சி முடிந்து, படமும் முடிந்து திரையணைந்தால்கூட எழுந்து செல்லும் ஊக்கமில்லாமல் அப்படியே அமர்ந்திருப்பார்கள். படம் அவர்களை அவ்வளவுக்குப் பாதித்திருக்கும். பெரும் சோகம் அவர்களை எழ முடியாதபடி அழுத்திப் பிடிக்கும். துக்க வீட்டிலிருந்து படக்கென்று எழுந்து போக முடியாத இறுக்கம்போன்ற ஒன்று அவர்களைச் சூழ்ந்துவிடும். நானும் அப்படிச் சில படங்களில் எழுந்து போக மனமின்றி உட்கார்ந்திருக்கிறேன். அரங்கமே வெளியேறிய பிறகு கடைசியாளாய் எழுந்து போயிருக்கிறேன். அப்படி என்னைத் துயரில் மூழ்கடித்த படங்களின் ஒன்று 'மூன்றாம் பிறை.'
மூன்றாம் பிறையில் பாலு மகேந்திரா முன்வைத்த ஆண் பெண் உறவு, காதல் என்ற வளையத்துக்குள்ளேயே வராது. அன்பின் வழியே ஓர் உறவு நிலை இயல்பாகக் கனிந்து தொடர்ந்து செல்லும். அதைக் காதல் என்ற வழக்கமான சட்டகத்துக்குள் அடக்குவது தவறுதான். விஜிக்கும் சீனுக்கும் உள்ள இயல்பை மீறிய பாசப்பிணைப்பு மேலும் என்னாகிறது என்ற புள்ளியில் பிரிவே இறுதித் தீர்ப்பாகிறது. ஏனென்றால் சீனுக்கு விஜியின்மீது இருந்தது காதலே என்றாலும் விஜிக்குச் சீனு மீது இருந்தது முதிராச் சிறுமியின் மனத்தில் பெருகும் பேரன்புதான்.
உதகையைப் பற்றி எத்தகைய திரைப்படங்கள் வந்தாலும் மூன்றாம் பிறை உருவாக்கிய துயரத்தை அவற்றால் கடக்க முடியவில்லை. பெருந்துக்கத்தைத் திரையில் தீட்டுவதற்குரிய மலைநிலமாக வெவ்வேறு இயக்குநர்கள் உதகையைப் பயன்படுத்திக்கொண்டனர். பிற்பாடு வந்த 'இதயத்தைத் திருடாதே'விலும் அதேதான் நிகழ்ந்தது. இராபர்ட்-இராஜசேகரன் எடுத்து 'மனசுக்குள் மத்தாப்பு' திரைப்படத்திலும் அவ்வாசனையை முகரலாம். தனிப்பட்ட முறையில் பாலுமகேந்திராவின் விருப்பத்திற்குரிய வெளிப்புறப் படப்பிடிப்புத் தளமும் உதகைதான். படங்களில் பார்த்த உதகையின் பசுமை நேரில் செல்கையில் இல்லாமற் போவதும் உண்டு. பல்வேறு வண்ண அழுத்தங்களைக் கொடுத்து உதகையின் இயற்கையழகை மீறிய காட்சிகளாக அவற்றைக் காட்டுகிறார்கள். பாலுமகேந்திரவின் ஒளிப்பதிவில் இயற்கையழகு மட்டுமே படம்பிடிக்கப்பட்டிருக்கும். சூரியனுக்கும் ஒளிப்பதிவாளர்க்குமான நேரடி வினை அது.
மூன்றாம் பிறையைப் போன்ற இன்னொரு படத்தையோ, அல்லது அதற்கு நிகரான மற்றொரு படத்தையோ பாலுமகேந்திராவினால்கூட பிற்காலத்தில் ஆக்க முடியவில்லை. அதுதான் மூன்றாம் பிறையின் சிறப்பு.
- இ.என்.பாபு
#கண்ணதாசன் பாடல் வரிகளில் அவ்வப்போது #கடவுள் தென்படுவார்.
காதல், காமம், உல்லாசம், கவலை என எந்தக் கருத்தாக இருந்தாலும், கண்ணதாசன் ஆண்டனுக்கு இடம் கொடுப்பார்.
இந்தப் பாடல் மற்றுமொரு எடுத்துக்காட்டு.
The link here is produced by #Saregama
It is a the remix of classic by #MSV #Kannadasan
ஆண்:
ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான்
அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்,
என்னை அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்,
ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான்
அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்,
என்னை அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்...
ஆண்:
உலகம் எந்தன் கைகளிலே உருளும் பணமும் பைகளில்,
உலகம் எந்தன் கைகளிலே உருளும் பணமும் பைகளில்,
சோதிச்சு பாத்தா நானே ராஜா
வாலிப பருவம் கிடைப்பது லேசா
உல்லாசம் சல்லாபம் எல்லாமும் இங்கே உண்டு........ஹோய்.....
ஆண்:
ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான்
அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்,
என்னை அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்.....
ஆண்:
நடந்ததை எண்ணி கவலைப்பட்டால் அவன் மடையன்,
நடந்ததை எண்ணி கவலைப்பட்டால் அவன் மடையன்,
ஆஹா....நடப்பதை எண்ணி வருத்தப்பட்டால் அவன் மூடன்,
போடா வருவது வரட்டும் என்பவனே
நல்ல ரசிகன் அவன் இவனே இவன் அவனே,
அட இன்றும் இல்லை நாளை இல்லை
இரவில்லை பகலில்லை இளமையும் முதுமையும் முடிவும் இல்லை,
அட இன்றும் இல்லை நாளை இல்லை
இரவில்லை பகலில்லை இளமையும் முதுமையும் முடிவும் இல்லை
ஹோஹோஹோ.......
ஆண்:
ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான்
அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்,
என்னை அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்.....
ஆண்:
பணங்களை சேர்த்து பதுக்கி வைத்தால் அது மடமை,
பணங்களை சேர்த்து பதுக்கி வைத்தால் அது மடமை,
ஆஹா.....பகவான் படைத்த பணமெல்லாம் பொது உடமை,
கையில் கிடைப்பதை வீசி ரசிப்பது தான்
என் கடமை அந்த பெருமை எந்தன் உரிமை,
நல்ல வெள்ளி துட்டு அள்ளிகிட்டு துள்ளி துள்ளி
ஆட விட்டு சிரிப்பதும் மகிழ்வதும் தனி மகிமை ஹோஹோஹோ...
ஆண்:
ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான்
அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்,
என்னை அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்,
உலகம் எந்தன் கைகளிலே
உருளும் பணமும் பைகளில்,
சோதிச்சு பாத்தா நானே ராஜா
வாலிப பருவம் கிடைப்பது லேசா
உல்லாசம் சல்லாபம் எல்லாமும் இங்கே டா குண்டுடுடுடு.....
#யாதெனக்கேட்டேன் படத்தில் கண்ணதாசனின் யாதெனக்கேட்டேன் என்கிற கவிதையை பயன்படுத்தியுள்ளோம்.
பஹீரா - பிரபுதேவா படத்துக்கு நண்பர் சிவாவின் டைட்டில் டிசைன்.
ஐ.எஸ்.ஆர்.வென்சர்ஸ் தயாரித்து வரும் யாதெனக்கேட்டேன் பட டைட்டிலையும் இவர்தான் டிசைன் செய்தார்.
Title Design for the upcoming Tamil movie #Bagheera, Starring Prabhudeva Master. and directed by Adhik Ravichandran.
#யாதெனக்கேட்டேன் பட நாயகி விஷாலி, இயக்குநர் ஐ.எஸ்.ஆர் செல்வகுமார் மற்றும் சிவா (Siva Digital Art)
#யாதெனக்கேட்டேன் இயக்குநர் ஐ.எஸ்.ஆர் செல்வகுமார் மற்றும் டைட்டில் டிசைனர் சிவா (Siva Digital Art)
அறிமுகமாகிறார் விஹான்!
இன்று வெளியாகும் மார்க்கெட்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் விஹான் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்
அவர் நமது ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ”யாதெனக்கேட்டேன்” படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.
இயக்குநர் சுபாஷ்கய் மும்பையில் நடத்தும் ”விசிலிங் ஹுட்ஸ்” கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற்றவர். மிகுந்த திறமைசாலி.
கவியரசு கண்ணதாசனின் பேரன் முத்தைய்யா கண்ணதாசனுடன் இணைந்து அருமையாக நடித்திருக்கிறான்.
ஷனாயா, விஷாலி, முத்து, சுபா, சித்தன் கார்த்திஷ் என்று எங்கள் டீமே ஜாலியான இளமையும் அனுபவமும் கலந்த டீம். எங்கள் எல்லோருக்குமே இன்று மகிழ்ச்சியான நாள்.
அவர் வெற்றிபெற வேண்டுமென்று யாதெனக்கேட்டேன் படக்குழு மற்றும் ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் சார்பாக வாழ்த்துகிறோம்.