மீண்டும் சிவாஜி!
கொரோனா யுகத்தில்... நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பட்டியல்களுக்கு நடுவில் சிவாஜி படங்கள் ஹிட் அடித்திருக்கின்றன.
ஃபேஸ்புக்கில் நான் உட்பட என்னைச்சுற்றி உள்ள பலரும் 35க் கடந்தவர்களே. இவர்களில் பலர் இளையராஜா இரசிகர்கள், அப்புறம் ரஜினி, கமல் இரசிகர்கள். வெகு அபூர்வமாகத்தான் மற்றவர்கள் அவர்களின் அரட்டைகளில் இடம்பெறுவார்கள். இன்றைய தலைமுறையின் இரசனைகள் பற்றி தெரிந்தாலும் அதனை பொருட்படுத்தாதவர்கள். இப்போது நான் சொல்ல வருவது என்னவென்றால், கடந்த ஒரு வாரமாக இவர்களுக்கு அல்லது நமக்கு மத்தியில் பழைய சிவாஜி படங்களும், அவரது நடிப்பை பற்றிய சிலாகிப்புகளும் அதிகமாகியிருக்கின்றன.
இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன். இதனை ரசனை மாற்றம் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் வேகமான லைஃப் ஸ்டைலில் இருந்து முடங்கி, வீட்டுக்குள் அமர்ந்திருக்கும்போது நாம் விலகி வந்த எத்தனையோ உணர்வுகளையும், உறவுகளையும், வாழ்வியல் முறைகளையும் நாம் மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறோம், அதில் ஒன்றுதான் நாம் அசால்டாக மறந்து போன சிவாஜி என்கிற மாபெரும் கலைஞனின் அர்ப்பணிப்பும், அவருடைய படங்களில் காண்பிக்கப்பட்ட குடும்பங்களும், உறவுகளும், பிணக்குகளும், தியாகங்களும், புன்னகைகளும்.
இப்போதும் கூட அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று நம்மில் சிலர் கடந்து போகலாம். ஆனால் அப்படியெல்லாம் கடந்துவிட முடியாமல், சிவாஜி நம்மில் சிலருக்குள் மீண்டும் உணர்வுப்பூர்வமாக அமர்ந்துவிட்டார் என்பதையும் மறுப்பதற்கில்லை.
வானம் கொட்டட்டும் படத்தை பார்த்துவிட்டு தன்னைப் பாராட்டிய ஒரு ரசிகையால் நெகிழ்ந்துவிட்டார் விக்ரம் பிரபு! காரணம் பாராட்டியவர் சிவாஜி ரசிகை. குடும்பத்துடன் அவர் படத்தைப் பார்த்திருக்கிறார். அதோடு மட்டுமில்லாமல் சிவாஜியின் பேரன் என்பதால் மிகுந்த வாஞ்சையுடன் வாழ்த்தியிருக்கிறார். இதனால் நெகிழ்ந்துபோன விக்ரம் பிரபு, தனது மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் டிவிட்டரில் பகிர்ந்திருக்கிறார்.
இந்திய நாடு என் வீடு...
இந்தப் பாடலை எழுதிய வாலி,
இசையமைத்த எம்.எஸ். வி
பாடிய டி.எம். எஸ், பி. சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, ஏ.எல். ராகவன், மற்றும்
நடித்த சிவாஜி உட்பட எல்லோருக்கும் அன்பும் அணைப்பும்!
இந்திய நாடு என் வீடு
இந்தியன் என்பது என் பேரு
இந்திய நாடு என் வீடு
இந்தியன் என்பது என் பேரு
எல்லா மக்களும் என் உறவு
எல்லோர் மொழியும் என் பேச்சு
திசை தொழும் துருக்கர் என் தோழர்
திசை தொழும் துருக்கர் என் தோழர்
தேவன் இயேசுவும் என் கடவுள்
எல்லா மதமும் என் மதமே
எதுவும் எனக்கு சம்மதமே
ரகுபதி ராகவ ராஜாராம்
பதீத பாவன சீதாராம்
ரகுபதி ராகவ ராஜாராம்
பதீத பாவன சீதாராம்
கங்கை பாயும் வங்கம் செந்நெல்
கதிர்கள் சாயும் தமிழகம்
தங்கம் விளையும் கன்னடம்
நல் தென்னை வளரும் கேரளம்
ஆந்திரம் அஸ்ஸாம் மராட்டி
ராஜஸ்தான் பாஞ்சாலமும்
சேர்ந்து அமைந்த தேசம் எங்கள்
அன்னை பூமி பாரதம்
இந்திய நாடு என் வீடு
இந்தியன் என்பது என் பேரு
ரகுபதி ராகவ ராஜாராம்
பதீத பாவன சீதாராம்
இரிகோ இரிகோ இக்கட பாருங்கோ
இரிகோ இரிகோ இக்கட பாருங்கோ
சுந்தரத் தெலுங்கினில் பாடுங்கோ
குச்சுப்புடி நடனங்கள் ஆடுங்கோ
சல் மோகனரங்கா பாடுங்கோ
சல் மோகனரங்கா பாடுங்கோ
ஸ்ரீசைலம் திருப்பதி ஷேத்திரம் உண்டு
தரிசனம் பண்ண வாருங்கோ
கப்பல் கட்டுற விசாகப் பட்டினம்
கடற்கரை உண்டு பாருங்கோ
சல் மோகனரங்கா பாடுங்கோ
சல் மோகனரங்கா பாடுங்கோ
ஏனு ஸ்வாமி இல்லி நோடு
எங்க ஊரு மைசூரு
காவிரி பிரிந்த கன்னட நாட்டை
யாவரும் போற்றி சொல்வாரு
ஏனு ஸ்வாமி இல்லி நோடு
எங்க ஊரு மைசூரு
ப்ருந்தாவனமும் சாமுண்டி கோவிலும்
நோடு ஸ்வாமி நீ நோடு
நீ நோடு மைசூரு
எல்லா மொழியும் எல்லா இனமும்
ஒண்ணு கலந்தது பெங்களூரு
ஏனு ஸ்வாமி
ஏனு ஸ்வாமி இல்லி நோடு மைசூரு
படச்சோன் படைச்சோன் எங்களப் படச்சோன்
அல்லா எங்கள் அல்லா அல்லாஹூ அல்லா
ஞானும் இவளும் ஜனனமெடுத்தது
கேரளம் திருச்சூர் ஜில்லா
தேக்கு தென்னை பாக்கு மரங்கள்
இவ்விட பாக்கணும் நீங்க
தேயிலை மிளகு விளைவதைப் பார்த்து
வெள்ளையன் வந்தான் வாங்க
படைச்சோன் படைச்சோன் எங்களப் படச்சோன்
அல்லா எங்கள் அல்லா அல்லாஹூ அல்லா
அல்லாஹூ அல்லா அல்லாஹூ அல்லா
சுனோ சுனோ பாய் சுனோ சுனோ மே
பஞ்சாப்வாலா கீத்து சுனோ
பஞ்சாப்வாலா கீத்து சுனோ
தங்கக் கலசம் பொற்கோவில்
எங்கள் ஊரில் தேக்கோ தேக்கோ
ஆஹா தேக்கோ தேக்கோ
உய்யாஹு தேக்கோ தேக்கோ
உய்யாஹு தேக்கோ தேக்கோ
உய்யாஹு தேக்கோ தேக்கோ
ஜீலம் ஷட்லஜ் நதிகள் பாயும்
கோலம் காண ஆவோ ஆவோ
ஆவோ ஆவோ உம் ஆஹா அவோ ஆவோ
பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி
பகத்சிங் பிறந்த பொன்னாடு
பகத்சிங் பிறந்த பொன்னாடு
யாஹூங் யாஹூங் உய்யாஹூ யாஹூங் யாஹூங்
யாஹூங் யாஹூங் உய்யாஹூ யாஹூங் யாஹூங்
யாஹூங் யாஹூங்
எங்கு பிறந்து எங்கு வளர்ந்தும்
எல்லாம் ஒருதாய்ப் பிள்ளைகள்
எல்லாம் ஒருதாய்ப் பிள்ளைகள்
வாழை வழியாக வந்து
பேசிப் பழகும் கிள்ளைகள்
சத்தியம் எங்கள் தேசம்
சமத்துவம் எங்கள் கீதம்
வருவதைப் பகிர்ந்து உண்போம்
வந்தே மாதரம் என்போம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்