என் தெருவுக்கு வளையல்காரன் வருவான். அவனிடம் வளையல் போட்டுக்கொள்ளும்போது ஒருபோதும் நான் அவனை ஆணாக எண்ணியதில்லை. அப்படி வாஞ்சையோடு அவன் வளையல் போடுவான். இப்போதெல்லாம் அவன் என் தெருவுக்கு வருவதே இல்லை. அந்த மாதிரி உங்களுடைய கவிதைகளும் வாட்ஸப்பில் வருவதே இல்லை.
என்னுடைய #ப்ரியம் என்பது கவிதைகள் குறித்து பர்வின் சுல்தானா!
ஒவ்வொரு புதன் கிழமையும் நான் #ப்ரியம் என்பது கவிதைகள் எழுதுவேன். அவற்றை வாட்ஸப்பில் பர்வின் சுல்தானா உள்ளிட்ட நண்பர்களுக்கு அனுப்பிவிட்டு அத்துடன் மறந்துவிடுவேன். கடந்த ஒரு வருடமாக நான் எழுதுவதை நிறுத்தியிருந்தேன். அதனால்தான் பர்வின் சுல்தானா அக்கவிதைகளை ஒரு பொது மேடையில் குறிப்பிட்டு பாராட்டியபோது இனிய ஆச்சரியமாக இருந்தது.
அவர் மீண்டும் மீண்டும் 2 முறைகளுக்கு மேல் அக்கவிதைகள் பற்றி குறிப்பிட்டார். அது என்னில் ஒரு மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது. தொடர்ந்து எழுத வேண்டும் என்ற எண்ணம் வேரூண்றியிருக்கிறது.
இனி எழுதுவேன். என்னை மீண்டும் எழுதத் தூண்டிய பர்வின் சுல்தானா அவர்களுக்கு நன்றி!
- ISR செல்வகுமார்