இறந்த காலத்திற்கும் நிகழ் காலத்திற்கு உள்ள படைப்பு ஒற்றுமை
ராஜ பார்வையில் அம்மா இல்லாம சித்திக்கொடுமையில் வளர்ந்த மகன். ஒரு அதிர்ச்சியின் மூலம் வந்த நோயால் கண் பார்வையற்று பார்வையற்றோர் விடுதியில தங்கியிருந்து பின்னர் அங்கிலிருந்து வெளியே வந்து ஒரு எளிய வீட்டில் தங்கியிருப்பார் கமல். படம் முழுக்க ஒரே நண்பர்.
சைகோவில் அம்மா அப்பா கனடாவில் இருப்பதாக கூறி விட்டு ஒரு நல்ல வீட்டில் தனிமை கலந்து ஒரு நண்பருடன் தங்கியிருப்பார் உதயநிதி.
ராஜ பார்வையில் அழகான ஒரு பெண் லிப்பிட்டில் கமலை தப்பாக நினைச்சி குச்சியை கீழே தள்ளி விடுவாள். பின்னர் கமலுக்கு பார்வையில்லை என்று புரிந்துக்கொள்வாள். பின்னர் ஒரு இசை நிகழ்ச்சிகளுக்கு போயி பார்த்து விட்டு கமலிடம் மனிப்புக்கேப்பாள்.
சைகோவில் பிரபல வானொலியில் ஆர்.ஜே வாக இருக்கும் தாகினிக்குரல் வளையில் விழுந்து பின் தொடர்ந்து காதலை வெளிப்படுத்த முயற்சிப்பண்ணுவான். அப்போ, பார்வையற்ற உதையை கீழே தள்ளி விடுவாள். பின்னர் பாடலை கேட்டு விட்டு மன்னிப்புக்கேப்பாள்.
இரண்டுப் படத்துலையும் வீட்டில் நடக்கும்போது குச்சியை பயன்படுத்தாமல் நடப்பர். எங்கையாவது தெரியாத இடத்தில் குச்சியின் உதவியோடு நடப்பர்.
பார்வையில்லாதவர்களின் மனநிலையை அடிப்படையே இரண்டு படமும் பிரதிபலிக்கும். தொடுதல் உணர்வை வைத்து ஒரு கண்டுப்பிடிப்பதும் காதல் செய்வதும் செய்வர்.
இரண்டு படங்களிலும் கதாநாயகனுக்கு தானொரு "குருடன் என்பதும் தன்னால் என்ன முடியும்" என்ற தாழ்வு மனப்பான்மையும் இருக்கும்.
இரண்டுப்படத்திலும் இசையை மையப்படுத்திய படத்தின் முக்கியமான காட்சிகள் பிரதிபலிக்கும்.
வயலின் இசை கலைஞராக "அந்திமழை பொழிகிறது" என்பதில் காதல் உருவாகியது ராஜ பார்வையில். கிட்டார் ஆர்ட்டிஸ்டாக நடிக்க வைத்து "உன்ன நினைச்சு உருகிப்போனேன்" என்று பாடி கதாநாயகின் மனதை மாறும்.
சமையல் போன்ற விஷயங்களை கதாநாயகி சொல்ல சொல்ல செய்யும் முயற்சியை பார்வையற்ற கமல் செய்வார். நண்பரும் தோழியும் சொல்ல சொல்ல கார் ஓட்டும் முயற்சியை பார்வை தெரியாத உதயநிதி செய்திருப்பார்.
இசையோட இளையராஜாவின் பிம்பம் கலந்த படம் ராஜ பார்வை மற்றும் சைகோ.
ராஜ பார்வையில் படத்தின் ஒரு இடையில் கமலை கதாநாயகி ஒரு இடத்திற்கு வரச்சொல்வாள். அப்போது கதாநாயகியை பார்க்க முடியாது. கமல் நண்பனை ஹேட்டலுக்கு வரச்சொல்லிட்டு போக மறந்திடுவான்.
அதே போல சைகோவில் தாகினி உதயநிதியை ஒரு இடத்தைக் கண்டுப்பிடித்து வரச்சொல்லிருப்பாள். அங்கதான் கதாநாயகி தொலைந்துப்போவாள். கதைகளம் சூடுப்பிடிக்கும்.
கமலை சில இடங்களில் பார்க்கும்போது பார்வையாளருக்கு பரிதாபம் வரும். உதயநிதியின் பரிதாபம் வருமாறு காட்சிகள் அமையாது. கமலின் இயல்பும் உதயநிதிக்கு கட்டுபாடும் நடிப்பில் தெரிஞ்சுயிருக்கும்.
இவ்வாறு இரண்டு படங்களுக்கும் இடையில் ஒற்றுமை இருக்கிறது. இதுவே சைகோவில் ராஜபார்வை.
இரண்டுப்படத்தின் இறுதி கட்டம் சிறு மாறுபாடுகள் ஆனாலும் கதாநாயகனுக்குதான் கதாநாயகி என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.
மண் மணம் மாறாமல் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த பல படங்கள் இயக்குனர் பாரதிராஜாவால் எடுக்கப்பட்டவை. அப் படங்களில் ஏராளமா கிராமத்து சித்திரங்களை திரை சித்திரங்களாக வடிவமைத்து காட்டிருந்தார். பல நடிகைகளையும், நடிகர்களையும் உருவாக்கி வளர்த்து விட்டவர். திரைக்கதை, வசனம், இயக்கம் என்று எண்பதுகளில் (80 s) கலக்கியவர். கடந்த சிறிது காலமாக குணச்சித்திர நடிப்பில் கவனம் செலுத்தி இன்று மறுபடியும் புத்துணர்வு கொண்டு எழுந்து வந்திருக்கார்.
அதுதான் மீண்டும் ஒரு மரியாதை திரைப்படம். நாகரீகம் கெட்டுப்போச்சு, வழக்கம் வழக்குலைந்து போச்சு, பாட்டி தாத்தா பாசமெல்லாம் பழசாகிப்போச்சுனு சொல்லற விதமா ஒரு படம் வெளி வரப்போகுது.
வெளி நாடுகளில், கிராமத்து பாட்டி, பேரனுக்கு துணி மாற்றி விடுவதும், தலையில் எண்ணெய் தேய்ப்பதும் பேரன் பேத்திக்கு பாசம் போல தெரியல. பாட்டி தாத்தா உடைய பாசம் என்ன என்றாலே தெரியல. இதற்கு இடையில் மொழியொரு தடையாக இருக்கிறது. அதை விட அந்த நாட்டில் குழந்தை பாதுக்காப்பு சட்டம் கடுமையாக உள்ளது. எதற்காகவும் எப்பவும் யாரும் யாருமேலையும் போலீஸ் கேஸ் போடலாம்.
இதில் கலாசார வித்தியாசமும் தெரியுது. தலைமுறை இடைவெளி மற்றும் பாசத்தை பற்றி தெரியாமல் வளரும் குழந்தைகள், வளர்க்கும் பெற்றோர். அதற்கு ஒரு வகை காரணமாக அறிவியலும் விஞ்ஞானமும் இருக்கிறது.
ஒரு காலகட்டத்துல தமிழ் கலாசாரத்துல, பாட்டி கிள்ளிட்டாங்க, தாத்தா அடிச்சிட்டாங்கனு பெற்றோரிடம் சொன்னா கூட அத பெருசா எடுத்திக்க மாட்டாங்க. அந்த நிலை எந்த இடத்துலையும் மாறுதுனு சொல்லிருக்கு இந்த சினி பிக்.
80ஸ் முதல் மரியாதை வெற்றிக்கொண்டாடம். 2020 ல் மீண்டும் ஒரு மரியாதை எப்படி இருக்கும் தியேட்டரில் போயி பாக்கலாம்.