Log in

Register



சிவாஜியின் குரலை சென்னை வானொலி நிலையம் நிராகரித்ததா?
சிவாஜி 'பராசக்தி'யில் நடித்து, இன்னும் வேறு சில படங்களிலும் நடித்து அப்போது பிரபலமாகியிருந்தார். வானொலி நாடகங்களுக்கு அப்போதெல்லாம் நல்ல வரவேற்பு. அதில் நடிக்க விரும்பிய சிவாஜி அதற்காக விண்ணப்பித்தார். ஒரு நாடகத்தில் நடிப்பதற்கு அவருக்குக் குரல் தேர்வு நடந்தபோது அதில் அவர் சித்தியடையவில்லை, அவரை நிராகரித்துவிட்டார்கள். சிவாஜியால் அந்த அவமானத்தைத் தாங்க முடியவில்லை. கோபத்துடன் அன்று ஒரு சபதம் எடுத்தார். 'இனிமேல் என் வாழ்க்கையில் அகில இந்திய வானொலிக்கும் எனக்கும் ஒருவித சம்பந்தமும் கிடையாது. அகில இந்திய வானொலி சென்னை நிலையத்தின் வாசல்படியை என்றென்றும் மிதிக்கமாட்டேன்.'
 
இந்தச் சம்பாசணை எனக்கும் சிவராமகிருஷ்ணனுக்கும் இடையில் நடந்தது. சிவராமகிருஷ்ணன் லண்டன் பிபிசி தமிழோசையில் பலவருடங்கள் ஒலிபரப்பாளராகப் பணியாற்றுகிறார். பணி நிமித்தமாகப் பலரைச் சந்தித்துப் பேட்டிகள் எடுத்திருக்கிறார்.
 
தினமலர் (ஏப்ரல் 16, 2016) இதழில் சிவாஜியின் குரல் என்ற கட்டுரையில் அ.முத்துலிங்கம் என்பவர் எழுதியுள்ளதை அப்படியே கொடுத்திருக்கிறேன். (முழுக் கட்டுரையை இந்தச் சுட்டியில் வாசிக்கலாம்) இந்தத் தகவலை நான் இப்போதுதான் கேள்விப்படுகிறேன். இந்தத் தகவல் உண்மையா?
 
Published in ISR Selva speaking

மீண்டும் சிவாஜி!
கொரோனா யுகத்தில்... நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பட்டியல்களுக்கு நடுவில் சிவாஜி படங்கள் ஹிட் அடித்திருக்கின்றன.

ஃபேஸ்புக்கில் நான் உட்பட என்னைச்சுற்றி உள்ள பலரும் 35க் கடந்தவர்களே. இவர்களில் பலர் இளையராஜா இரசிகர்கள், அப்புறம் ரஜினி, கமல் இரசிகர்கள். வெகு அபூர்வமாகத்தான் மற்றவர்கள் அவர்களின் அரட்டைகளில் இடம்பெறுவார்கள். இன்றைய தலைமுறையின் இரசனைகள் பற்றி தெரிந்தாலும் அதனை பொருட்படுத்தாதவர்கள். இப்போது நான் சொல்ல வருவது என்னவென்றால், கடந்த ஒரு வாரமாக இவர்களுக்கு அல்லது நமக்கு மத்தியில் பழைய சிவாஜி படங்களும், அவரது நடிப்பை பற்றிய சிலாகிப்புகளும் அதிகமாகியிருக்கின்றன.

இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன். இதனை ரசனை மாற்றம் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் வேகமான லைஃப் ஸ்டைலில் இருந்து முடங்கி, வீட்டுக்குள் அமர்ந்திருக்கும்போது நாம் விலகி வந்த எத்தனையோ உணர்வுகளையும், உறவுகளையும், வாழ்வியல் முறைகளையும் நாம் மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறோம், அதில் ஒன்றுதான் நாம் அசால்டாக மறந்து போன சிவாஜி என்கிற மாபெரும் கலைஞனின் அர்ப்பணிப்பும், அவருடைய படங்களில் காண்பிக்கப்பட்ட குடும்பங்களும், உறவுகளும், பிணக்குகளும், தியாகங்களும், புன்னகைகளும்.

இப்போதும் கூட அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று நம்மில் சிலர் கடந்து போகலாம். ஆனால் அப்படியெல்லாம் கடந்துவிட முடியாமல், சிவாஜி நம்மில் சிலருக்குள் மீண்டும் உணர்வுப்பூர்வமாக அமர்ந்துவிட்டார் என்பதையும் மறுப்பதற்கில்லை.

Published in ISR Selva speaking

வானம் கொட்டட்டும் படத்தை பார்த்துவிட்டு தன்னைப் பாராட்டிய ஒரு ரசிகையால் நெகிழ்ந்துவிட்டார் விக்ரம் பிரபு! காரணம் பாராட்டியவர் சிவாஜி ரசிகை. குடும்பத்துடன் அவர் படத்தைப் பார்த்திருக்கிறார். அதோடு மட்டுமில்லாமல் சிவாஜியின் பேரன் என்பதால் மிகுந்த வாஞ்சையுடன் வாழ்த்தியிருக்கிறார். இதனால் நெகிழ்ந்துபோன விக்ரம் பிரபு, தனது மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் டிவிட்டரில் பகிர்ந்திருக்கிறார்.

 

Published in Cine bytes

Calendar

« April 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30