Log in

Register



போலீஸ் மகன் சமூக விரோதி தந்தையை கொல்லும் கதை. இயக்குனர் பாக்கியராஜ் கதை வசனம் எழுதி எடுக்கப்பட்ட கதை. கதாபாத்திரத்தின் வடிவமைப்பைப் பொறுத்தவரை அதித அல்லது திணிக்கப்பட்டவையாக இருந்தது. தந்தை கமலுடைய கதாபாத்திரம் ஆங்கிலம் தெரியாதனாலே வெகுளியாக காட்டப்பட்டார். கண்மூடிதனமாக ஒரு கட்சியின் தொண்டராக இருக்கிறார். 
 
அநியாயத்திற்கு  ராதாவை கற்பழிக்கும் காட்சியில் அரசியலின் ஆளுமையை வெளிப்படையாக காட்டியிருப்பர். கணவன் கமலுடைய பரிதாபகரமான நிலையை பார்ப்பர்கள் மனதில் ஆணி அடிச்சமாதிரி காட்சியை வடிவமைத்திருப்பர். கமல் நம்பும் போலீஸ் அவனை ஏமாற்றி, கண் முன்னாடியே அதாரத்தை கலத்திருப்பான். அரசியல் வாதிக்கு டாக்டர் உடந்தை என்பது கைதியின் டைரி படத்தின் இந்த காட்சியில் வந்த சம்பவங்கள் (இன்றளவு பேசப்படும் சாத்தான்குளம் பிரச்சனையை கண் முன்னே காட்டியவாறு தோன்னியது. அடித்து உதைத்த போலீஸ்காரர்கள், போலி சான்றிதழ் தந்த மருத்துவர்கள், மேலும் உள்ளார்ந்த அரசியல்வாதிகள் மற்றும் பலருடைய அராஜகத்தை கண் கூட பார்த்த மாதிரி இருந்தது) 
 
ரேவதி கதாபாத்திரம் விளையாட்டாகவும் எளிமையாக ஏமாற்றி விடலாம் என்ற வகையிலும் காட்டப்பட்டது. இயல்பான விளையாட்டுப்பொன்னுடைய காதல், கோபம், அன்பு இவர் வந்த இடங்கள் ஸ்டெலாகவும் அழகாகவும் இருந்தது. தந்தை கமல் மற்றும் மகன் கமல் என்று இருவருடமும் இவர் நடிக்கும்போது வித்தியாசம் காட்டியிருப்பார். ரேவதிக்கு தனிதன்மை இருந்தாலும் துணையாக ஒரு கதாபாத்திரம் வரனுமே என்று வைத்தது மாதிரி இருந்தது. மகன் கமலின் வளர்ப்பு தந்தையுடன் 20 வருடம் வளர்த்திய பாசத்தை இன்னும் வெளிப்படுத்திருக்கலாம். 
 
ஜெயிலிலிருந்து வந்தவருக்கு துப்பாக்கி மற்றும் கொலை செய்வதற்கு தேவையான உபகரங்கள் எவ்வாறு கிடைத்தது என்ற விளக்கத்தை படத்தில் காட்டவே இல்லை. 
 
எனது தாய் கற்பழித்தார்கள் அதனாலே தற்கொலை செய்துக்கொண்டாள். தந்தை ஜெயிலுக்கு சென்று வந்த கைதி என்ற எமோஸ்னல் மகன் கமலிடம் இல்லாதது போற் இன்றைய பார்வையாளருக்கு தெரிகிறது. ஆங்கிலம் பேச தெரிந்த தைரியசாலியாக தந்தை கமலை படத்தின் இறுதியில் காட்டியிருப்பர். இந்த ஆங்கிலத்தை வைத்து கதாபாத்திர வடிவமைப்பின் வித்தியாசம் வர்க்கப்பிரிவினை போற் தெரிகிறது. மேலும் தந்தை கமலின் இளமை மற்றும் முழுமை, மகன் கமலின் போலீஸ் தனம் அனைத்தும் தலைமுடி, மீசையில் வித்தியாசத்தைக்காட்டிருப்பர். 
 
கடைசி ஐந்து நிமிடம் யார் யாரை கொல்லுவார் என்ற பதட்டத்தையும் எதிர்ப்பார்ப்பையும் உண்டு பண்ணியிருப்பர். எனவே மொத்தத்தில் கைதியின் டைரியில் சில எழுத்து பிழையுடன் இருந்தது என்று தெரிகிறது. 
 
-கீதாபாண்டியன்
Published in Classic Movies
அவர்வர் தலைவிதியை ஆண்டவன் தான் எழுதுவான்" ஆனால் நீ ...??
 
திரு. இயக்குநர் விசு அவர்கள் இயக்கிய படம் மீண்டும் சாவித்திரி(1996). இந்த கதையின் கதாநாயகி வரலாற்றில் வரும் சாவித்திரி போலக் குணத்தைக்
கொண்டுயிருப்பவள்.  தன் வாழ்க்கையில் தான் எடுக்கும் முடிவு சரியானதாகதான் இருக்கும் என்று எண்ணும் தைரியமான பெண்ணாக வளர்ந்தவள். 
 
பொதுவாக ஒரு குடும்பத்தில் இருக்கும் நபர்களுக்கு ஏற்றார் போல் அக்குடும்பத்தின் குழந்தைகள் வளரும். அதுப்போல அப்பா, மகள் இருவரை மட்டும் கொண்ட குடும்பம். வீரமான பார்வை, தைரியமான பேச்சு, தப்புகளை தட்டிக்கேட்கும் பெண், புத்திசாலிதனமாக எடுக்கும் முடிவுகள் இது அனைத்தும் அவளுக்கே கூரிய குணம். அவளைப்பார்க்கும்போது இந்த பெண் மாதிரி நாமும் இருக்கனும் என்ற எண்ணம் கண்டிப்பாக வரும். 
 
ஒரு வயசான அப்பா பொது மக்களுக்கு நல்லது நடக்கனுனா என்ன வேணா செய்யலாம்னு நினைக்கற ஒருத்தர். இளைஞர்கள் நினைச்சால்தான் நாடு முன்னேறும் என்று இளைஞர்களை வழி நடத்தக்கூடியவர். இருந்தாலும் தன் மகள் விஷயத்துல ஒரு சுயநலவாதி. ஒரு ஏழைக்குடும்பம் கையில கிடைக்கற ஒரு நாலு காசுதான் அவங்க வாழ்க்கையில அவங்க எடுக்கற முடிவுக்கெல்லம் காரணம். அளவான வீடு.  தேவையான அளவுக்கு நிம்மதியும் சந்தோஷமும் கொண்ட குடும்பம். 
 
"அவர்வர் தலைவிதியை ஆண்டவன் தான் எழுதுவான்" ஆனால் இவளுடைய வாழ்க்கை தலை எழுத்தை இவளே எழுதிக்கொண்டாள். என்னதான் தைரியமான பெண்ணாக இருந்தாலும் தனக்குனு ஒரு கல்யாணம் குடும்பம்னு வாழனுமென்று ஏங்கிப்போயிருக்காள். அந்த ஏக்கத்திற்கு அவள் வீட்டில் கல்யாண பேச்சு பேச ஒரு தாய் இல்லை என்பதோ, தந்தையை தனி விட மனசு இல்லாம இருப்பதோ, கல்யாணத்துக்கு நகை போடனும் என்ற எண்ணமோ அல்லது தான் ஒரு ஏழை குடும்பம் என்பதோ என்ற எதாவது ஒரு காரணம் இருக்கலாம். 
 
அந்த சமயத்தில் நீயுஸ் பேப்பரில் வந்த வித்தியாசமான விளம்பரத்தை பார்த்து வியந்தாள். "மணமகள் தேவை" 
தன் அப்பாவுடைய வார்த்தையை ஏற்காமல் மறுப்பு தெளிவித்து பதில் கடிதம் போட்டாள். அந்த சமயத்தில் ஒரு அழகான இளம் ஆண் தன் குடும்பத்தில் அவர்  சுமக்கும் சுமையை எடுத்துச்சொல்லினார். "அம்மாக்கும் ஆஸ்துமா, அப்பாயொரு மனநோயாளி, தம்பியொரு குடிக்காரன், தங்கை கற்பழிக்கப்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீளாத பெண். இப்படிப்பட்டவர்கள் பார்த்துக்கொள்ளும் ஒரு பெண் தான் வேண்டும் என்று விளம்பரம் போட்டேன்". 
 
நமது கதாநாயகியின் அப்பா பேச்சுக்கு மறுப்பு தெளிவித்து கணவனை கைப்பிடித்து முதலிரவில் பாலங்குழியில் விழுந்தாள். "ஏற்கனவே கல்யாணமாகி இரவில் மட்டும் புத்தி பேதலித்து மயங்கி விழும் மனநோயாளி" என்று தெளிய வருகிறது. குடும்பமே சேர்ந்து ஏமார்த்திருச்சு. அவளை அந்த குடும்பத்தில் இருக்கும் யாருமே மதிக்கல. தனது புத்திசாலிதனத்தில் எடுத்த முடிவின் இயலாமையால் அவள் பட்டபாடு பெரும் பாடு. 
 
இறுதியில் தன் தலையெழுத்தை தவறாக எழுதிய அந்த புத்திசாலிதனமே மீண்டும் திருத்தி எழுதிய விதமாக தன்னை உதாசினம் படுத்திய மாமனார் குடும்பமே கையெடுத்து கும்பிடும் விதமாக, தன் கணவனின் இந்த நிலைமைக்கு காரணமானவனை கண்டுப்பிடித்து ஜெயிலில் அடைத்தாள். கணவனோட முதல் பொண்டாட்டி ரொம்ப நல்லவள் என்று நிருப்பித்து இருவரையும் சேர்த்து வைத்து விட்டு மீண்டும் தன் அப்பாவோட பழைய மகளாக வீட்டுற்கு வந்து விடுவாள். எப்படினு படத்துல பாருக்கும்போது.  நீங்களே சொல்லுவிங்க,
 
"நானும் இவளைப்போல இருக்கனும்"
 
வெவ்வொரு முடிச்சுக்களை ஒரே மாதிரியாக போட்டு வேறு விதமாக அவிழ்ப்பதே விசு அவர்களின் திரைக்கதை. 
 
GEETHA PANDIAN
 
Published in Classic Movies

Calendar

« April 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30