நம் எதிரிகள் எல்லா நாளும் எதிரிகளாக இருப்பதில்லை. ஆனால் கூடவே இருக்கும் நண்பன் ஒரு நாள் துரோகியாக மாறுவான் என்பதில் படத்தில் திரும்பம் காட்டிள்ளனர். தெலுங்கு படமான HIT The first Case
HIT எனும் போலீஸ் Department ல் போலீஸாக இருக்கும் ஒருவன் வாழ்க்கையில் நேர்ந்த பல விஷயங்களினால் மன நோய் வந்திருக்கும். நெருப்பை பார்த்து மன அளவில் பாதிப்பு அடைந்துள்ளதால் அந்த மன நோய் அவன் செய்யும் வேலைக்கு தொந்தரவாக இருக்கும்.
அதற்காக சிறிது காலம் விடுமுறையில் ஓய்வெடுத்துக்கொண்டு இருப்பான்.
அப்போது தொடர்ச்சியாக இரண்டு பெண்கள் காணாமல் போயிருப்பார்கள். அதில் ஒருவர் விக்ரம் எனும் கதாநாயகனுக்கு காதலி.
இந்த விஷயம் தெரிய வர அவர் திரும்பவும் பணியில் சேர்வார். இந்த கேஸ்களை விசாரிப்பதன் போது நடக்கற அதிர்ச்சி நிகழ்வுகளே HIT The first Case.
இது ஒரு புறம் இருக்கவே. மறுப்பறம் அனாதை இல்லத்தில் பல குழந்தைகள் வளர்கிறது. அதில் மூன்று குழந்தைகளில் ஒருவரை ஒரு தம்பதிகள் வந்து சீட் குலுக்கிப்போட்டு தேர்ந்தெடுத்துக்கூட்டிட்டு போவர். அப்போது ஒரு பனிரெண்டு வயது நிரம்பிய ஒரு பெண் குழந்தை பத்து வயது நிரம்பிய பெண் குழந்தையிடம் ஒரு விஷயத்தைச்சொல்வால், "நம்மோட ஆறு வயது நிரம்பிய தோழிக்கு இருதய கோளாறு இருக்கறனால நீ அவங்க சொல்லி உதவிச்செய்ய சொல்வியா" என்று கண் கலங்கினாள்.
அப்போது அந்த பத்து வயது சிறுமி வாக்குறுதி கொடுத்து விட்டு அதனை மறந்து விடுவாள். பின்னர் அந்த ஆறு வயது சிறுமி இறந்து விடும். பணம் வந்ததும் மாறிப்போனவளை ஒரு பக்கம் பழி வாங்க துடிக்கிறவள். இந்த இரண்டு பக்கங்களும் சந்திக்கின்ற இடத்தில் படத்தின் இரண்டாம் பாதியில் விறு விறுப்பாக கதை பயணிக்கும் அதுவே HIT The first Case.
காதலியின் நினைவுடன் பழைய விஷயங்களின் மன நோயாளியுடன் இந்த கேஸ் நடத்தும் கதாநாயகன். Case ஜெயிக்குமா? என்பது இப்போதும், விக்ரமின் மன நோயாளியின் காரணங்கள் பார்ட் -2 ல் வரும் என்பதுடன் படம் முடிகிறது...