Log in

Register



ஐஸ்வர்யா - தனுஷ் மணமுறிவு அறிவிப்புக்குப்பின் பிரபல ஊடகம் மாலை முரசு நடந்து கொண்ட முறை மிகவும் தரம் தாழ்ந்தது.
 
திரைப் பிரபலங்களின் வாழ்வில் எது நடந்தாலும் அது பற்றி தெரிந்து கொள்ள பொது மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். அதனால் ஊடகங்கள் போட்டி போட்டுக் கொண்டு அந்தச் செய்தியை வெளியிடுவார்கள். அது இயல்புதான்.
 
ஆனால் அந்தப் பிரபலங்களுக்கு நேரடியாக தொடர்பே இல்லாதவர்களை வைத்துக் கொண்டு, மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்வு பற்றி அவர்கள் அவிழ்த்துவிடும் பொய்களையும், பிதற்றல்களையும் வெளியிடுவது எந்தவிதத்திலும் கண்ணியமானது அல்ல.
 
இந்த உலகத்திலேயே மிகவும் பாதுகாப்பானது குடும்பம்தான். மிகப் பெரிய அரசியாக இருந்தாலும், சேவகியாக இருந்தாலும் அவர்களுக்குப் பாதுகாப்பு அவர்களின் குடும்பம்தான். அங்குதான் அவர்கள் எல்லையற்ற சுதந்திரத்தை உணர்வார்கள். அது உடைபடும்போது ஏற்படும் வலிகளையும், காயங்களையும் விவரிக்க இயலாது. பெற்றோர்களை பிள்ளைகள் பிரிவதும், மனைவியை கணவன் பிரிவதும் ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யம் சரிவது போலத்தான். பாதுகாப்பான ஒரு கோட்டை உடைவது போலத்தான். அதிலிருந்து மீள்வதும், அதே பாதுகாப்பை கட்டி எழுப்புவதும் அல்லது முற்றிலும் வேறொரு பாதுகாப்பு அரணை உருவாக்கிக் கொள்வதும் அவரவர் தனிப்பட்ட விருப்பம். அது அவர்களின் வாழ்க்கை.
 
அவர்கள் திரைப்பிரபலங்கள் என்பதால் அவர்களின் வாழ்க்கையை நாம் அதிகமாகவே வேடிக்கை பார்க்கிறோம். ஊடகங்கள் அவர்களைப் பற்றி நமக்கு சொல்லிக் கொண்டே இருக்கின்றன. ஆனால் இந்த ஒரு காரணத்தால் மட்டுமே ஊடகங்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம், எப்படி வேண்டுமானாலும் செய்தி வெளியிடலாம் என நினைப்பது பொறுப்பற்றத்தனம்.
 
பயில்வான் ரங்கநாதன் என்பரை வைத்துக் கொண்டு ஐஸ்வர்யா - தனுஷ் மணமுறிவு விவகாரம் பற்றி மாலைமுரசு தயாரித்து வெளியிட்டுள்ள நிகழ்ச்சி பொறுப்பற்றதனத்தின் உச்சம். மிகவும் கீழ்த்தரமான நிகழ்ச்சி. பயில்வான் ரங்கநாதனுக்கு மட்டுமல்ல இந்த நாட்டின் முதல் குடிமகன் ஜனாதிபதிக்கே கூட இன்னொருவரின் அந்தரங்கத்தைப் பற்றி பொதுவெளியில் பேச உரிமையில்லை.
 
மாலைமுரசுவின் எடிட்டருக்கு வன்மையான கண்டனங்கள். தயவு செய்து பொறுப்புடனும், கண்ணியத்துடனும் நடந்து கொள்ளுங்கள். இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் என்ன சாதித்தீர்கள்?
 
உங்கள் நிகழ்ச்சியின் வாயிலாக ஒரே ஒரு பூச் செடி காப்பாற்றப்பட்டாலோ, ஒரே ஒரு சொட்டு தண்ணீர் சேமிக்கப்பட்டாலோ, ஒரே ஒரு மனிதன் உயிர் பிழைத்தாலோ, ஒரே ஒரு குடும்பம் ஒன்று சேர்ந்தாலோ அதுதான் வெற்றி. நீங்கள் இந்த நிகழ்ச்சியின் வழியாக என்ன சாதித்தீர்கள் என்று உங்கள் மனசாட்சியை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.
 
ஐ.எஸ்.ஆர். செல்வகுமார்
Published in ISR Selva speaking
 
மதுர ஜில்லா மச்சான் தாண்டி என் ஜாதகத்தில் குரு உச்சம் தாண்டி!!!
 
இந்த வரியின் போது தனுஷ், நீல ஆடையும் தலைப்பாவும் போட்டு வெளியூர் ஆள் பூம்பூம் மாட்டுக்காரன் மாதிரி இருக்கார். மேலும் 'என் நேரம் நல்லாயிருக்கு உன்ன நான் தூக்கிட்டு போயிட்டுவேன்' அர்த்தம் போல.
 
 முதல் பத்தியில் இவரு இப்படி கேட்டு அந்த பொண்ணோட தோப்பில வர்ணிக்காரு அதுக்கு அந்த பொன்னு 'ஏய் நான் சிட்டு தான் ஆனால்  நான் தமிழ் பொன்னு நீ என் பக்கம் வந்தா நான் உன்ன வெட்டுப்போடுவேனு' சொல்லுது. 
 
அடுத்த பத்தியில் சாதாரணமான பையன் மாதிரியான உடையில் தனுஷ் வந்து, 'என்ன உடல் மா இது. நான் பறந்து வந்து நீ குளிக்கறத பார்ப்பேன்' மீண்டும் வர்ணிக்காரு. திரும்பவும் 'நீ சொல்லறமாதிரி நடந்தா உனக்கு கண்ணே இல்லாம பன்னிடுவேன்' சொல்லுது அந்த பொன்னு. அந்த பத்தி முழுவதும் இவன் தன் காம உணர்வை வார்த்தையாக வெளிபடுத்த அவளோ, திட்டிட்டே இருக்கறாள். கோபம் அதிகமாகி 'என்னை கொலைகாரி ஆகாதனு' சொல்லுகிறாள். 
 
மூன்றாவது பத்தியில் வயசான ஒருத்தன்  அதிலும் பணக்காரன் மாதிரி இருக்கான். 'நீ காலியான கழுத்தோட வா நான் தாலியோட வரேன்' சொல்வதை கேட்டு, 'தாலி கட்டுனா நான் தாராளமா என்னையே தரேன்' சொல்கிறாள். மேலும் இப்போ அந்த பணக்கார கெட்டப் ல இருக்கற வயசான ஆள் வர்ணிக்கறத கேட்டு, 'என்னோட வயச வெடியாகி கொளுத்தாத சும்மா பேசிட்டே இருக்காதனு சொல்கிறாள்' அதோட உன்ன கல்யாணம் பண்ணிட்டு 'ஆளப்போறேன்' அந்த வார்த்தைக்கு அந்த சின்ன பொன்னு மயங்கி 'இப்ப முத்தம் மட்டும் வாங்கிக்கோ பின்னால மொத்தமா தரேன்' சொல்லி வளையில விழுந்திடறாள். 
 
வரிக்கு ஏற்றமாதிரி உடை மற்றும் கெட்பட் எப்படி தீர்மானிக்கறாங்க. பாடலின் நோக்கம், வரிகள், உடை மற்றும் உடைக்கேற்ற கெட்பட், நடனம், பாடலுக்கான செட், எடிட்டிங் இதுமாதிரி 7 துறை சார்ந்தவர்கள் இதில் இயங்கினால்தான் ஒரு பாடல் பிறக்கிறது. 
 
 
-GEETHA PANDIAN
Published in Classic Movies
 
 
மாமனாரை வைத்து இயக்கிய"பேட்ட"யை 
தொடர்ந்து, தற்போது மருமகனை வைத்தும் ஒரு படத்தை இயக்குகிறார் இளம் இயக்குனர் கார்த்திக்சுப்புராஜ். நடிகர் தனுஷின் அவர்களின் 40வது படமா உருவாக்கி வருகிறது. இந்த படத்துடைய "பிரஸ்ட் லுக்" அண்ட் "மோஷன் போஸ்டர்" வரும் பிப்ரவரி 19 அன்று வெளியாகவுள்ளது.
 
Published in Cine bytes

Calendar

« March 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31