படம் பார்த்த என்னுடைய அனுபவம். என் வீட்டிலும் ஒரு நசிர் இருக்கிறார் போன்ற அனுபவம்
எதார்த்த பின்னணியில் ஒருவருடைய ஒரு நாள் ஓட்டத்தை பக்குவமாக காட்டியுள்ளனர். கமெசியல் பின்புலமின்றி ஒவ்வொரு செயல்களையும் அழுத்தமாக வடிவமைத்துள்ளனர்.
(உதாரணத்திற்கு, இயல்பான ஒருவன், எப்படி பொறுமையாக நிதானமாக சேவ் பண்ணுவான், குளிப்பான், சட்டைப்போடுவான். நடப்பான், ஒரு சிகரெட்டை எடுத்து அதனை பற்ற வைத்து, அதனை எத்தனை முறை புடித்து விட்டு பின்னர் எப்படி அதனை மிதிப்பான்.) இதை போன்று ஒவ்வொரு நிகழும் இயல்பு தன்மையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
ஒரு ஏழை எளிய மனிதன், அவனுடைய குடும்ப நிலை, வயதான அம்மா, மூளை வளர்ச்சியில்லாத குழந்தை, சொந்தகாரங்களால் வேலைகாரியாக நடத்தப்படும் மனைவி, ஒரு துணி கடை திறக்கறதுல இருந்து மூடற வரை எவ்வளவு வேலை செய்கின்றனர்.
கடனை அடைபதற்காக பணத்திற்காக முதலாளியிடம் காத்திருக்கும் தொழிலாளி, முதலாளி குடும்பத்திற்கு வேலைகாரனாக நடத்தப்படும் நசிர். தன் குழந்தையின் மருத்துவ செலவுக்கு போராடும் ஒரு தந்தை, மனைவியை சொந்தக்காரங்க வீட்டுக்கு அனுப்பி வைச்சிட்டு மனமே இல்லாம இருக்கும் கணவன், என்று ஒருவருடைய ஒரு நாள் பயணத்தை அருமையாக வெளிப்படுத்தி, நமது உள்ளங்களை உருக்கும் அளவுக்கு ஒரு எதிர்பாராத உச்சக்கட்டத்தை கொடுக்கும் படம். இப்படி நசிருடைய ஒரு நாள்ளே கதை களம்.
ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு நசிர்(அப்பா, கணவன், தாத்தா, தம்பி, அண்ணா) கண்டிப்பாக இருப்பாங்க. அவர்களை நசிர் வடிவில் வைத்துப் பார்த்தது போல ஒரு அனுபவம்.
(திலிப் குமாரின் :ஒரு குமாஸ்தாவின் கதை : சிறுகதை தழுவல்)
-எதார்த்த மனிதர்கள் பார்க்க வேண்டிய படம். #கீதாபாண்டியன் #Geethapandian