பொல்லாதவன், நாயகன் போன்ற படங்களைத் தயாரித்த முக்தா ஃபிலிம்ஸ் 60ஆம் ஆண்டை எட்டியிருக்கிறது. அந்த கொண்டாட்டத்தின் துவக்கமாக முக்தா நிறுவனத்தின் தயாரிப்புகளில் பங்கு பெற்ற நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், டெக்னிஷியன்கள் உள்ளிட்ட பலரும் விழா மேடையில் கௌரவிக்கப்பட்டார்கள். எங்கள் தந்தை நடிகர் ஐ.எஸ்.ஆர் முக்தா தயாரிப்பில் 4 படங்களில் நடித்திருக்கிறார். அதனால் எங்கள் தந்தை ஐ.எஸ்.ஆர் பற்றியும் மேடையில் நினைவு கூறப்பட்டு கௌரவிக்கப்பட்டார். நடிகர் சிவகுமார் நினைவுப் பரிசை வழங்கினார். ஐ.எஸ்.ஆரின் இளைய சகோதரர் சோலையும், இளைய மகன் ரவிகுமாரும் நினைவுப் பரிசை பெற்றுக் கொண்டார்கள்.
நினைவில் வைத்திருந்து கௌரவம் செய்த முக்தா நிறுவனத்திற்கு ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனம் மற்றும் ஐ.எஸ்.ஆர் குடும்பம் சார்பாக மனமார்ந்த நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.