Log in

Register



ஒற்றுமையும், வேற்றுமையும்
 
இத்தனை வருட தமிழ் சினிமாவில் கல்லூரி வாழ்க்கையை மையப்படுத்தியோ, அதனை ஒரு காரணப்படுத்தியோ எடுக்கப்பட்ட காட்சிகள் இல்லாத படமே கிடையாது. அதில் பெரும்வாரியாக மக்களை சென்று அடைந்த கல்லூரி கதைகளில் நம்மவர் என்ற கமலின் படமும், அடுத்த சாட்டை என்ற சமுத்திரகனி படமும் கண்டிப்பாக 90 ஸ் கிட்ஸ் மற்றும் 2K கிட்ஸ் மனதில் நீங்காத இடம் பிடித்தவை. 
 
ஒரே மாதிரியான எண்ணங்கள் பலருக்கு வரலாம் அதனை எவ்வாறு திரையில் பரதிபலிக்கரோம் என்பதே முக்கியமான ஒன்றாகும். அதுலையே நமது திறமை ஒழிந்துள்ளது. மேலும் அவ்வாறு தயாராகிய இரு படங்கள் தான் இவைகள்.
 
இந்த இரண்டு படத்திற்கும் ஒரு சில ஒற்றுமையும், வேற்றுமையும் உள்ளது. அவைகளைப் பார்ப்போம். ஆசிரியராக பொறுப்பேற்று வரும் கதாபாத்திரம் கமல் மற்றும் சமுத்திரகனி இருவருமே சிறு வயதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களாக அலிச்சாட்டியம் பண்ணியவர்கள் என்று சொல்லப்படும். ஆனால் காட்சிகள் காட்டப்படாது.
 
நம்மவர் கதையிலும் அடுத்த சாட்டை கதையிலும் மாணவர்களுக்கு பிடித்த ஒரு ஆசிரியராக காலப்போக்கில் மாறியிடுவர்.  மேலும் இந்த இரண்டு கதையிலும் கல்லூரி வளாகத்தை சுத்தம் செய்யுற பணியில் ஒரு பாடல் மூலம் ஈடுபட்டுயிபர்..
 
இரண்டிலும் வில்லனாக ஒரு மாணவன் தான் இருப்பான். ஆனால் நம்மவர் வில்லன் மது, மாது, கஞ்சாவென்று பலவைகளை பயன்படுத்துபவன். ஆனால் அடுத்த சாட்டை வில்லனுக்கு நிதானம் இல்லாத காதல் மட்டுமே அவனை வில்லனாக காட்டும். 
 
அடுத்த சாட்டை கனி அவர்களுக்கு குடும்பம், கல்யாணம் போன்ற காட்சிகள் இருக்கும். நம்மவர் கமல் அவர்களுக்கு தொற்றுநோய், லிவ்விங் டூ கேதரில் இருப்பர். மேலும் மிக பெரிய ஒற்றுமையாக இரண்டு கதையிலும் கூட வேலைச்செய்யற ஆசிரியரையே காதல் திருமணம் செய்வர்.
 
மேலும் ஒரு கல்லூரி படம் என்றாலே பெரும்பாலும் இது மாதிரியான காட்சிகள் தான் அமைகிறது. இதுவே அடுத்த சாட்டையில் நம்மவர். நம்மவர் கமல் முக பாவனையில் அடுத்து மாஸ்டர் விஜய் ஸ்டெல் இருப்பதாக தெரிகிறது.  அதுவும் கல்லூரி படம் என்பது நாம் அறிந்ததே. இருப்பினும் மாஸ்டரின் புதுமையை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
-கீதாபாண்டியன்
Published in Classic Movies

சில்லுக் கருப்பட்டி

ஒரு ஆணுக்கு தேவையான உண்மையான அன்பையும், நான் இருக்கேன் அப்படிக்கற பாசத்தையும் எப்படிக்கொடுத்தா அவங்க நல்லது கெட்டதுல நமக்கு பங்கு இருக்கறத தூய்மையா மிஷின் மூலமா காட்டிருக்கு இந்த படம்...

ஏய், கதைகேளுகதைகேளு கதைகேளு பொன்னாத்தா சொல்லற கதைய கேளு.
ஏன்டி இவளே 2020 பொரந்திருச்சு. இந்த வருஷத்துல என்ன ஸ்பெல்னு பாத்தையா. இனிமே இப்படியும் படம் பண்ணலாம். என்ன அக்கோவ் சொல்லற,
அட நம்ப தமிழ் சினிமால கொஞ்சப்பேரு தான் பெண் இயக்குநர் இருக்காங்கைடி. இன்னும் நிறையா திறமையுள்ள உள்ள புள்ளிங்க உள்ளவர முன் உதாரணமா ஒரு படம் வந்திருக்குடி, ஆனா அது ஒன்னு இல்ல நாலு படத்துக்கு சமம்டி.

பிங்க் பேக் 
குப்பமேடுல வேலைச்செய்யற
குப்பத்து புள்ளைங்களோட அதிகப்படியான சந்தோஷத்த படத்துல காட்டியிருக்காய்ங்க. குப்பைக்குள்ள
ஒரு பிங்க் பேக் இருந்திருக்கு. அதுக்குள்ள நம்ப மான்ஜா தேவையான பொருளுக தனியா பிரிக்கும்போத ஒரு பொன்னோட போட்டோவ அதுல பார்த்திடறான். அவனுக்கு அத பாக்கும்போது மனசுல அம்புட்டு சந்தோஷம் வருது.
அப்போ இருந்து அந்த புள்ள வீட்டுல இருந்து வர பிங்க் பேக் எல்லாமே இவன் தேடி பாப்பான். அந்த பணக்கார வீட்டு புள்ள தொலைச்ச சந்தோஷத்த குப்ப அள்ளறவன் தேடி கொடுக்கறதான் இந்த கதையே..

காக்கா கடி
ஒருத்தனோட வாழ்க்கை துணையா வர பொன்னுக்கு அவனோட நல்லது கெட்டதுல நிறைய பங்கு இருக்கு, ஆனா இந்த காலத்து புள்ளிங்க. மேட்டிமோனியில பதிவு பண்ணறவங்க, எதோ வயது ஆகுதேனு தான் வரன் பாக்கறாங்க.
ஒரு ஆணுக்கு தேவையான உண்மையான அன்பையும், நான் இருக்கேன் அப்படிக்கற பாசத்தையும் எப்படிக்கொடுத்தா அவங்க நல்லது கெட்டதுல நமக்கு பங்கு இருக்கறத தூய்மையா காட்டிருக்கு காக்கா கடி.
பொதுவா *கேன்சர்* கறது ஒரு வியாதி. அது குணமாக ஒருத்தருடைய உண்மையான அன்பு எல்லாம் சரியாகிடும் என்கிற மன உறுதியும் கொடுத்தாவே போதும்.
அதுதான் காக்கா கடி.

டர்டில்ஸ்
இளமை விட முதுமைக்குதான் எல்லா வகையான காதலும் தேவை. என்னதான் துணிச்சு கல்யாணமே வேணாம் அப்படினு வாழ்நாள் முழுசா வாழ்ந்து, பல திறமையான விஷயங்கள ஈடுபாடு வைச்சுக்கிட்டாலும் சொந்த கால் மேல நம்பிக்கைய இழந்து, வீல்சேர் ல நம்பி உக்காரும்போது நமக்கு ஒரு துணை இருந்தா நல்லாயிருக்குமே என்கிற ஏக்கம் கண்டிப்பா வரும்.
முதுமை காதலுக்கு இருக்கற எதிர்பார்ப்பை ஏற்று வாழ்றதுதான் உண்மையான காதல். அதுப்பத்தி தான் டர்டில்ஸ் சொல்லுது. இதன் எதார்த்த வார்த்தையை திரேட்டரில் பார்ங்க.

ஹே அம்மு
காதலிச்சு ஒரு வருடத்துலையே கல்யாணம் பண்ணனும் உன்னோட வாழனும் உன் குழந்தைக்கு தாய் ஆகனும்னு பல விஷயங்கள பெண் மனசு எதிர்பாக்குது. கல்யாணம் பண்ணி இரண்டு வருஷத்துலையே பேசறதுக்கு எதுவும் இல்லாம போகுது.
இரண்டு, மூன்று குழந்தைகள் ஆனாலும் தன் கணவன் தன்னை வர்னணை செய்யனும், பேசனும், ரசிக்கனும், அப்படிக்கற எதிர்பார்ப்பு 13 வருடம் கழிச்சி வருது.
பொதுவாக ஆண் மனசு சுகங்களை மட்டுமே தன் மனைவியிடம் கேக்குது. இப்படி ஒரு பேச்சுவார்த்தையே இல்லாம அவங்க அவங்க தேவையும் எதிர்பார்ப்பையும் ஒருத்தரை ஒருத்தர் திணிக்கும்போது அங்க சண்டை உருவாக்குது.
இப்படியெல்லாம் இருப்பதை கடந்த தலைமுறைகள் கடந்து எதோ வாழ்க்கையை வாழ்ந்தனர். இதுவே தொடர்ந்தால் இனி இன்றைய தலைமுறைகள் வாழ மூன்றாவதாக ஒரு மிஷின் உள்ள வந்து ஒருவரை பற்றி ஒருவரிடம் எடுத்து கூறினால் தான் வாழ முடியும் என்று ஆகப்போவதை முன் கூட்டியே சொல்லுது ஹே அம்மு.
இதன் நுணுக்கங்களைப் படத்தில் பார்ங்க.
ஒவ்வொரு வகையான சமூகத்திரையில் ஒவ்வொரு வகையான வயதினரின் காதலை சொல்லிருக்கு இந்த படம் சில்லுக் கருப்பட்டி.

-GEETHA PANDIAN

Published in Classic Movies