Log in

Register



Thursday, 28 May 2020 11:46

வெற்றிவேல்

 100 க்கு மேற்பட்ட முறை ஒளிப்பரப்புச்செய்துள்ள ஜீ தமிழ் 
 
இளையதளபதி விஜய் நடித்த ஜில்லா படத்தில் இணை இயக்குனராகவும், 13 படங்களுக்கு துணை இயக்குனராகவும்  கிட்டதட்ட 10 வருடத்திற்கும் மேலாக தமிழ் சினிமா துறையில் பணியாற்றி வந்துக்கிறார் இயக்குனர் வசந்தமணி. இவரது முதல் படைப்பாக நடிகர் சசிகுமார், பிரபு, இளவரசு, விஜி, தம்பி ராமய்யா, சமுத்திரக்கனி  போன்ற பலரும் நடித்து 2016 ம் ஆண்டு வெளியான  "வெற்றிவேல்" இவருக்கு ஒரு வெற்றிக்கரமான படைப்பாகும். பல புது நடிகர்களை திரும்பி பார்க்க வைத்த படம். 
 
பிள்ளைகளை திட்டிக்கொண்டே இருக்கும் அப்பாவின் கோபத்தை அருமையாக எடுத்துள்ளார். அப்பா கோபத்தில் போனை தூக்கிப்போட்டு உடைத்து விட்டு பின்னர், அந்த போனை சரிபண்ணும் எதார்ந்த நிலை கண்டிப்பாக ஒவ்வொரு மிடில்கிளாஸ் குடும்பத்திலும் நடக்கும். அம்மா, அப்பாக்காகவும் பேச முடியாமல் மகனையும் தேர்த்த முடியாமல் நடுநிலையில் ஒன்றுமே தெரியாமல் இருக்கும் அம்மாவாக இருந்தாலும் முக்கியமான நேரத்தில் அம்மாவின் பேச்சு எடுப்படும். இப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நமது குடும்ப உறவுகளை ஞாபகபடுத்தும் அளவுக்கு எடுத்திருப்பார். 
 
கட்டிட்டு வந்தவன் பெயர் கூட தெரியாத பொன்னு மனசுல,எப்படி காதல் வளருது. இளம் வயசு பசங்க காதலிக்கற பொன்னுக்காக என்னவெல்லாம் பண்ணறானு எவ்வளவு படங்களில் பார்த்தும் இதுலையும் பார்ப்பதற்கு சலிப்பை ஏற்படுத்தா அளவுக்கு சசிகுமாரின் கதாபாத்திரத்தை அழகாக காட்டியிருக்கிறார் வசந்தமணி.
 
மனசுல, விரோதம் இருக்கற ஒரு பொம்பள நமக்கு பார்க்கவே கடுப்பை ஏற்படுத்தறமாதிரி கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்கார். கை எடுத்து குடும்பிடும் அளவு பிரபு அவர்களின் பேச்சும், கம்பிரமும் மனசுல நீங்கா இடம் பிடிக்கற அளவுக்கு ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் திரைக்கதையையும் தெளிவாக வடிவமைத்துள்ளார் இயக்குனர் வசந்தமணி.
 
பாடல்களுக்கு, இமானைப்  போட்டு அடி மனச தொடும் பாடல்களை எழுதி வாங்கியிருக்காருனே சொல்லலாம். சண்டைக்காட்சிகள பொறிப்பறக்க வைச்சிருக்காரு. வசனங்கள ஆழமாகவும் அழுத்தமாகவும் எழுதி பேச வைச்சிருக்காரு. 
 
பொன்ன கடத்தி காதலனோட சேர்த்து வைக்கற நாடோடிகளை பார்த்திருக்கோம். ஆனால் மாத்தி பொன்ன கடத்தி ஹீரோவோட வாழ்க்கையையே மாத்தர நாடோடிகள வெற்றிவேல் படத்துல சிரிச்சிட்டே பார்க்கலாம்.
 
ஊர், உலகம், பெத்தவங்க, காதலினு யாரையும் யோசிக்காம வாழ்க்கையை தொலைத்த அவலைப்பெண்ணுக்கு வாழ்க்கைக்கொடுக்கறதும், கொரியர் பாய் கொரியர் கொடுக்கும்போது,   பல சீன்களில் சொல்லக்கூடிய கதையை ஒரே சீன்னில் காட்டியிருப்பார்கள். தப்பு பண்ணவங்கள மனிக்கறதே பெரிய தண்டனை எடுக்கப்பட்ட காட்சிகள் வெற்றிவேலுக்கே( வசந்தமணி) சொந்தமானது. 
 
58 நாட்களில் எடுக்கப்பட்ட தரமான படம். A, B, C என்ற அனைத்து தரப்பு மக்களும் பார்க்ககூடிய திரைப்படம். கிராமங்கள், நகரங்கள், சிறியவர்கள், பெரியவர்கள், மிடில் கிளாஸ்னு பலர் இடத்திலும் இந்த படம் சென்றுச்சேர்ந்திருக்கு. எதார்த்தமான கிராமத்து வாழ்க்கை, சலிப்பு தட்டாத காதல், நினைச்சு நினைச்சு சிரிக்க வைக்கும் காமெடி மண் மணம் மாறாத கதை என்று தெளிவான திரைக்கதையை வடிவமைத்து எழுதியுள்ளனர். இதுப்போன்ற கிராமத்து நடுத்தர குடும்பம் சார்ந்த திரைப்படங்கள் இனிமே வருமா? உண்மையான கிராமங்களிலே இது போன்ற சூழல்கள் நடக்குமா? என்று எண்ணிக்கூட பார்க்க முடியாத கதை களம்தான் வெற்றிவேல்.
 
"வெற்றிவேல்" வெளியான முதலிருந்து ஜீ தமிழ் வாங்கி கிட்டதட்ட 100 மேற்பட்ட முறைக்கள் ஒளிப்பரப்புச்செய்துள்ளனர். இதில் மிகுந்த ஆச்சிரியத்திற்குரிய விஷயம் என்னனா! டிவியில ஒவ்வொரு முறையும் போடும்போதும் மக்களால்  பெரும்பாலும் பார்க்கப்பட்டு டிஆர்பி அதிகமாகிறது. இதனை ஜீ தமிழ் டிவியும் கொண்டாடுகிறது. 
 
நடிகர் சசிகுமார் மற்றும் இயக்குனர் வசந்தமணி ஆகியோருக்கு மிக முக்கியமான படம் வெற்றிவேல். இந்த வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைந்தால் இன்னொரு மறக்க முடியாத படம் மக்களுக்கு கிடைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
 
-கீதாபாண்டியன்
 
 
 
Published in Classic Movies
கொளஞ்சி 
 
மகனை பெற்ற அப்பாவும், அப்பாவை நேசிக்காத மகனும் பார்க்க வேண்டிய படம்.....
 
ஒரு நல்ல கிராமத்து வாசம் படம் முழுவதும் வீசும். ஒரு அப்பா, அம்மா, அண்ணன் தம்பி நாலு பேர் கொண்ட வீடு. அப்பாக்கு அண்ணன் குடும்பம், அம்மாக்கு ஒரு அண்ணன் குடும்பம் என்றும் இருக்கின்றனர். 
 
அது போக, இன்றளவும் சிலர் ஊரில் சாதி பிரிவினைகள் பார்க்கின்றனர். அதனை மகன்களுக்கும் சொல்லி தருக்கின்றனர்.
 
நம் கதாநாயகனுக்கு பிடித்த ஒரு முறைப் பொன்னும், கதாநாயகனுக்கு உயிர் நண்பனும் படத்துல ஒரு முக்கிய பங்கு வகிக்கறாங்க. 
 
கொளஞ்சி உடைய அப்பா, எப்போ பார்த்தாலும் கொளஞ்சிய திட்டிட்டே இருக்காங்க. அவன் பண்ணற சேட்டைகள் எல்லாம் ஒன்னுக்கு இரண்டாக அப்பா(அப்பாசாமிக்கு) விவரம் தெரிய வருகிறது. எப்போ பார்த்தாலும் அப்பா அடிப்பாரு. 
 
இவன் என்னதான் அப்பாக்கு பயப்படற மாதிரி இருந்தாலும், எப்போடா இந்த ஆள விட்டுப்போவோம்னே பாக்கறான். 
 
கொளஞ்சி உடைய அம்மா ரொம்ப நல்லவங்க. மகன் மேல அதிகப்படியான பாசம் வைக்கறவங்க. கொளஞ்சிக்கும் அவனுடைய தம்பிக்கும் ஆகவே ஆகாது. 
 
அப்பா, தம்பி மேலதான் பாசமா இருப்பாரு. என்னை பார்த்தாவே அடிக்கறாரு. அதனால கடவுளே இல்லனு கூட நினைக்கறான். 
 
இவங்க மாமாக்கும் கொளஞ்சிக்கும் அப்படியொரு நட்பு. கொளஞ்சி உடைய பெரியப்பா மகள தான், இவங்க மாமா காதலிக்கறாரு. இவங்க இரண்டுப்பேரும் சேர்ந்ததுக்கு கதாநாயகன் தான் காரணம் பிரிஞ்சுப்போனதுக்கும் அவன்தான் காரணம். 
 
அப்பா, தன்னை கண்டிப்பாரு, பயந்தான். பரீச்சையில  fail ஆன நேரத்துல வீட்டுல ஒரு பெரிய சண்டையாகுது. அப்போ அவங்க அம்மா வீட்ட விட்டு அண்ணா வீட்டுக்கு போயிடுறாங்க. அதுதான் சாக்குனு அப்பாட அடி வாங்காம தப்பிக்கறான் மகன். 
 
அப்பாவையும் அம்மாவையும் சேர விடக்கூடாது. சேர விட்டால் எனக்கு அடிதான் விழும் என்று நினைக்கறான். கணவன பிரிஞ்சு இருக்க முடியல மனைவிக்கு, ஒரு வீட்டு அம்மா இல்லாம இளைய குழந்தையும் கணவனும் படற கஷ்டம் பயங்கரம். 
 
ஒரு கட்டத்துல அப்பாகற உறவு எவ்வளவு முக்கியம் அத கொளஞ்சி புரிஞ்சுக்கறான். தான் எவ்வளவு தன் மகன அடிச்சாலும் புடிச்சாலும் ஊருல ஒருத்தன், (இவங்க பிரிஞ்சு இருக்காங்க இதான் சாக்குனு கொளஞ்சி)அடிக்க வரான். அப்போ அப்பா, "ஆயிரம் இருந்தாலும் இவ என் மகன்" மகனுக்காக அடி வாங்கறாரு ஊர்காரன அடிக்கறாரு. அதுல அடி பட்டு மயங்கறாரு. இதல்லாம்  அம்மா புரிஞ்சுப்பாங்கனு நினைச்சு, ஓடி வந்து சொல்லும்போது, அம்மா "நீ எனக்கு புள்ளே இல்ல" இவர இப்படி பண்ணிட்டையேனு தள்ளி விடறாங்க. அப்போ தான் புரியுது சூழ்நிலை சந்தர்ப்பம் தான் ஒருத்தர வேற வேற மாதிரி நிலையில காட்டுதுனு. 
 
அப்பா குணமாகி வரும்போது, குற்ற உணர்ச்சியில துடிச்சுப்போறான். ஆனால், அப்பா பக்கத்துல வந்து நீ இன்னொருத்தன்ட அடி வாங்க கூடாதுதான் அப்பா உன்ன அடிக்கறேன் என்று சொல்லி மகன் கொளஞ்சி யை கட்டி அணைக்கறாரு. 
 
13 வயதை தொட ஒவ்வொரு  குழந்தைக்கும் அப்பா ஒரு எமன் மாதிரி தான் தெரிவாரு. ஆனால், அவருதான் பிரம்மன் அப்படினு புரியும்போது சிலநேரத்துல தான் அந்த உறவு இருக்கும். சில நேரத்துல இல்லாத போதுதான் அப்பாவுடைய அருமையே புரியும் என்று படம் முடியுது. 
 
இதுல சமுத்திரக்கனி அவர்கள் அப்பாசாமி என்கிற பெயரில் கொளஞ்சிக்கு அப்பாவாக இருக்கறாரு. அவருக்கு உள்ள குணநலன்கள் மற்றும் கோபதாபங்கள் எல்லாம் அவருக்கென்றே எழுதப்பட்டுதாக இருக்கு. 
 
அப்பாவ பிடிக்குதோ இல்லையோ, அப்பாவுடைய சாயல் மற்றும் எண்ணம் அனைத்தும் மகன் மனதில் கண்டிப்பாக பதியும் அதுதான் அவன வளர்க்கும்.
 
 எங்க அப்பா சொல்லிருக்காருனு வாழ்க்கையில ஒரு முறையாவது மகன் சொல்லுவான். கூடவே இந்த ஆளு உயிர எடுக்கறாருனும் ஒரு முறையாவது சொல்லுவான் மகன். அதுபோல அந்த ஆளு இருந்திருந்தால் எனக்கு இப்படியொரு பிரச்சனையே வந்திருக்காது அப்படினும் ஒரு முறையாவது மகன் சொல்லுவான். அது தான் ஒரு நல்ல அப்பாவின் வெற்றி. 
 
மகனை பெற்ற அப்பாவும், அப்பாவை நேசிக்காத மகனும் பார்க்க வேண்டிய படம். 
 
Geetha Pandian.
Published in Reviews