Log in

Register



பத்து வருட இடைவெளியில வெளி வந்த இந்த இரண்டு படங்களுக்கும் ஒற்றுமை இருக்கு. ராம்கி மற்றும் ஊர்வசி நடித்து 1995 வெளியாகிய மாயாபஜார் 1995 ஒரு நகைச்சுவை திர்லர். சூர்யா மற்றும் ஜோதிகா நடிப்பில் பேரழகன் குடும்ப டராமாவில் ஒரு வெற்றிப்படம்.
 
இந்த இரண்டு படங்களிலும் ஹீரோ, ஹீரோனி இருவரும் இரு வேடங்கள் ஏற்று நடித்திருப்பர். மாயாபஜார் மற்றும் பேரழகன்  இரண்டு படத்திலும் உள்ள இரு கதாநாயகியில் ஒருவர் இறந்து விடுவார். மாயாபஜாரில் வரும் ஊர்வசி வெகுளியாக இருக்கும் கதாபாத்திரம் இறந்து விடும் மற்றும் பேரழகன் படத்தில் வசிகரமான ஜோதிகா கதாபாத்திரம் இறந்து விடும். 
 
இரண்டு படத்தில் நகைச்சுவைக்காக பலரும் இருந்தாலும் இரண்டு படத்தையும் நாம் ஒப்பிடும் பேச ஏற்றாப்போல் "விவேக்" நகைச்சுவை நிறைந்திருக்கும். ராம்கி மற்றும் சூர்யா இருவரும் அந்த அந்த காலகட்டத்தில் காலத்தால் அழிக்க முடியாத படைப்புகளை கொடுத்துள்ளதோடு  அவர்வர்க்கு என்று தனி பாணியைக்கொண்டு நடிக்கின்றனர்.
 
மாயாபஜார் வில்லன் தனது முகத்தை கதாபாத்திரம் ராம் மாதிரி மாற்றிக்கொண்டு வெகுளி ஊர்வசியை கொல்வான். பின்னர் வெகுளி பெண் இறந்தப்பின்னால், கிழவி வேடத்தில் இருக்கும் ஊர்வசியை அறிமுகம் செய்வர். இறுதியில் உண்மையான ராம், தன் மனைவியாக நடிக்க வந்த பெண்ணை தன் மனைவி என்றே நம்பி விடுவான். 
 
இதேப் போல் பேரழகன் படத்தில் கண் தெரியாத செண்பகம் கதாபாத்திரத்திற்கு சின்னா, தான் ஒரு ஆறு அடி உயரம் வாட்டசாட்டமா இருப்பேன் என்றுச் சொல்லி செணீபகத்திற்கு ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி இருப்பான். கண் பார்வைப்பெற்று அவள் மருத்துவமனையில் இருக்கும்போது, கார்த்திக் வந்து செண்பகத்தை பார்க்கும்போது, இறந்துப்போன தன் காதலின் கண்ணை இவளுக்கு வைத்திருப்பதை பார்த்துக்கோண்டு இருப்பான். உண்மையை தெரியாத செண்பகம் அது தன் சின்னா என்று நினைத்து விடுவாள். பின்னர் மனோரோமா வந்து சொல்லவே அந்த காட்சி விலகும். 
 
மேலும் தனிப்பட்ட முறையில் மாயாபஜார் படத்திற்கு அவர்கள் போட்ட உழைப்பும், பேரழகன் படத்திற்கு இவர்கள் போட்ட உழைப்பும் மாறுபடும். சொத்திற்காக நடக்கும் கொலையே படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டுச்செல்லும். பேரழகன் படத்தில்  கோபத்தாலும் வன்மத்தாலும் பிரியா இறந்துப்போயி, அவரது கண்களை செணாபகத்திற்கு வைப்பதே கதையை வேற வழியில் மாற்றியமைக்கும். 
 
மாயாபஜார் படத்தில் நல்ல கதாப்பாத்திரம் ராம் மற்றும் நடிக்க வந்த பெண்ணும் ஒன்னுச்சேர்வதும். பேரழகன் படத்தில் சின்னா, செண்பகம் ஒன்னு சேர்வது என்று சுபமாக படம் முடியும்.
 
சூர்யா உடல் ரீதியான மாற்றங்களை வித்தியாசம் காட்டி நடித்திருப்பார். ஊர்வசி பேச்சிலும் மொழியிலும் மாற்றம் காட்டி நடித்திருப்பார். கதை களம் மாறுப்படும் ஆனால் ஒரே பதார்த்தம் ஒன்றே. ஹீரோ ஹீரோனி இருவரும் இருவேடம் நடித்த இன்னும் சில படங்களும் வந்துள்ளது. இது நான் சமீபத்தில் பார்த்த இந்த இரண்டு படங்களின் சிறிய ஒப்பீடு...
 
-கீதாபாண்டியன்
Published in Classic Movies
முன்னணி நடிகர்களைக் கொண்டு வெளிவந்து நம்மை ஏமாற்றிய படம் தம்பி...
 
தன் மகள் செய்த ஒரு தவறை மறைக்க திரும்ப திரும்ப தப்புச்செய்கின்ற குடும்பத்துடன் தப்பு தப்பா செய்தவன் உள்ளே நுழைந்து நல்லவனாய் மாறுகிறான். 
 
காணாம போன தம்பி யார் அவனுக்கு என்ன ஆச்சு என்பதே கதை. தேவையில்லாம திரைக்கதை நீண்டுக்கொண்டு இருக்கிறது. டிரைலர்காக படம் எடுத்தமாறி இருந்தது. ஒரு குடும்பமே நடிக்குது. 
 
படத்தின் கடைசி நிமிடம் வரை உண்மையான சரவணன் யார் என்று விறுவிறுப்பைக் கொடுக்கிறது. ஜோதிகாவை மையமாக வைத்து படம் நகர்கிறது இருப்பினும் ஜோதிகாவின் பங்கு குறைவுதான். ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் நடிக்கும் படத்தின் எதிர்ப்பார்ப்பை உடைகிறது. 
 
பாதி வில்லனாக சத்யராஜ் தன்னுடைய பழைய முகத்தைக்காட்டிள்ளார். ஆரம்பத்துல இருந்து வில்லனா இருக்கறவன்  முடிவு மொக்கையாகுகிறது. 
 
கூடவே இருக்கறவன் கெட்டவனாகவும்,  பொறுக்கியை ஹீரோவாகவும் கதாபாத்திரம் சித்தரித்துள்ளனர். 
 
பழங்குடியினர் நல்வாழ்வு என்ற ஒரு விஷயத்தை (TOOL)  உதவியாக எடுத்து கதை அடுத்த அடுத்த கட்டத்திற்கு கதை நகருக்கிறது. ஆனால் அதனால் பழங்குடியினருக்கு என்ன உபயோகம் இருக்குனு படத்துல பார்த்தா தெரியும்.
 
குழந்தைகளை வளர்க்கும்போதே கண்காணித்து நல்லது கெட்டது சொல்லிக்கொடுத்து வளர்க்கனும். அம்மா, பாட்டி, அக்கா, அப்பானு எல்லாரும் இருக்கறவன் தப்புப்பண்ணறான் அப்படினா அது யாரு மேல தப்பு. 
 
இப்படி கதைய போற போக்குல விட்டுட்டு பின்னாடி Flashback சொல்லி கதைய இழுத்துப்பிடிக்கறாங்க. 
 
இறுதியில் தவறை உணர்ந்தவர்கள் உண்மையான பாசத்துடன் ஒரே குடும்பமாக வாழப்போகிறார்கள் என்பதே முடிவு.
-கீதாபாண்டியன்
 
 
Published in Movies this week