சமீப காலமாக நடிகர்கள் படத்தில் நடித்த ஃபோட்டோக்களை விட அவர்கள் தங்கள் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் காலங்களில் அஜித், விஜய், ரஜினி, சினேகா போன்றோரின் குடும்பப் படங்களை மக்கள் அதிக அளவில் பகிர்ந்தார்கள்.
குடும்பப் படங்கள் எப்போதுமே க்யூட். பிரபலங்களின் குடும்பமாக இருந்தாலும் சரி, சாதாரண மக்களின் குடும்பங்களாக இருந்தாலும் சரி. குடும்பங்களின் மகிழ்ச்சியே முதன்மையானது. குடும்பங்களின் மகிழ்ச்சிதான் நாட்டின் மகிழ்ச்சி!
குடும்பத்தை கவனித்துக்கொள்வோம்! மகிழ்வுடன் வாழ்வோம்.
ஆஸ்கர் (2022) விருதுக்குப் போட்டியிடும் படங்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது ஜெய் பீம். ஆங்கிலம் அல்லாத படங்களின் பட்டியலில் இடம் பிடித்திருப்பது தமிழ் சினிமா இரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது. குறிப்பாக சூர்யா இரசிகர்கள் இப்போதே கொண்டாடடத் துவங்கிவிட்டார்கள். அதற்கு காரணமும் இருக்கிறது. கடந்த வருடம் சூரரைப் போற்று படமும் ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிட்ட படங்களில் ஒன்றாக இருந்தது. அதனால் இரட்டை மகிழ்ச்சியில் சூர்யா இரசிகர்கள் இப்போதே ஜெய் பீம் படத்துக்கு ஆதரவாக ஆன்லைனில் பதிவிடத் துவங்கிவிட்டார்கள்.
என்னைக் கேட்டால் ஜெய் பீம் படம் நிச்சயம் சர்வதேச தரத்தில் உள்ளது என்றுதான் சொல்லுவேன். நடிப்பு, இயக்கம், இசை, ஒளிப்பதிவு என எல்லாமே சர்வதேசத் தரம்தான். குறிப்பாக மணிகண்டனும், லிஜாமோலும் வேறு எவருடனும் ஒப்பிடவே முடியாத அர்ப்பணிப்புடன் நடித்திருக்கிறார்கள். அவர்களை இதற்கு முன் அறிந்திராதவர்கள் அவர்கள் நிஜமாகவே பூர்வகுடிகள்தான் என்று நினைத்துவிட வாய்ப்பு உண்டு. மற்ற நடிகர்களும் அவர்களுக்கு ஈடு கொடுத்து நடித்திருக்கிறார்கள். இசையிலும், ஒளிப்பதிவிலும் தங்களால் சர்வதேச தரத்தை எட்ட முடியும் என்று நிருபித்திருக்கிறார்கள். முத்தாய்ப்பாக இயக்குநர் ஞானவேல் ஒவ்வொரு நொடியையும் மறக்கவே முடியாத தருணங்களாகத் தந்திருக்கிறார்.
ஆஸ்கரோ, கோல்டன் குளோபலோ எதுவாக இருந்தாலும் அந்த ஜுரிகளை பார்க்க வைப்பதுதான் இப்போது தயாரிப்பாளருக்கு உள்ள சவால். அவர்களில் பெரும்பாலான ஜுரிகளை பார்க்க வைத்துவிட்டால், விருது கை கூட வாய்ப்பு அதிகம் உள்ள படம்தான்.
ஆஸ்கர் விருது பெற்றவரும், ஆஸ்கர் தேர்வுக் குழுவில் ஒருவருமாக இருந்த ஏ.ஆர்.இரகுமானிடம் தயாரிப்பாளர் யோசனை கேட்கலாம். அது ஜெய்பீம் படத்துக்கான வாய்ப்பை அதிகமாக்க உதவும்.
ஜெய் பீம் படக் குழுவினர் அனைவருக்கும் ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் மற்றும் யாதெனக்கேட்டேன் குழுவினர் சார்பில் ஆஸ்கர் வெல்ல வாழ்த்துகள்!
வீட்டுக்கு வரும் ஆண்களை ஏளானம் செய்யும் தாய் வழி சமூகத்தின் ஆணவத்தையும், சொத்து இருக்கற திமிரையும், சாதி வெறியையும், வர்க்க பிரிச்சனையும் வீட்டுக்கு வந்த மருமகள் எடுத்து எறிய வேண்டும் என்ற ஒரு மையக்கருவில் இரண்டு கதைகள்.
ஒரு தாய் வழி சமூகத்தில் உள்ள சொத்துக்கள் நிறைந்த அதிகாரத்தோடு அகங்காரம் இருக்கற மாமியார். வீட்டோட மாப்பிள்ளையாக வரும் ஒரு ஆண்யை எவ்வளவு கீழ் தனமாக நடத்துக்கிறார்கள் என்பதை 20 வருடத்திற்கு முன்னாலும் பின்னாலும் உள்ள தலைமுறைகள் இடைவெளி(Generation Gap) யுடன் காட்டியுள்ளனர். இதுவே வீட்டுக்கு வந்த மருமகளின் மையக்கரு.
அப்படிப்பட்டயொரு மாமியார் வருங்காலத்தில் பாட்டியாகயாகும்போது, தன்னோட பேரன் வழியில் வரும் மருமகள். 20 வருட இடைவெளியில் பாட்டியால் ஏற்பட்டுள்ள குழப்பங்களை சரிச்செய்து அகங்காரம் இல்லாமல் குடும்பத்தை எப்படி மாற்றியமைக்கிறாள் மருமகள்.
பொறந்தாலும் ஆம்பளையா பொறக்க கூடாது என்ற படத்தின் மையக்கருக்கூட தாய்வழி சமூகத்தில் பிறக்கும் பெண் வாரிசுகளுக்கு கணவனாக வரும் ஆண்களை வேலைக்காரனை விட மோசமாக நடத்தறாங்க என்பதே ...
அப்படிப்பட்ட ஒரு பெண் தாய்மை அடையும்போது, தனக்கு பிறந்த ஆண் வாரிசையையும் பண ஆதிக்கமும் திருமியும் நிறைந்த தன் குடும்ப இன்னொரு பெண் வாரிசுக்கு திருமணச்செய்து தர நினைக்கும்போது, 'என்னைப் போல தன் மகனும் கேவல பட கூடாது' என்பதற்காக மீனவர் குப்பத்து சமுதாயத்தில் ஒரு பெண்ணை பணக்காரங்க என்று நாடகமாடி கல்யாணம் செய்து வைக்கிறார் மாமனார். மாமியாரின் பண திமிரை அடக்கி ஆண்களை மதிக்கனும் அதுலையும் கணவனே கண் கண்ட தெய்வம் என்று மாமியாரை நினைக்க வைக்கும் மருமகள்.
வீட்டுக்கு வந்த மருமகள் படத்தில் பணக்கார பெண், சாதாரண சேரி பெண் போற் வந்து அகங்காரம் நிறைந்த பாட்டிக்கும், நாத்தனாருக்கும் படம் கற்பிப்பாள்.
பொறந்தாலும் ஆம்பளையா பொறக்க கூடாது படத்தில் மீனவர் சமுதாயத்து பெண் பணக்காரர்கள் போல நடித்து கல்யாணம் செய்து, மாமியாருடைய தவறை கூட இருந்தே குத்தி காட்டுவாள்.
வீட்டுக்கு வந்த மருமகள் படத்தில், கடைசி இருபது நிமிடத்தில் மருமகளால் நடக்கும் சில மாற்றங்கள், கணவனை மதிக்காத மனைவியை திருத்துக்கிறாள். ஏழை குடும்பத்து மாப்பிள்ளையாக இருந்தாலும் அவன் ஒரு ஆம்பளை என்ற ரோஷத்தில் பிரிந்திருக்கும் கணவன் மனைவியைச் சேர்த்து வைக்கிறாள். கூடவே, காதலிக்கும்போது இருக்கும் ஆணின் கல்யாணத்துக்கு அப்பறம் வருந்தும் பெண்ணின் மன உணர்வை வெளிப்படுத்தியிருப்பர். 20 வருடத்திற்கு முன்னர் வாழ்க்கையை தொலைத்து விட்டு தன் குழந்தைகளை தன்னால் வளர்க்க முடியாமல் போன வருத்தத்தில் இருந்த பாட்டியின் மாப்பிள்ளையை அவரோட குடும்பத்தோடு சேர்த்து வைக்கிறாள்.
பொறந்தாலும் ஆம்பளையா பொறக்க கூடாது படத்தில், தான் பணக்காரி இல்ல, ஒரு மீனவ சமுதாயத்தை சேர்ந்தவள் என்ற உண்மை இடைவெளிக்கு பின் தெரியவருகிறது. இத்தனை காலம் பணக்கார மருமகளை கையில் வைத்து தாங்கிய மாமியார். இப்போது அசிங்கப்படுத்துக்கிறாள். இந்த இடத்தில் வர்க்க பிரச்சனை வருகிறது. இதனை முறியடித்து மாமனாருக்கு தைரியத்தை கொடுத்து வீட்டை விட்டு வெளியேற செய்து, சொத்துபத்து இல்லாத தனி மரமாக மாத்தி மாமியாரை, அவரோட கணவனின் காலில் வந்து விழ செய்கிறாள்.
வீட்டுக்கு வந்த மருமகளில், ஆணவக்குடும்பத்தில் பிறக்கும் ஆண்(பேரன்) ரவிசந்தர் தன் காதலிடம் புலம்பி அவன் செய்ய முடியாததை அவனுக்கு மனைவியாக வரப்போகும் அந்த வீட்டின் மருமகள் செய்துக்காட்டுகிறாள்.
பொறந்தாலும் ஆம்பளையா பொறக்க கூடாது, இதில் பாண்டியராஜனுக்கு ஏழை மனைவிகறது பிரச்சனை இல்ல. அவங்க அம்மாவோட கொட்டத அடக்க அவன் ஒரு நாளும் மனைவியிடம் சொன்னதுமில்ல. அவனோட பிரச்சனை முதல் இரவு எப்போ நடக்கும் அது எப்படி நடக்கும் என்பதாகவே இருந்தது. ஆனால் மருமகளாக வந்த meenachi கதாபாத்திரம் மாமியாரின் கொட்டதை அடக்குகிறாள்.
இரண்டு படங்களிலும் பல முன்னனி நடிகர்கள் நடித்த, இந்த படத்தை நீங்க பார்த்தால் சின்ன சின்ன நுணுக்களும், நகைச்சுவையும் கருத்துக்களும் நல்ல பொழுதுப்போக்காகவும் இருக்கும். எடிட்டிங் கவனம் செலுத்திருக்கலாம். திரைக்கதை பரவாலை. மைக்கரு அன்றைய பிரச்சனை என்று தான் சொல்லனும். நடிகர்கள் தேர்வு சிறப்பு.