Palasa 1978 இந்த படமானது தெலுங்கில் 2020 ல் வந்த 40 வருட கதையாகும். ஒரு கிராமத்தில் சாதி வெறிப் பிடித்தவர்கள் கீழ் சாதி மக்களை அசிங்கப்படுத்துவதும், இழிவு செய்வதும், தீண்டாமை செய்வது, ஏளானம் செய்வதுமே அவரவது தலையாய வேலையாகும்.
பள்ளி பருவத்தில் இருந்த கதாநாயகனுக்கு சாதி வெறிப்பிடித்தவர்கள் மீது மிகுந்த கோபம் இருந்தது. அவன் எப்படி வன்மதோடு கொலை செய்ய ஆரம்பித்து போலீசாரால் தேடப்படும் குற்றவாளி ஆனான் என்பதே இந்த நாற்பது வருட கதை.
கதையின் திருப்பமே, ஒரு பெண்ணை திருமணம் செய்ய, கல்லை தூக்கி பின்னல போடுவது மாதிரி.. ஒரு ஆம்பளையா முன்னாடி வந்து நிக்கவே அந்த தகுதி தேவைப்படுகிறது. பாகுபலி மாதிரி கல்லை தூக்கி தன்னை தானே நிருபித்துக்கொண்டு, அருவாளை எடுத்து சூரை யாட ஆரம்பிப்பான் கதாநாயகன்.
தமிழ் படமா வேங்கையும், அசுரனையும் எடுத்துக்கொள்ளலாம். "கோபக்காரன் அருவா எடுத்ததான்டா தப்பு, காவக்காரன் அருவா எடுத்த தப்புல்லடா" என்று ஒரு வசனம் நிகழ்காலத்தில் வேங்கை திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும், அதே போல "மேற்சாதியிரின் கொடுமைக்கு காவு வாங்கும் கடவுள் போல அசுர தனமாக வெறிக்கொண்ட கோபத்தோடு இறந்தகாலத்தில் அனைவரையும் வெட்டி சாய்பார்" நடிகர் தனுஷ்.
கிட்டதட்ட இந்த இரண்டு விஷயத்துக்காக அருவாள் எடுத்து வெட்ட ஆரம்பிப்பார் palasa நடிகர். அந்த மேல்சாதி வெறிப்பிடித்தவர்களை வெட்டி சாய்த்து விடுவார். பின்னர் தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்கு அருவாள் எடுப்பார். ஊரில் பலரும் பயப்படக்கூடிய ஒருவராக மாறி விடுவார்கள். காலங்கள் போக போக அருவாளுக்கு, அரசியல் சாயப்பூசப்பட்டு அடியாளு போல அரசியல்வாதிகளுக்கு அடிபணிச்சு அவர்களுக்கு எதிரானவர்களை வெட்டி சாய்பான்.
எல்லாத்தையும் விட்டுட்டு குடும்பம், குழந்தையென்று எதார்த்த வாழ்க்கை வாழ முற்படும்போது, எதிரிகள் சும்மா விடமாட்டார்கள். பின்னர், அணிநயத்தை தட்டிக்கேட்கும் ஒருவரான தலை மறையில் எதிரிகளை வெட்டி சாய்த்து, தலையை மூட்டை கட்டி போலீஸ் ஸ்டேஷனிலே கொண்டு வந்து கொடுப்பான். இதற்கு பின்னர் தேடப்படும் குற்றவாளியாக மாறி விடுவான்.
வெறிக்கொண்டு போலீஸ்சாரால் கண்டுப்பிடிக்கப்பட்டாலும், அவன் இப்படியான சோககதையை கேட்டு, போலீஸ் விட்டுட்டு போயி விடுவார். தலைமறைவாக அவரது வேட்டை நடந்துக்கொண்டே இருந்தது. ஒரு பக்கம் 2018 வரை போலீஸ் இந்த கேஸ்சை முடிக்க முடியாமல் தேடிக்கொண்டே இருப்பார்கள்.
ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு விதமான அடிமைகள் தேவைப்படுக்கின்றனர் என்பது நீசத்தமான உண்மை. அதுபோக..படத்தில் அழகான சிறு வயது காதல் ஒன்று உருவாகுகிறது. காலகாலமாக தெலுங்கு படத்தில் இருக்ககூடிய வெறியும் தெளிவாக இருக்கிறது. பொறுமையின் உச்சத்தில் பார்க்கிற அளவு எடிட்டிங் செய்யப்பட்டுள்ளது.
எப்படி, சிறு வயதியிலே ஒரு கொலைக்காரன் உருவாகுகிறான். வன்மம் என்பது எங்களை வாழ விடமாட்டேங்கறாங்களே என்ற அதீத கோபத்தின் கடைசி நிலை என்பதை பச்சையாக சொல்லக்கூடிய படம்.
நம் எதிரிகள் எல்லா நாளும் எதிரிகளாக இருப்பதில்லை. ஆனால் கூடவே இருக்கும் நண்பன் ஒரு நாள் துரோகியாக மாறுவான் என்பதில் படத்தில் திரும்பம் காட்டிள்ளனர். தெலுங்கு படமான HIT The first Case
HIT எனும் போலீஸ் Department ல் போலீஸாக இருக்கும் ஒருவன் வாழ்க்கையில் நேர்ந்த பல விஷயங்களினால் மன நோய் வந்திருக்கும். நெருப்பை பார்த்து மன அளவில் பாதிப்பு அடைந்துள்ளதால் அந்த மன நோய் அவன் செய்யும் வேலைக்கு தொந்தரவாக இருக்கும்.
அதற்காக சிறிது காலம் விடுமுறையில் ஓய்வெடுத்துக்கொண்டு இருப்பான்.
அப்போது தொடர்ச்சியாக இரண்டு பெண்கள் காணாமல் போயிருப்பார்கள். அதில் ஒருவர் விக்ரம் எனும் கதாநாயகனுக்கு காதலி.
இந்த விஷயம் தெரிய வர அவர் திரும்பவும் பணியில் சேர்வார். இந்த கேஸ்களை விசாரிப்பதன் போது நடக்கற அதிர்ச்சி நிகழ்வுகளே HIT The first Case.
இது ஒரு புறம் இருக்கவே. மறுப்பறம் அனாதை இல்லத்தில் பல குழந்தைகள் வளர்கிறது. அதில் மூன்று குழந்தைகளில் ஒருவரை ஒரு தம்பதிகள் வந்து சீட் குலுக்கிப்போட்டு தேர்ந்தெடுத்துக்கூட்டிட்டு போவர். அப்போது ஒரு பனிரெண்டு வயது நிரம்பிய ஒரு பெண் குழந்தை பத்து வயது நிரம்பிய பெண் குழந்தையிடம் ஒரு விஷயத்தைச்சொல்வால், "நம்மோட ஆறு வயது நிரம்பிய தோழிக்கு இருதய கோளாறு இருக்கறனால நீ அவங்க சொல்லி உதவிச்செய்ய சொல்வியா" என்று கண் கலங்கினாள்.
அப்போது அந்த பத்து வயது சிறுமி வாக்குறுதி கொடுத்து விட்டு அதனை மறந்து விடுவாள். பின்னர் அந்த ஆறு வயது சிறுமி இறந்து விடும். பணம் வந்ததும் மாறிப்போனவளை ஒரு பக்கம் பழி வாங்க துடிக்கிறவள். இந்த இரண்டு பக்கங்களும் சந்திக்கின்ற இடத்தில் படத்தின் இரண்டாம் பாதியில் விறு விறுப்பாக கதை பயணிக்கும் அதுவே HIT The first Case.
காதலியின் நினைவுடன் பழைய விஷயங்களின் மன நோயாளியுடன் இந்த கேஸ் நடத்தும் கதாநாயகன். Case ஜெயிக்குமா? என்பது இப்போதும், விக்ரமின் மன நோயாளியின் காரணங்கள் பார்ட் -2 ல் வரும் என்பதுடன் படம் முடிகிறது...