Log in

Register



ஒரு நாவலை வாசித்தல் என்பது ஒரு வாழ்வை வாழ்ந்து பார்ப்பது. ஒரு வாழ்வு ஒரு அர்த்தத்தை மட்டும் தான் கொடுக்க வேண்டும் என எந்த அவசியமும் இல்லை. சிறந்த நாவல்கள் ஒரு கதையை தன்னியல்பில் சொல்லி செல்கின்றன. ஆனால், ஒரு வாசகன் அந்த எழுத்தாளன் சொல்லாத அர்த்தங்களையும் அவன் சொற்களில் விடும் இடைவெளி மூலம் புரிந்து கொள்வதால் அந்த நாவல்கள் சிறந்தவையாக திகழ்கின்றன. எனவே, நாம் யாராக இருந்து ஒரு இலக்கியப் பிரதியை வாசிக்கின்றோமோ அதன் பொருட்டே நம்மை இலக்கியம் வந்தடைகிறது.

இப்படியாக நான் பயணித்த நாவல்களில் என்னை இன்றும் ஆச்சரியப்படுத்தும் நாவல்களில் ஒன்று தான் டான் பிரவுன் எழுதிய 'தி டாவின்சி கோட்'. இந்த நாவலின் மூலம் தான் டான் ப்ரவுன் எனக்கு அறிமுகமானார் என்றே சொல்லலாம். 2003 ஆம் ஆண்டு வெளியான இந்த நாவல் இன்றளவும் பல ரசிகர்களை கொண்டுள்ளது. இயேசு நாதருக்கு துணைவியார்? கேட்கவே ஆர்வத்தை தூண்டும் வரிகளே இந்த நாவலின் முக்கியப் பிளாட். இந்த நாவலை கருப்பொருளாகக் கொண்டு இயேசு கிறிஸ்துவுக்கும் மகதலேனா மரியாள் என்ற மேரி மெக்டலினுக்கும் திருமணமாகி ஒரு குழந்தையும் உண்டு என்று 2006 ஆம் ஆண்டு இந்த நாவலின் பெயரிலேயே திரைப்படம் தயாரித்து வெளியிட்டனர். கிருத்துவக் கோட்பாட்டை தரைமட்டமாக்குகிறது என்று கூறி இந்தத் திரைப்படத்திற்கு உலகெங்கிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

லாரஸ் அருங்காட்சியகத்தின் முன்னாள் பொறுப்பாளரான ஜாக்குவஸ் சாரணியர்(Jacques saurnierre) என்பவர் மர்ம மனிதரான சிலஸால்(Silas) கொல்லப்படும் காட்சியுடன் இப்படம் ஆரம்பமாகிறது. துறவியான சிலஸ், Saurniere-இடம் உள்ள ஒரு பொருளை விரும்பினான். ஆனால் Saurniere-ஒ அதை தர மறுத்துவிட்டார். இறப்பதற்கு முன் தன் ரத்தத்தால் Saurniere சில குறிப்புகளை விட்டுச் செல்கிறார். அந்த இரண்டில் ஒன்று 'எண்'குறியீடும் மற்றொன்று ராபர்ட் லாங்டன் குறிக்கும் போஸ்ட்ஸ்கிரிப்டாகவும் இருந்தது. ராபர்ட் ஒரு கலை மற்றும் சிம்பாலஜி அறிஞர் ஆவார். Saurniere கொலைசெய்யப்பட்ட இரவு, முதலில் சந்தேகத்துக்கு ஆளாக்கப்பட்டவர் ராபர்ட் தான். பிரான்ஸின் கிரிப்டோலஜி துறையின் சோபிநிவ்யு ( Saurniere-ன் பேத்தி) விசாரணைக்காக வராமல் இருந்திருந்தால் ராபர்ட் கைது செய்யப்பட்டு இருப்பார். Saurniere கொடுத்த குறிப்புகள் வைத்து. புதையல் தேடுதலை சோபியும் ராபர்ட்டும் தொடங்குகிறார்கள். ஆனால், இவர்கள் இரண்டு பேரும் கண்டுபிடிக்க வேண்டுமென்று Saurniere விரும்பியது என்ன? எதனால் ராபர்ட்டின் பெயரை Saurniere எழுதினார்? இந்த புனித பொக்கிஷம் ஏன் கிறிஸ்துவின் சந்ததியினரின் அனைத்து இரகசியங்களையும் உள்ளடக்கியதாக கூறப்படுகிறது? என்ற பல கேள்விகளை நோக்கி இப்படம் நகர்கிறது. மனித குலத்தின் மிகப்பெரிய கேள்விக்குறிகளில் ஒன்றான புனித பொக்கிஷத்தை கண்டுபிடித்து பாதுகாக்கும் மிக உயர்ந்த பணியை ராபர்ட் மற்றும் சோபி பெற்றிருந்தனர். Saurniere விட்டுச்சென்ற தடயங்கள் மூலம் சோபி மற்றும் ராபர்ட் ஒரு பேங்க் லாக்கருடைய சாவியை கண்டுபிடித்தார்கள். அந்த லாக்கரை திறந்த பொழுது கிரிப்டக்ஸ்(Cryptex)அடங்கிய ஒரு பெட்டி இருக்கிறது அந்த கிரிப்டக்ஸ் டாவின்சியால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ரகசியங்கள் குறித்து மேலும் அறிந்துக்கொள்ள ராபர்ட் சோபியை அவருடைய நண்பரான லீ டீப்பிங்கிடம்(Leigh Teabing)- அழைத்துச் செல்கிறார். டீப்பிங்கும் லியானார்டோ டாவின்சி யுடைய ஓவியமான தி லாஸ்ட் சப்பர்-ஐ (கடைசி இரவு உணவு)காட்டி ஏசுவைப் பற்றிய பல ரகசியங்களை கூறுகிறார். இயேசுவின் சந்ததி, Sang-Real என்ற அரச வாரிசு மற்றும் புனித பொக்கிஷமான மேரி மேக்டலின் போன்ற பலவற்றை குறித்து அவர் கூறுவார். மேலும் இவர்கள் இருவரையும் போலீசிடம் இருந்து காப்பாற்றி தனி விமானத்தில் அழைத்து செல்வார். பல நிகழ்வுகளுக்கு அடுத்து லீ டீப்பிங் தான் தன்னுடைய தாத்தாவைக் கொல்ல ஆள் அனுப்பினார் என்ற உண்மை சோபிக்கு தெரியவருகிறது. இறுதியாக லீ கைதுசெய்யப்பட, அந்தக் Cryptex-ஐ ராபர்ட் பல குறிப்புகளுக்கு அடுத்து நியூட்டனின் கோட்பாட்டின் உதவியுடன் திறந்து விடுகிறார். அதில், "புனித பொக்கிஷம் ரோஸிற்கு கீழே காத்துக் கொண்டிருக்கின்றது. பிளேடும் சாலிஸும்(Blade and Chalice)அதன் வாசலில் காத்து நிற்கின்றன. கலைஞனின் கைவண்ணத்தில் அவள் வாழ்கின்றாள். நட்சத்திரங்களின் பார்வையில் அவள் துயில் கொண்டிருக்கின்றாள்" என்று எழுதப்பட்டு இருக்கும். அந்த தடயங்களை வைத்து பொக்கிஷம் இருக்கும் இடத்தைக் கண்டுப்பிடித்து, அதில் கூறப்பட்ட இடமான ரோஸ்லின் சாபிள்(Rosslyn Chapel)-க்கு ராபர்டும் சோபியும் செல்கிறார்கள். அந்த தேவாலயம்தான் புனித பொக்கிஷத்தை கொண்டது என்று நினைத்தால், அங்கு எந்த பொக்கிஷமும் இருக்காது. ஆனால்,Saurniere ஒழித்துவைத்திருந்த சோபியின் கடந்தகால ரகசியங்களை அவர்கள் கண்டறிகின்றனர். இறுதியில் சோபிதான் அந்த பொக்கிஷம் என்பதை ராபர்ட் கண்டறிகின்றான். அனைத்து பிரச்சனைகளும் முடிந்து சுமூகமாக சென்று கொண்டிருந்த தருணம் அது. ராபர்ட் தன் முகமயிரை எடுக்கும்பொழுது வெட்டிக் கொள்கிறான், அப்பொழுது அவனுக்கும் அந்த cryptex-ன் வரிகள் நியாபகத்திற்குவர அந்த பொக்கிஷம் இருக்கும் உண்மையான இடமான Saurnierre பணிபுரிந்த அருங்காட்சியகத்தை நோக்கி பயணித்தான்.மேரி மெடக்லினின் சமாதியை கண்டுப்பிடிப்பான். ஆனால், இந்த உண்மை உலகிற்கு தெரியவந்தால் பல பிரச்சனைகள் உண்டாகும் என்பதால் அதனை மறைத்துவிடுவான் ராபர்ட். இந்த படத்தின் மிக அற்புதமான காட்சி என்று சொன்னால் அது இந்தக் கடைசி காட்சிகள்தான். 

இத்திரைக்கதையின் மூலம் இவ்வுலகில் தோன்றிய மதங்கள் அனைத்தும் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டவையே என்று சொல்லாமல் சொன்ன அதே வேளையில் தீயசக்திகள் என்று அழைக்கப்படும் சாத்தான்களை வணங்குதல், எகிப்த்திய பிரமிடுகளிலுள்ள சாத்தன்களின் சித்திரங்கள் மற்றும் இல்லுமனாட்டிகள் தங்கள் லூசிஃபர் கடவுளை சித்தரிப்பதற்காக வரைந்து தள்ளியுள்ள ஓவியங்கள் என்று அனைத்தையும் இப்படத்தில் பதிவுசெய்துள்ளனர். ஏசு என்பவர் புனிதமானவர், அவர் காதலை(அன்பு) மட்டுமே போதித்தார். அவர் ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தார் என்று கூறுவதே கடவுளையும் மதத்தை இழிவுப்படுத்துவதற்கு சமம் என்று கிருத்துவர்கள் கருதினார்கள். இப்படி சர்ச்சைக்குரிய கருத்துகளை தன் புத்தகத்தில் கூறும் டான் பிரவுன் காமத்தில் ஈடுபடுவதே கடவுளைக் காணும்வழியாக அக்காலத்தில் கருதினார்கள் என்றும், டாவின்சி தன் ஓவியங்கள் மூலம் ஏசு பற்றிய சில உண்மைகளை கூறுகிறார் என்றும் அவற்றை ஆராயும்பொழுது எனக்கு கிடைத்த சில குறிப்புகளுடன் என் கற்பனையும் சேர்த்து எழுதினேன் என்றும் கூறினார். உலகம் பல விமர்சனத்தை தன்முன் வைத்தாலும் நான் ஏசுவை பற்றி கூறுவது என்னை பொருத்தவரை உண்மைதான் என்று கூறும் டான் பிரவுன் ஒரு இலக்கிய கிறுக்கன் என்றேன் சொல்லவேண்டும். இந்த நாவலை படிக்க ஆரம்பித்தவுடன் டான்பிரவுனின் கன்னிகளாக மாறிய பலரில் நானும் ஒருத்தி என்றே சொல்வேன்.

- Sumalekha (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)

Published in Suma Movie-Web
Monday, 18 November 2019 05:05

Sacred Games விமர்சனம்

5வது semester exams முடிஞ்சதும் நண்பர்கள்-லாம் சேர்ந்து இந்த லீவ்-ல என்ன பண்ணலாம்னு பேசிகிட்டு இருந்தோம்.அப்போ என் தோழி ஒருத்தி Netflix-ல சீரிஸ் பாருடி நல்லா இருக்கும்னு சொன்னா. சரி முதமுறையா பாக்குறேன் நல்ல சீரிஸா சொல்லுடினு கேட்டதுக்கு அவ வதவதனு Stranger things, Delhi crime, Sacred Games, 13 reasons why –னு ஒரு பெரிய லிஸ்டும் அதோட டைரடரஸ் பத்தியும் சொன்னா. அப்போ அனுராக் கஷ்யப், விக்ரமாதித்ய மோத்வானி மற்றும் நீரஜ் காயான் இணைந்து இயக்கிய sacred games-ன் பிளாட் என்னைய ரொம்ப ஈர்த்துச்சு. லீவும் ஸ்டார்ட் ஆச்சி, சீரிஸும் ஸ்டார்ட் ஆச்சி, சாக்ரட் கேம்ஸும் பரிட்சையமாச்சு.


சர்தாஜ் சிங்(சயிஃப் அலி கான்), தன்னுடைய போலீஸ் வேலைய காப்பாத்திக்கவும், உயர்அதிகாரியான DCP Parulkar(Neeraj) பண்ண தவறான என்கவுண்டர் பத்தி யார்க்கிட்டயும் சொல்லமுடியாம போராடிட்டு இருக்குறாரு. எந்த சாதனையும் இல்லாம நேர்மையாக மட்டும் இருக்கும் ஒரு சாதாரண போலீஸ் அதிகாரிகளுள் ஒருவரா பல பிரச்சனைகளிலிருந்து வெளிவர திணறிக்கிட்டு இருக்குற சமயத்துல சர்தாஜுக்கு ஒரு unknown நம்பர்-லர்ந்து போன் வருது.அதுல பேசுனவன் மும்பையை காப்பாத்த இன்னும் 25 நாட்கள் மட்டும்தான் இருக்கு, திரிவேதி மட்டும் பாதுகாப்பாக இருப்பான், தன்னுடைய மூன்றாவது தந்தை எல்லாரையும் அழிச்சிடுவானு சொல்லி மிரட்டுறான். இதபத்தி விசாரணை மேற்கொள்றப்போதான், மிரட்டல் விடுத்தவன் கணேஷ் காயிடொண்டே( Nawazuddin Siddiqui) அப்படினும், ஒரு சில வருசத்துக்கு முன்னாடி மும்பை நகரத்தோட அழிக்கமுடியாத மோசமான குற்றவாளியா இருந்து சில வருசங்கள் தலைமறைவாகி இப்ப வெளியில வந்துருக்கானும் சர்தாஜ் கண்டுபிடிக்கிறான். சர்தாஜும் காயிடொண்டேவும் பேசிகிட்டு இருத்ததை RAW ஏஜெண்டான அஞ்சலி மாதுர்(ராதிகா ஆப்தே) கேட்டாலும், Datas எல்லாம் அழிந்துபோக அஞ்சலியால் எந்த விஷயங்களையும் கண்டுபிடிக்க முடியாமல் போகுது.


காயிடொண்டே தன்னுடைய வாழ்க்கை பத்தி சர்தாஜ்-கிட்ட சொல்ல ஆரம்பிக்கிறான். காயிடொண்டேவுடைய அம்மா வேசி-ன்றதால அவனுடைய அப்பா அவளை கொலை செய்ததற்காக கைது செய்யப்படுறாரு. பின்னர், தாய் தந்தை இல்லாம மும்பைக்கு வந்து ஒரு இந்து ஹோட்டல்-ல வேலை பாக்குறான். அந்த ஹோட்டல்தான் காயிடொண்டேவுடைய அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளம் போட்டுச்சினே சொல்லலாம். அங்க தான் அவன் மதத்தை ஆயுதமா பயன்படுத்தி சமூகத்துக்கு மத்தியில ஒரு சலசலப்பையும் வெறுப்பையும் உண்டாக்க கத்துக்கிறான். அதுக்கடுத்து போதை பொருட்கள் தொழிலில் ஈடுப்பட்டு, தன்னோட இரண்டாவது தந்தையை(சலீம் காகா) சந்திக்கிறான். 1980-களில் ஆரம்பத்துலேயே சலீமை கொன்னு, அவனுடைய தொழிலை தன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துடுறான் காயிடொண்டே. இப்படியே காயிடொண்டேவுடைய ஆரம்பக்கால வாழ்க்கையை அவனே விவரிக்கிறான். சர்தாஜியோ காயிடொண்டே கூட பேச்சுக்கொடுத்துட்டே காயிடொண்டே மறைஞ்சிருக்கும் இடத்தை கண்டுபிடிச்சி உள்ளே போறப்போ ஜோஜோ-ன்ற ஒரு பெண்ணோட சடலத்தை பாக்குறான். இப்படியா அஷ்வதாமா-ன்ற முதல் எபிசோடு எல்லாரையும் அறிமுகம்படுத்த, உடனே 1,2,3,4,5-னு அடுத்த எபிசோடான ஹலாஹலா காயிடொண்டேவின் தற்கொலையோட ஆரம்பிக்கிது. இந்த மரணம் போலீஸுக்கு எச்சரிக்கைவிடுத்தது மட்டுமில்லாம மும்பையோட விவிஐபிகளையும் நடுங்க வச்சிதுனே சொல்லலாம். Crime Spot- ல இருந்த சர்தாஜ் சஸ்பெண்ட் ஆக, RAW ஏஜெண்டான அஞ்சலிக்கூட சேர்ந்து காயிடொண்டே வழக்க விசாரிக்க ஆரம்பிக்கிறாரு. அப்போ Bunker-ல பாத்த ஒரு பெண்ணோட உதவியோட காயிடொண்டேவுடைய கூட்டாளியான Bunty இருக்குற இடத்தைக் கண்டுப்பிடிக்கிறான். நிகழ்கால கதை ஒருபுறம் நடக்க இன்னொருபுறம் தன் எதிரியான Suleiman Isa கிட்டர்ந்து ஒரு பெண்ணை கவர்ந்துட்டு வந்துடுறான் காயிடொண்டே. அவ அவனுடைய அதிர்ஷட தேவதையா வாழுறது Atapi Vatapi-ன்ற மூன்றாவது எபிசோடோட பிளாட்டா விரியுது.

நான்காவது மற்றும் ஐந்தாவது எபிசோடுகளான Brahmahatya ம்ற்றும் Sarama, டிவி சீரியல் நடிகையான நயனிகா மூலம் Bunty இருக்குற இடத்துக்கு போறப்போ நயனிகா மற்றும் சர்தாஜ் இரண்டு பேரும் கையும் களவுமா Bunty-கிட்ட மாட்டிக்கிறாங்க. சர்தாஜை Bunty விடுவிக்க, தன்னை நம்பி உதவி செய்யவந்த நயனிகா-வை காப்பாத்த நினைச்சு RAW ஆபிரேஷனை நடுவுல புகுந்து கெடுத்துடுறான் சர்தாஜ். இது ஒருபுறம் இருக்க, காயிடொண்டே வாழ்க்கைய இந்து-இஸ்லாம் அரசியல், அதிர்ஷ்ட காதல் தேவதையின் மரணம் போன்றவை மாத்தி அமைச்சிடுது. இப்படியாக காதல், காமம், பிரிவு, வலி,துரோகம்,பகை,நன்றி,அரசியல் என பல உணர்வுகளோடும் இந்த இரண்டு எபிசோடுகளும் பயணிக்கின்றன. இதுவரைக்கும் சர்தாஜ், காயிடொண்டே போன்றவர்களை முன்னிலைப்ப்டுத்தி வந்த எபிசோடுகளுக்கு மத்தியில சர்தாஜின் Constable-லான கடேகர் பத்தியும், சர்தாஜ் நடத்திய விசாரணையில கடேகரின் பங்களிப்பு பத்தியும், கடைசில அவர் கொலை செய்யப்படுறதையும் விரிவா காட்டுது ஆறாவது எபிசோடான Pretakalpa.

பாதுக்காக்கப்படுவானு காயிடொண்டே சொன்ன திரிவேதி மற்றும் காயிடொண்டேவின் மூன்றாவது தந்தையான குருஜி பத்தின ஒரு சின்ன அறிமுகத்தோட Rudra எபிசோடு ஆரம்பிக்கிது. இதுல காயிடொண்டே தன்னோட ஆசை மனைவிய இழக்குறான், தன் குடும்பத்தை அழிச்சவனை கொன்னு ஜெயிலுக்குப் போறான். இப்படியா காயிடோண்டேவுடைய வாழ்க்கையின் அடுத்தக்கட்டதை இந்த எபிசோடு விவரிக்க, உயர் அதிகாரிகளோட அழுத்தங்கள்லாம் தாண்டி சர்தாஜின் உதவியோட விசாரணை நடத்திவந்த அஞ்சலி கொலை செய்யப்படுறாங்க. அந்த கொலையாளி சர்தாஜையும் கடத்தி சித்ரவதை செய்றான். பின்னர், அந்த கொலையாளியும் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட Hospital-ல அட்மிட்டாகுற சர்தாஜ் அடுத்து என்ன செய்றதுனு யோசிக்கிறான். ஒருநாள் குருஜியோட ஒரு நிகழ்ச்சிய டிவி பாக்குறப்போ குருஜியின் வார்த்தைகள் காயிடொண்டேவுடைய விஷயங்களோட ஒத்துப்போறர்த சர்தாஜ் கவனிக்கிறான். உடனே காயிடொண்டே இறந்துக் கிடந்த இடத்துக்குப்போய் மறுபடியும் ஆராய்ந்துப் பாக்குறான் சர்தாஜ். அங்க அவன் கண்டுபிடிக்கிறது திரிவேதிய. அதேசமயத்துல காயிடொண்டே ஜெயிலர்ந்து தப்பிச்சி எங்க போறான், குருஜி எப்படி காயிடொண்டேவுடைய மூன்றாவது தந்தையா மாறுறாரு, உண்மையான Sacred Game விளையாடுறது யாரு, 25வது நாள் நடக்கப் போறர்து என்ன போன்ற பல கேளிவிகளை எழுப்பி Yayati -னற எபிசோடோட சீசன்-1 முடியுது. சீசன் 1 சீசன் 2 ரெண்டையும் அடுத்தடுத்த பார்த்ததால என்னமோ தெரில சீசன் 2 எனக்கு ரொம்ப ஸ்லோவா இருந்துச்சு.

சீசன் 1 விட சீசன் 2 ரொம்ப அருமையா இருந்துச்சுனு சொல்ல முடியாது. ஆனா, அங்கங்க தொய்வுகள் இருந்ததால கொஞ்சம் ஓட்டி ஓட்டி பார்த்துட்டு இருந்தேன். இந்த ரெண்டாவது சீசன்ல காயிடொண்டேவுடைய கதாபாத்திரம் ஒரு பக்கா Netflix series-ல எதிர்பார்க்கிற எல்லா அம்சங்களையும் உள்ளடக்கி இருக்குனு சொல்லலாம். புது இயக்குனரோட சேர்ந்த அனுராக் கஷ்யப் சாக்ரெட் கேம்ஸ்ல இந்திய அரசாங்கத்தில் வேரூன்றி புதுப்புது ஆட்டக்காரர்களை இறக்கி பட்டையைக் கிளப்பி இருக்கார்.அவங்க எதவேணும்னாலும் அதிகாரப்பூர்வமா செஞ்சு முடிக்கலாம்.ஆனா அவங்க எல்லாருக்கும் அவங்களுடைய திட்டங்கள் வெற்றி பெற வேண்டும்னா காயிடொண்டே மாதிரியான ஒரு ஆளோட உதவி தேவை .இந்த சாக்ரெட் கேம் நாம நினைக்கிறதவிட வேறு மாதிரியான ஆட்டம்னு டைரக்டர்ஸ் சொல்லாமல் சொல்லி இருக்காங்க அப்புறம் அங்க நம்ப அனுரக் கஷ்யப்-ன் ட்ரேடுமார்க்ஸ்களான டைம் லேப்ஸ், நியூஸ் கிளிப்ஸ்,சாங்ஸ்,ஸ்பெஷல் புரோபர்டீஸ் போன்றவை நம்மள informative -வா வச்சிக்கிது.  ஒரு நிமிஷம் கூட அவர் என்னைய  அந்த உணர்வுகளில் இருந்து விலகவேவிடல. அரசியல் கருத்துக்கள் சரமாரியா அங்கங்க நம்மள கட்டவிழ்த்து விட்டுடுது.  அதை  உண்மையிலேயே நாம நினைக்கிற நபர்களை வச்சு பார்த்தா எவ்வளவு அரசியல் ரீதியா இந்த Sacred game இருக்குனு. தெரிஞ்சுக்கலாம். இதுவரைக்கும் காயிடொண்டே தான் கதையை சொல்லிவிட்டு வந்தார்.ஆனா, இப்போ சர்தாஜ் கதையை இன்னும் விவரிக்கிறார்னுகூட சொல்லலாம். காயிடொண்டே குற்றப்பகுதிய நம்மகிட்ட சொன்னா, சர்தாஜ் போலீஸ் மற்றும் அரசாங்கத்தோட கருப்புப் பக்கத்த அ அப்பாவித்தனத்தோடும் ஆர்வத்தோடும் கதைக்குள்ள நம்மள அழைச்சிட்டு  போறாரோ. முதல் சீசன் ஒரு முழுமையான காயிடொண்டேவுடைய கதையா இருந்துச்சினா, இரண்டாவது சீசன் குருஜியை மையப்படுத்தியே நகர்கிறது. காயிடொண்டே வாழ்க்கையில முக்கிய பங்கு வகித்த பெண்கள் பத்தியும் அதுவும் முக்கியமா சீசன் 1 ஆரம்பத்துல காயிடொண்டேவால கொலை செய்யப்பட்ட ஜோஜோ பத்தியும் பேசுது. இந்த பகுதி ஆணின் சூழ்நிலையால் பெண்கள் தாக்கப்படுகிறது பத்தி விவரிக்கிது.


பல திருப்பங்கள், ஒரு எபிசோடுக்கும் இன்னொரு எபிசோடுக்குமான இணைப்பு அருமையா கொடுக்கப்படிருக்கும். கடந்த காலம் மற்றும் நிகழ்காலம் என பிரிக்கப்பட்டு காட்டப்பட்ட இந்த டிவி சீரிஸ் தற்போதைய இந்துதுவ அரசியலின் கருப்புப் பக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு ஆயுதமாகவே இருக்குதுனே சொல்லலாம். Netflix- ஆனது உலகத்துல இருக்குற எல்லா மதத்தையும் ஈர்க்க வெளிநாடுகள்-ல தொடங்கி இந்தியா வரைக்கும் மதம் சார்ந்த டிவி சீரிஸை எடுத்துகிட்டு வந்துட்டு இருக்கிறாங்க. அந்தவகைல இந்தியாவுல எடுத்த டிவி சீரிஸில் அதிகமான மக்களை ஈர்த்து வெற்றிப்பெற்ற டிவி சீரிஸ் லிஸ்டில் முதல் இடத்தில் இருப்பதுதான் இந்த Sacred Games.

- Sumalekha (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)

Published in Web series

Calendar

« April 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30