Print this page
Monday, 30 March 2020 05:49

பட்டுக்கோட்டை பெரியப்பா- பார்த்தத்தில் பிடித்தது

Written by Geetha Pandian
Rate this item
(1 Vote)
பட்டுக்கோட்டை பெரியப்பா பட்டுக்கோட்டை பெரியப்பா visu
இயக்குநர் விசு படமென்றாலே நிறைய கதாபத்திரங்களை கொண்டவர்கள் இருப்பாங்க. ஒவ்வொரு கதாபாத்திரமும் தரமான உறவைகளை ஞாபகப்படுத்தும். இந்த படம் பட்டுக்கோட்டை பெரியப்பா, பாதியிலிலே நின்னுப்போன தன்னோட தம்பி மகன் கல்யாணத்த அழையா விருந்தாளி பெரியப்பா வந்து எப்படி நடத்தி வைக்கறாரு என்பதுதான் கதை. அதுல எனக்கு பிடித்தது, ஒரு சில விஷயம் என் மனதில் பதிந்த விஷயத்த பகிர்றேன்.
 
பார்த்தத்தில் பிடித்தது
 
1) 38 வயது நிரம்பிய கல்யாணமாகாத கல்யாணமாக ஆசையே இல்லாத பெண். தைரியமானவள். ஒரு நிறுவனத்துல president யாக இருக்கக்கூடியவளுக்கு தான் ஒரு தலைவிக்கு நிகரானவள் என்ற கணம் இருக்கு. தன்னோட புகழ பாடனும். தன்னைப்பற்றி எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். தான் சொன்ன உடனே ஏன்னுக் கேக்காம செய்யுறவங்க தன்னோட இருக்கனும். இப்படி எல்லாம் இருக்கனும் என்று ஆசையுள்ள ஒரு பெண். 
 
2) இந்த கதையின் நாயகன். வாய திரிந்துப்பேச தெரியாத பையன். அம்மா சொல்லறது செய்யறது எல்லாம் சரினும் உண்மையுனும் நம்பக்கூடியவன். இவனுக்கு கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை. அதான் அம்மாவும் வேணாம். அம்மா வேண்டாம்னு சொல்லற பொன்னும் வேணும். இப்படியொரு ஹீரோவா...
 
3) இந்த படத்தின் கதாநாயகி, தன் வாழ்க்கையின் முடிவை தான் எடுக்க முடியலையே. அம்மாவும் அண்ணனும்தானே எடுக்கறாங்க. எனக்கு வேணும், எது மேல எனக்கு ஆசைனு கேக்க கூட மாட்டறாங்கனு ஏங்கிப்போயி சிவனேனு ஒரு வாழ்க்கை வாழும் பொன்னு.
 
4) கதாநாயகனோட சொந்த தாய் மாமா. 40 வயது ஆச்சு எனக்கொரு கல்யாண பண்ணி வைக்க அக்காக்கு தோன்னலையே..இப்படி எப்படா எனக்கு கல்யாணமாகும் நாக்க தொங்க போடும் திரியுற ஆள்ளு. இவனுக்கு கல்யாணம் ஆகலனு  கல்யாணமாக போறவங்கள பிரிச்சுல விடறான்.
 
5) தலைவிக்கு ஒரு தம்பி, அவன் ஒரு டி.டி.ஆர் அதனாலையோ என்னவோ தெரியல. அவன் வாயில இருந்து வர வார்த்த எல்லாமே டிரெயின் சமந்தமதான் இருக்கும். டிரெயின் பத்தி பேசாம இருக்கவே முடியாது அவனால. அதுமட்டும் கல்யாணம் அப்படினு தனக்கு ஒன்னு நடந்தா அதுல ஒரு தியாகம் இருக்கும்னு நினைப்பவன்.
 
6) அப்படி இவன் பண்ண தியாகம். என்னன்னா,  பிறந்ததுல இருந்து ஆம்பிள குறள் ல பேசற 
பொன்னுக்கு பெருந்தன்மையா வாழ்க்கைக்கொடுத்திட்டான். 
 
7) இத தாண்டி, கதாநாயகன் வேலைச்செய்யற ஆபிஸ் ல ஒரு களக். பார் டைம் மா கை ஜோசியம் பாக்கறான். அவனுக்கு கொஞ்சம் சபல புத்தி. ஜோசியம் பாக்கறேனு சொல்லி எல்லா பொன்னுகளையும் தொடுவான். அதனால ஆபிஸ் ல ஒரு குண்டு கட்டி அதுக்குள்ளே வேலைச்செய்ய சொல்லிருப்பாங்க. அது ரொம்ப காமெடியா இருக்கும். நடைமுறையில அப்படி நடந்தா வேலைய விட்டே தூக்கிடுவாங்க. 
 
இப்படி பல கதாபாத்திரங்கள் நிறைந்த இந்த படத்தில் எனக்கு பிடித்த சில  கதாபாத்திர வடிவமைப்புகள் தான் இப்படத்தைப் பற்றிய தன்னுடைய பகிர்வு. 
 
-கீதாபாண்டியன்
 
 
Read 397 times

Related items

Login to post comments