Log in

Register



வீட்டுக்கு வரும் ஆண்களை ஏளானம் செய்யும் தாய் வழி சமூகத்தின் ஆணவத்தையும், சொத்து இருக்கற திமிரையும், சாதி வெறியையும், வர்க்க பிரிச்சனையும் வீட்டுக்கு வந்த மருமகள் எடுத்து எறிய வேண்டும் என்ற ஒரு மையக்கருவில் இரண்டு கதைகள். 
 
ஒரு தாய் வழி சமூகத்தில் உள்ள சொத்துக்கள் நிறைந்த அதிகாரத்தோடு அகங்காரம் இருக்கற மாமியார். வீட்டோட மாப்பிள்ளையாக வரும் ஒரு ஆண்யை எவ்வளவு கீழ் தனமாக நடத்துக்கிறார்கள் என்பதை 20 வருடத்திற்கு முன்னாலும் பின்னாலும் உள்ள தலைமுறைகள் இடைவெளி(Generation Gap) யுடன் காட்டியுள்ளனர். இதுவே வீட்டுக்கு வந்த மருமகளின் மையக்கரு. 
 
அப்படிப்பட்டயொரு மாமியார் வருங்காலத்தில் பாட்டியாகயாகும்போது, தன்னோட பேரன் வழியில் வரும் மருமகள். 20 வருட இடைவெளியில் பாட்டியால் ஏற்பட்டுள்ள குழப்பங்களை சரிச்செய்து அகங்காரம் இல்லாமல் குடும்பத்தை எப்படி மாற்றியமைக்கிறாள் மருமகள்.
 
பொறந்தாலும் ஆம்பளையா பொறக்க கூடாது என்ற படத்தின் மையக்கருக்கூட தாய்வழி சமூகத்தில் பிறக்கும் பெண் வாரிசுகளுக்கு கணவனாக வரும் ஆண்களை வேலைக்காரனை விட மோசமாக நடத்தறாங்க என்பதே ...
 
அப்படிப்பட்ட ஒரு பெண் தாய்மை அடையும்போது, தனக்கு பிறந்த ஆண் வாரிசையையும் பண ஆதிக்கமும் திருமியும் நிறைந்த தன் குடும்ப இன்னொரு பெண் வாரிசுக்கு திருமணச்செய்து தர நினைக்கும்போது, 'என்னைப் போல தன் மகனும் கேவல பட கூடாது' என்பதற்காக மீனவர் குப்பத்து சமுதாயத்தில் ஒரு பெண்ணை பணக்காரங்க என்று நாடகமாடி கல்யாணம் செய்து வைக்கிறார் மாமனார். மாமியாரின் பண திமிரை அடக்கி ஆண்களை மதிக்கனும் அதுலையும் கணவனே கண் கண்ட தெய்வம் என்று மாமியாரை நினைக்க வைக்கும் மருமகள். 
 
வீட்டுக்கு வந்த மருமகள் படத்தில் பணக்கார பெண், சாதாரண சேரி பெண் போற் வந்து அகங்காரம் நிறைந்த பாட்டிக்கும், நாத்தனாருக்கும் படம் கற்பிப்பாள்.
 
பொறந்தாலும் ஆம்பளையா பொறக்க கூடாது படத்தில் மீனவர் சமுதாயத்து பெண் பணக்காரர்கள் போல நடித்து கல்யாணம் செய்து, மாமியாருடைய தவறை கூட இருந்தே குத்தி காட்டுவாள்.
 
வீட்டுக்கு வந்த மருமகள் படத்தில், கடைசி இருபது நிமிடத்தில் மருமகளால் நடக்கும் சில மாற்றங்கள், கணவனை மதிக்காத மனைவியை திருத்துக்கிறாள். ஏழை குடும்பத்து மாப்பிள்ளையாக இருந்தாலும் அவன் ஒரு ஆம்பளை என்ற ரோஷத்தில் பிரிந்திருக்கும் கணவன் மனைவியைச் சேர்த்து வைக்கிறாள். கூடவே, காதலிக்கும்போது இருக்கும் ஆணின் கல்யாணத்துக்கு அப்பறம் வருந்தும் பெண்ணின் மன உணர்வை வெளிப்படுத்தியிருப்பர். 20 வருடத்திற்கு முன்னர் வாழ்க்கையை தொலைத்து விட்டு தன் குழந்தைகளை தன்னால் வளர்க்க முடியாமல் போன வருத்தத்தில் இருந்த பாட்டியின் மாப்பிள்ளையை அவரோட குடும்பத்தோடு சேர்த்து வைக்கிறாள். 
 
பொறந்தாலும் ஆம்பளையா பொறக்க கூடாது படத்தில், தான் பணக்காரி இல்ல,  ஒரு மீனவ சமுதாயத்தை சேர்ந்தவள் என்ற உண்மை இடைவெளிக்கு பின் தெரியவருகிறது. இத்தனை காலம் பணக்கார மருமகளை கையில் வைத்து தாங்கிய மாமியார். இப்போது அசிங்கப்படுத்துக்கிறாள். இந்த இடத்தில் வர்க்க பிரச்சனை வருகிறது. இதனை முறியடித்து மாமனாருக்கு தைரியத்தை கொடுத்து வீட்டை விட்டு வெளியேற செய்து, சொத்துபத்து இல்லாத தனி மரமாக மாத்தி மாமியாரை, அவரோட கணவனின் காலில் வந்து விழ செய்கிறாள். 
 
வீட்டுக்கு வந்த மருமகளில், ஆணவக்குடும்பத்தில் பிறக்கும் ஆண்(பேரன்) ரவிசந்தர் தன் காதலிடம் புலம்பி அவன் செய்ய முடியாததை அவனுக்கு மனைவியாக வரப்போகும் அந்த வீட்டின் மருமகள் செய்துக்காட்டுகிறாள். 
 
பொறந்தாலும் ஆம்பளையா பொறக்க கூடாது, இதில் பாண்டியராஜனுக்கு ஏழை மனைவிகறது பிரச்சனை இல்ல. அவங்க அம்மாவோட கொட்டத அடக்க அவன் ஒரு நாளும் மனைவியிடம் சொன்னதுமில்ல. அவனோட பிரச்சனை முதல் இரவு எப்போ நடக்கும் அது எப்படி நடக்கும் என்பதாகவே இருந்தது. ஆனால் மருமகளாக வந்த meenachi  கதாபாத்திரம் மாமியாரின் கொட்டதை அடக்குகிறாள். 
 
இரண்டு படங்களிலும் பல முன்னனி நடிகர்கள் நடித்த, இந்த படத்தை நீங்க பார்த்தால் சின்ன சின்ன நுணுக்களும், நகைச்சுவையும் கருத்துக்களும் நல்ல பொழுதுப்போக்காகவும் இருக்கும். எடிட்டிங் கவனம் செலுத்திருக்கலாம். திரைக்கதை பரவாலை. மைக்கரு அன்றைய பிரச்சனை என்று தான் சொல்லனும். நடிகர்கள் தேர்வு சிறப்பு. 
 
-கீதாபாண்டியன்
 
 
 
Published in Classic Movies
எதார்த்த காதல்
 
சென்னையோட அழகியலை சற்றும் மாற்றாமல் மலையாளிகளின் சென்னை வாழ்க்கையை காட்டும் படம்  Varane Avashyamund (2020). பெரும்பாலும் எதார்த்த படங்களுங்களாக மலையாள மற்றும் கன்னட,  படங்களைப்பார்த்து இப்படியெல்லாம் ஏன் எடுக்க மாட்டறாங்கனு கண்டிப்பாக வாழ்நாளுல ஒரு முறையாவது நினைப்போம். அப்படியொரு எதார்த்த நிலைப்பாட்டை எப்போதும்  நமக்கு தரும் படங்களுள் மலையாள படங்களும் ஒன்று.
 
அப்பார்மெட் வாழ்க்கையை அழகாக எதார்த்த பாணியில் உறவுகளைப்போல் காட்டியிருப்பர். நடுவுல பேசும் தமிழ் படத்திற்கு அழகுச்சேர்க்கிறது. 
இளமைக்காதலை ஆதரித்து முதுமை காதலை எதிர்க்கும் இந்த தலைமுறையினர்களை பற்றிய படம் இது.
 
அந்த வகையில Varane Avashyamund (2020). நடிகை சோபனா, ஊர்வசி மற்றும் துல்கர் சல்மான் மற்றும் பலர் அவகளது நடிப்புல வந்த இந்த படம். இளமை காதல், திருமணம், முதுமை காதல்னு  இந்த காலகட்டத்திற்கு ஏற்றமாதிரி ஒரு படம் இருக்கு. 
 
Online Whatsapp  ல Msg பண்ண ஒருத்தனுடைய காதல் அவன் எதையோ சொல்லிட்டானு  Block பண்ணி அப்பறம் unblock போட்டு காதலிக்கும் இளமை காதல் வழி மாறிப்போயி பிரியும் சூழ்நிலை. தனக்காக வாழ்க்கையை தொலைத்த தாயை விட மாற்றார் வீட்டு தாயின் அன்பைபுடன் ஒப்பிடும் மகள்.
 
ஒரே இடத்துல வேலைப்பாக்கற நண்பர்கள் லவ் பண்ணும்போது வருகிற சந்தோஷமும் பிரச்சனையும் அதனால வரும் பிரிவும்.
 
தேடி கண்டுப்பிடிச்சு, நமக்கு ஏற்ற ஒரு பையன கல்யாணம் பண்ணற பாடு பெரும்பாடு. 
 
வாழ்க்கையில நல்லா படிச்சு கல்யாணமாகி டைவஸ் ஆகி பல வருடம் குழந்தைக்காக மட்டும் வாழ்ந்த தாய் மனசுல பூக்கிற முதுமை காதலும் அதுக்கான அங்கீகாரத்துக்காக ஏங்கும் தாயும். 
 
பிறந்த இத்தனை வருடமா காதல் கல்யாணம்னு பெரிய திருப்புமுனையே இல்லாம நாட்டுக்காக போராடிய ஓய்வுப்பெற்ற சோல்ஜர். அவருக்கு சோபனா மேல் வருகிற காதல்னு  2019 உடைய எதார்த்த காதலை காட்டியிருப்பர்.
கடைசியில இளமை காதலர்கள் நிலைமை என்ன? முதுமை காதல் ஜெயிக்குமா? என்பதே மீதி கதை. நகைச்சுவையான காதல் உணர்வுகள் கலந்த படம். 
 
-கீதாபாண்டியன்
Published in Movies this week
Saturday, 25 April 2020 12:05

Aaranya Kaandam

பேராசை பெரு நஷ்டம் என்பதே மையக்கரு. -
 
தியாகராஜா குமாராஜா உடைய இரண்டு படங்களுமே நான்கு பாகங்களாக இருக்கும். அதில் ஆரண்யகாண்டம் படத்தில் பணம் மற்றும் அடியாளு செல்வாக்கு என்ற போர்வையில் இருக்கும் பெரியவர். சின்ன பையன் அவனுக்கு என்ன தெரியும் என்று ஒடுக்கப்படும் ஒருவன், அவன் செய்கிற காரியம் எப்படி இருக்கு. தன்னை ஏமாறியவர்களுக்கு நடுவில் "எதிரிக்கு எதிரி நண்பன்" என்று சொல்லிக்கொண்டு  எதிர்களுக்குள்ளே சண்டை ஏற்படுத்தி தன் மனைவியை மீட்கும் ஒருவன். ஒரு காலத்துல சொகுசா வாழ்ந்திருந்தாலும் கடன் தொல்லையால சேவல் சண்டை போட்டு வாழ்க்கையில் போராட்டும் எதார்த்தமானவர்கள் ஒரு பக்கம். இப்படி நான்கு பிரிவுகளும் பல இடங்களில் சந்திக்கும் திருப்பங்களே படம். 
ஆரண்யகாண்டம் 
 
பணம் மற்றும் அடியாள் செல்வாக்கு இருப்பவனுக்கு ஒரு பொழுதுப்போக்கு சேவல் சண்டை, 70 வயது கிழவன் 20 வயசு பொன்ன சின்ன வீட்டுமாதிரி வந்திருப்பான். அவனுடைய அடியாள்களுள் ஒருவன் தன் இடத்தையே பிடிக்க நினைக்கறான் என்று போட்டு தள்ள முயற்சிக்கறான். 
 
சப்ப ஈன்று சொல்லக்கூடியவன் பெரியவருடைய சின்ன வீட்டு தன் காதலியாகி கொண்டு பணத்தை எடுத்திட்டு பம்பாய் போக திட்டம் திட்டுக்கிறான். 
 
சேவல் சண்டைச்செய்து விட்டு தன்னுடைய தற்பெருமையால் சேவலை பறிக்கொடுத்து விட்டு கஞ்சாவை உரியவரிடம் தந்து பணம் பெற முயலும் ஏழ்மைவாதிகள். 
 
கேட்ட 50 லட்சம் கடனுக்காக கடத்திய தன் மனைவியை மீட்க ஓடுகிறவன் நடுவில் ரவுடிகளுக்கூம் எதிரிகளும் சண்டை ஏற்படுத்தி பண மற்றும் ஆள் செல்வாக்கு
பெற்று தன் மனைவியை மீட்பவன். 
 
இதன் இடையில் பலவித திருப்பங்கள். நான்கு கதைகளிலும் பணம் என்பது மிக்கிய பங்கு வகிக்குது. அளவு அதிகமாக பணம் வைத்திருந்து எப்படி வேணாலும் வாழலாம் என்று நினைக்கும் ஒருவன். பணம் இருந்திருந்தால் தலைவனாகலாம் என்ற எண்ணம் உடையவன். பணத்த அழித்திட்டு அதே பணத்துக்காக கேக்கநாதி இல்லாம தெருக்களில் சுற்றும் ஒருவன். பணம் மட்டும் இருந்தால் வாழ்க்கையில் ஜெய்க்கலாம் என்று அடுத்தவன் குறுக்கூ வழியில சம்பாதித்த பணத்த புருஷனையும் கொன்னுட்டு காதலித்தவனையும் கொன்னுட்டு பணத்த தூக்கிட்டு ஓடியவள் என்று பணத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் ஆராயகாண்டம். 
 
படம் முழுவதும் ஒரு கதாபாத்திரம் ஓடிக்கொண்டே இருக்கும். அதிகாலையில் ஆரம்பித்து இரவுக்கு முன்னாடியே முடியும் படம் ஒரு நாள் கூத்து. இப்ப யாருக்கு எது கிடைக்ககூடாதுனு ஓட விட்ட ஆளு, ஒரு கொல்லைக்கூட்டத்து தலைவர் என்று யோசித்துப்பார்த்தால் அந்த ஒரு கதாபாத்திரத்திற்குதான் இத்தனை பிரிவுகள் மாதிரி இருக்கும். படம் முழுவதும் மாநிறம் படிந்த நிலையில் காணப்படும்.
 
பேராசை பெரு நஷ்டம் என்பதே மையக்கரு. 
 
GEETHA PANDIAN
Published in Classic Movies
Monday, 20 April 2020 12:25

#NowThis - FOUR MORE SHOTS PLEASE

#NowThis
Suggestion No:7
FOUR MORE SHOTS PLEASE

Walk through the life of 4 women as they love, fail, find friendship and make mistakes. Watch them recover, watch them fall, watch them shine again.

A Lawyer
A Journalist
A Bubbly person
A Fitness trainer

Sometimes life pushes us down but hey!, never fail to call for four more shots of tequila.

Available on Amazon Prime
Season 2 out now.

Published in Web series
Monday, 20 April 2020 12:17

#NowThis - NOW YOU SEE ME

#NowThis
Suggestion No:8
Movie - NOW YOU SEE ME

Love, tricks?
Cry out in awe when you see a magician pull out a coin from the back of your ear?

Well watch this film for some extraordinary jaw dropping skills and tricks.

4 street magicians loot a huge amount of money while being chased by an FBI Agent and Interpol agent.

Kind Advice - Don't blink for you will be deceived within a snap of the fingers.
Watch the duology for more fun and dramatically staged clips.

Available on Netflix

Published in Movies this week
Wednesday, 15 April 2020 17:06

#NowThis - HOW TO GET AWAY WITH MURDER

#NowThis
Suggestion No:5

HOW TO GET AWAY WITH MURDER

Starring: Oscar award winner, Viola Davis

Catch up with One defense attorney and five law students to witness how their peace in life is altered when they stumble upon a murder.

Listen to the victims, the perpetrator, the judge's verdict, the lies and truth all filled with nail biting plot twists.

Available on Netflix

Published in Web series
Tuesday, 14 April 2020 06:21

#NowThis - HUNTERS

#NowThis
Suggestion No:4

HUNTERS

What would you do if you come to know that there are Nazis living among you?

Set in the period of 1977, a diverse group of people join forces to hunt the escaped Nazis for revenge and to bring justice.

But soon they start unravelling astonishing info and a greater deadly plot. Is the hunt capable of stopping it?

Hunters-Inspired by true events
Available on Amazon Prime

Published in Web series
Monday, 13 April 2020 10:28

#NowThis : Chernobyl

#NowThis : Chernobyl
Suggestion No:3
CHERNOBYL

"What is the cost of lies?"
Chills, Fear, Tears are the emotions that are triggered on hearing this word.

Chernobyl is a mini series consisting of only 5 episodes that re-accounts one of the most deadliest Nuclear Power Plant disasters in history.
What is the science behind?
What actually lead to this explosion?
Why is this city ghosted till date?
What are the mistakes?
What are the sacrifices?

Certainly history can't be re-written but can be re-told. Watch Chernobyl to find answers to these questions and brace yourselves to find more.
Available on Hotstar

Published in Web series
Saturday, 11 April 2020 16:17

#NowThis : Dark

#NowThis
Suggestion No 2: DARK
Available on Netflix
 
Looking for a science fiction web series with all the time travel theory in it but couldn't find anything better than the classic "Back to the future" ?
Well, here comes "Dark"
 
A German series that interprets time travel as a closed loop. A very different approach filled with mystery, promising goosebumps and chills and cliffhangers. Be ready to journey through time and yes, as the name suggests it's dark down the lane.
Published in Web series

ஆயில் புல்லிங் என்கிற புதிய பழக்கம் ஆரம்பித்திருக்கிறது. பல்வலிக்கு மாத்திரையை விழுங்குவதற்கு பதில் ஆயில் புல்லிங் பலன் தருமென்று என் சித்தப்பா சொன்னார். அவருடைய நல்லெண்ணை வாக்கு பலித்துவிட்டது. பல்வலியைக் காணோம். தற்போது வாயில் நல்லெண்ணையை நிரப்பிக் கொண்டு, அதை வெளியேற்றும் வரையில், ஏதாவது புத்தகத்தைப் புரட்டும் புதிய உபரிப்பழக்கம் வந்துவிட்டது.

இன்றைய புரட்டல் கணையாழிக் கதைகள் (1995-2000) என்கிற சிறுகதைத் தொகுப்பு. என்றைக்கு வாங்கினேன் எனத் தெரியவில்லை. இன்றைக்குத்தான் சிக்கியது. அதில் ”ஆளில்லாச் சந்துகளில் மரணக் குரலின் நடமாட்டம்” என்கிற கதைதான் முதலில் கண்ணில் பட்டது. தமயந்தி எழுதியது. ஆனால் கதையின் பெயர் அதிகாலை புத்தக ஆர்வத்துக்கு பொருந்தவில்லை. எனவே வேறொரு கதைக்குத் தாவினேன்.

நள்ளிரவில் தூக்கம் வராமல் டீக்கடைக்குப் போகும் குமார், அங்கே கடைசி பஸ்ஸை தவறவிட்டுவிட்டு காத்திருக்கும், ஊர்க்கார பெண்ணைக் காண்கிறான். கண்ணாடி ஜாக்கெட், மல்லிகைப் பூ, நீண்ட ஜடை என அவளைப் பற்றிய வர்ணனை நாயகன் குமாருக்குள்ளும், வாசிக்கும் எனக்குள்ளும், அந்தப் பெண்ணைப் பற்றி, ஒரே மாதிரியான எண்ணங்களைத்தான் உருவாக்கியதா எனத் தெரியவில்லை.

ஆனால் அவள் குமாருடன் அவனுடைய வீட்டில் அன்றைய இரவு தங்கிக் கொள்ளட்டுமா எனக் கேட்கும்போது எனக்கு சுவாரசியம் அதிகமாகிவிட்டது. இந்த வரியில் இதை வாசிக்கும் உங்களுக்கும் சுவாரசியம் வந்திருக்கும். இருவரும் வீட்டுக்கு நடந்து போகும் சொற்ப தூரத்தில் அந்தப் பெண், பழைய முதலாளியின் பெண் என்பதும், தற்போது நொடித்துப் போயிருக்கிறாள் என்பதையும் கதை நமக்குச் சொல்லிவிடுகிறது.

அவள் சூடியிருந்த மல்லிகைவாசம் இருவரும் ஒன்றாக வீட்டுக்குள் நுழைந்த மறுவினாடி குமாருக்கும் எனக்கும் இரட்டிப்பாகிவிட்டது. அந்த மல்லிகைவாசமும், இரவில் தனியாக ஒரு பெண்ணின் அருகாமையும் தன்னை புரட்டிப் போட்டுவிடக் கூடாது என்பதற்காக அவன் அவளுக்கு தன் அறையைக் கொடுத்துவிட்டு, விளக்கெறியும் வெளி அறையில் ஏதோ புத்தகத்தைப் புரட்டுகிறான். உறக்கம் வராமல் அவளும் தன் கணவன் தன்னை விட்டுப் போனதையும், வேறொரு பெண்ணுடன் வாழ்வதையும் அழுகையுடன் சொல்கிறாள்.

இறுதியில் உன்னைப் போல மனதில் களங்கம் இல்லாத ஒருவன் இருப்பதால்தான் நான் இன்னமும் உயிரோடு இருக்கிறேன் என்பாள். அத்துடன் கதை முடிகிறது. ”அவள் நல்லதொரு சகோதரியாய், தோழியாய் தெரிந்தாள்” என கடைசி வரி முடிகிறது.

கிட்டத்தட்ட இதே கருவில் ”சந்நியாசிகள்” என்றொரு சிறுகதை நான் எழுதியிருந்தேன். விகடனில் பிரசுரமானது. இதில் வரும் குமாருக்குப் பதில் அதில் சுரேஷ். பெயரில்லாத ஊர்காரப் பெண்ணுக்குப் பதில் அவனுடைய தோழி. இருவரும் தனியாக அவளுடைய வீட்டில் இருக்க நேர்கிறது. அப்போது அவர்களுக்கு இடையே ஏற்படும் டீன் ஏஜ் மனக்குழப்பங்கள் இப்படித்தான் கடைசி வரியில் முடிந்துவிடும். அதற்கு முந்தைய சில வரிகளில் அப்பெண்ணின் அண்ணன் வருவான். அவர்கள் தனியாக இருப்பதைப் பற்றி எந்த புருவ உயர்த்தலும் இல்லாமல் இயல்பாகப் பேசுவான். எந்த சந்தேகமும் இல்லாத அவனுடைய இயல்பு இவர்களுக்குத் தெளிவு தரும்.

இரண்டுமே இரு இளைஞர்களின் பார்வையிலிருந்து எழுதப்பட்டது. அந்தப் பெண்களின் கோணத்திலிருந்து யாராவது இதே கதைகளை எழுதினால் அது இன்னும் நிச்சயம் வித்தியாசமாக இருக்கும். அதை பெண்கள் மட்டுமே எழுத முடியும் என நினைக்கிறேன்.

சொல்ல மறந்துவிட்டேனே.. நான் வாசித்த கதாசிரியரின் பெயர் ”பாப்லோ அறிவுக்குயில்”, கதையின் பெயர் ”தோழமை என்பது…”

உங்க அனுபவத்திலிருந்து நீங்க சொல்லுங்க… தோழமை என்பது என்ன…?

Published in ISR Selva speaking
Page 1 of 4

Calendar

« March 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31