Print this page
Monday, 02 March 2020 02:54

"பெண்ணே நீ பிணமாக இருந்தாலும் பத்திரமாக இரு"

Written by Geetha Pandian
Rate this item
(1 Vote)
 பண்ணை வீடு பண்ணை வீடு Pollachi issue
பொள்ளாச்சி பிரச்சனை 
 
பண்ணை வீடு என்ற குறும்படத்தில்  கடந்த சில நாளுக்கு முன்பு நேர்ந்த பொள்ளாச்சி பிரச்சனையை மையமாக வைத்து கொஞ்சம் கற்பனை நயத்துடன் எடுத்துள்ளனர். 
 
உண்மையாக நடந்த பொள்ளாச்சி பிரச்சனை மிகுந்த பரபரப்பை மக்கள் மத்தில் ஏற்படுத்தியது.  
போலீஸ் மற்றும் ஊடகம் சார்ந்து பல வித தாக்கத்தை மக்கள் மனதில் பயத்தை விதைத்தது.
 
இந்த குறும்படம் மையக்கருத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. மேலும் போரப்போக்கை பார்த்தால், ஒரு மில்டரி மேன் வந்து தான் பெண்களை நாசம் செய்ய நினைக்கும் கூட்டத்தை அழிக்க முடியும் என்று சொல்லியுள்ளனர். ஒரு பெண்ணிற்கு ஒன்னுனா ஒட்டுமொத்த பெண் போலீஸ்சும் கூடுவார்கள் என்றும் சொல்லுது கதை. 
 
மேலும் அரசியல்வாதிகளின் தகுதி என்ன? என்ற கோபத்தையும் குறும்பட வசனங்கள் யோசிக்க வைக்குது. அவர்களுடைய கெட்டபுத்தியுள்ள மகன்களின் கொடுக்கை அறுக்கும்  வழிகளையும் உச்சக்கட்டம் சொல்லுது.
 
ஆனால் அதில் வரும் ஒரு வசனத்தை கேட்கும்போது, "பெண்ணே நீ பிணமாக இருந்தாலும் பத்திரமாக இரு" அப்பக்கூட பெண்ணை பத்திரமா இருக்கச்சொல்லுது சமூகம் என்று தான் நினைக்க தோன்னுது. 
 
-கீதாபாண்டியன்
 
Read 7595 times

Related items

Login to post comments