#NowThis
Suggestion No:8
Movie - NOW YOU SEE ME
Love, tricks?
Cry out in awe when you see a magician pull out a coin from the back of your ear?
Well watch this film for some extraordinary jaw dropping skills and tricks.
4 street magicians loot a huge amount of money while being chased by an FBI Agent and Interpol agent.
Kind Advice - Don't blink for you will be deceived within a snap of the fingers.
Watch the duology for more fun and dramatically staged clips.
Available on Netflix
நம்பிக்கையின் கீற்று!
அனாதையாகக்கிடந்த முதியவரின் உடலை, கொரோனாவுக்கு அஞ்சாமல் அடக்கம் செய்த திணைநிலவாசிகள்!
சிலநாட்களுக்கு முன், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு மருத்துவரை அடக்கம் செய்ய எவருமே முன்வராத ஒரு அவலத்தை நாம் கண்டோம். களத்திலிருக்கும் மருத்துவர்களுக்கு ஆதரவாக கைதட்டுகிறோம், விளக்கேற்றுகிறோம் என்று போலித்தனமாக டி.விக்கு போஸ் கொடுத்துக் கொண்டாடியவர்களின் சுயரூபத்தை வெளிக்கொணர்ந்த சம்பவம் அது. இருக்கட்டும்! இது போன்ற போலித்தனமானவர்கள் எல்லா இனத்திலும், எல்லா மதத்திலும், எல்லா நாட்டிலும் இருக்கிறார்கள். இதை அறிந்தவர்களில் சிலர் கோபப்பட்டார்கள், சிலர் கேலி செய்தார்கள், சிலர் அமைதியாகக் கடந்தார்கள்.
வெகு சிலர் நடந்தது தங்கள் இருப்பையே காட்டிக் கொள்ளாமல் சலனமற்று இருந்தார்கள். அவர்கள் யார் தெரியுமா? கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை இந்த உலகமே கைவிட்டாலும், கடவுளே நிராகரித்தாலும் நாங்கள் இருக்கிறோம் என்று தாமே முன்வந்து உதவக் கூடியவர்கள். அவர்களில் சிலர்தான் Thinai NilaVaasigal - திணை நிலவாசிகள் என்கிற நாடகக் கலைஞர்கள். இன்று அவர்கள் செய்த நற்பணி அளப்பறியது.
சென்னை செங்குன்றம் பகுதியில் 73 வயதுதக்க முதியவர் பிளாட் பாரத்தில் அனாதையாக உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து செங்குன்றம் காவல்துறையினர் திணைநிலவாசிகளை
தொடர்பு கொண்டார்கள். திணைநிலவாசிகள் துளியும் தயக்கமோ, அச்சமோ இல்லாமல் இன்று அந்த முதியவரின் உடலை அடக்கம் செய்தார்கள்.
கொரோனாவை விட நிராகரிப்பு கொடுமையானது. வறுமை, முதுமை, குடும்பத்தகராறு, மனப்பிறழ்வு என பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்டவர்கள் நம்மைச் சுற்றிலும் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்குமே எதிர்காலம் எப்படி இருக்குமோ என்கிற அச்சம் இருக்கிறது. ஆனால் நம் அனைவருக்கும் நம்பிக்கை தரும்விதமாக சில நல் உள்ளங்கள் இந்த பூமியில் இருக்கிறார்கள்.
இந்த நாடும், வனமும், காடும், வானமும் இவர்களைப் போன்ற நல் உள்ளங்களால் நிச்சயம் காப்பாற்றப்படுவார்கள். அந்த நம்பிக்கையை நமக்கு வழங்கியிருக்கும் Thinai NilaVaasigal - திணை நிலவாசிகள் நண்பர்களுக்கு நன்றி!
#NowThis
Suggestion No:5
HOW TO GET AWAY WITH MURDER
Starring: Oscar award winner, Viola Davis
Catch up with One defense attorney and five law students to witness how their peace in life is altered when they stumble upon a murder.
Listen to the victims, the perpetrator, the judge's verdict, the lies and truth all filled with nail biting plot twists.
Available on Netflix
#NowThis
Suggestion No:4
HUNTERS
What would you do if you come to know that there are Nazis living among you?
Set in the period of 1977, a diverse group of people join forces to hunt the escaped Nazis for revenge and to bring justice.
But soon they start unravelling astonishing info and a greater deadly plot. Is the hunt capable of stopping it?
Hunters-Inspired by true events
Available on Amazon Prime
#NowThis : Chernobyl
Suggestion No:3
CHERNOBYL
"What is the cost of lies?"
Chills, Fear, Tears are the emotions that are triggered on hearing this word.
Chernobyl is a mini series consisting of only 5 episodes that re-accounts one of the most deadliest Nuclear Power Plant disasters in history.
What is the science behind?
What actually lead to this explosion?
Why is this city ghosted till date?
What are the mistakes?
What are the sacrifices?
Certainly history can't be re-written but can be re-told. Watch Chernobyl to find answers to these questions and brace yourselves to find more.
Available on Hotstar
#StayAtHome அண்ணாத்த!
ரஜினிகாந்தைச் சுற்றி 10 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் வைத்திருக்கும் யுடியூப் அரசியல் அறிஞர்கள் இருக்கிறார்கள் என நினைக்கிறேன். அவர்களின் வாட்ஸ்அப் அறிவையும், மேம்போக்கான வைரல் உளறல்களையும் தன்னுடைய கருத்துக்களாக ரஜினிகாந்த் பேச ஆரம்பித்திருக்கிறோரா என்கிற சந்தேகம் வர ஆரம்பித்துவிட்டது. கொரோனா வைரஸ் தொடர்பாக அவர் தவறான தகவல் தந்ததாக அவருடைய ட்வீட் ஒன்றை டிவிட்டர் நிறுவனமே நீக்கிவிட்டது. இந்த நடவடிக்கை ரஜினி இரசிகர்களுக்கு மட்டுமல்ல, ரஜினிகாந்துக்கே மிகப் பெரிய அதிர்ச்சி தந்திருக்கும். அவருடைய ஒவ்வொரு வார்த்தைக்காகவும் காந்திருந்த மீடியா, அவர் தானாக முன் வந்து பேசியதையே நீக்கியிருக்கிறது.
திரு.ரஜினிகாந்த் அவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். அந்த யுடியூபர்களின் கருத்துக்களை நிறைய பேர் இரசிக்கிறார்கள் என்பது உண்மைதான். தனக்குப் பிடிக்காதவர்களை அவர்கள் தைரியமாக விமர்சிக்கிறார்கள் என்கிற ஒரே காரணத்துக்காக அவர்களை பல பேருக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் அவர்கள் வெறும் எண்டர்டெயினர்கள்தான். அதை நமட்டுச் சிரிப்போடு ஃபார்வர்டு செய்வதோடு சகலரும் மறந்து போய்விடுவார்கள். ஆனால் அதையே நீங்கள் சொன்னால், அதை அந்த அரைகுறை யுடியூபர்களைத் தவிர எவரும் ஏற்கமாட்டார்கள். வார்த்தைக்கு வார்த்தை ஆராய்வார்கள், ஏன் இந்த விமர்சனம் அல்லது ஆதரவு என்று கேள்வி கேட்பார்கள்.
ஏனென்றால் நீங்களும் அந்த அரை குறை வாட்ஸ்அப் அறிஞர்களும் வேறு வேறு. உங்களுக்கென்று கோடிக்கணக்கான இரசிகர்கள் கடந்த 40 வருடங்களாக இருக்கிறார்கள். அவர்களின் துணையோடு நீங்கள் அரசியலுக்கு வந்துவிடுவீர்களோ என்கிற எண்ணமும், எதிர்பார்ப்பும் தமிழகம் முழுக்க இப்போதும் இருக்கிறது. அதனால் நீங்கள் மைக் முன்னால் பேசும் வார்த்தைகளில் அரசியல் நேர்மையும், விமர்சனங்களில் அனுபவ அறிவும், கருத்துகளில் அரசியல் தெளிவும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால் கடந்த சில மாதங்களாக நீங்கள் உங்களுக்கு நெருங்கியவர்களாக காட்டிக் கொள்பவர்களும், உங்களுடைய வாட்ஸ்அப்தனமான பேச்சுகளும், அரசியல் முன்னெடுப்புகளும் மிகுந்த ஏமாற்றத்தைத் தருகின்றன. நான் உட்பட உங்களை இரசித்த இரசிகர்களில் 90% சதவிகிதம் பேரை தர்மசங்கடத்துக்குள்ளாக்கிவிட்டீர்கள். இரசிகர்களுக்கே இந்த ஏமாற்றம் என்றால், உங்களை மாபெரும் சக்தியாக நினைத்து உங்களுக்கு ஆதரவு தரத் தயாராக இருந்த அனுபவம் மிகுந்த அரசியல் தலைவர்களின் மனநிலை இன்னும் ஏமாற்றமாக இருக்கும் என யூகிக்கிறேன்.
கருணாநிதி, ஜெயலலிதா என்கிற ஆளுமைகள் இருந்தபோது அவர்களுக்கு எதிரானவர்கள், உங்களின் பிம்பத்தைக் காட்டி அவர்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தார்கள். அதனால் அப்போது பெரிய அளவில் எடுபட்ட உங்கள் பிம்பம் தற்போது எடுபடவில்லை. உங்கள் பிம்பம் யாருக்கு ஆதரவானது அல்லது எதிரானது என்பதில் உங்களுக்கே குழப்பம் வந்துவிட்டது. அதனால் மிக இயல்பாகவே உங்களின் 40 வருட பிம்பம் அந்த ஆளுமைகளுக்குப் பின் மெல்ல மெல்ல மங்கி வருகிறது.
இ.பி.எஸ், ஓ.பி.எஸ், தினகரன், ஸ்டாலின் போன்றவர்களின் பதவி சேஸிங் விளையாட்டை மக்கள் இரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஏனென்றால் அவர்கள் தைரியமாக களத்தில் இருக்கிறார்கள். அவர்களில் யாராவது ஒருவரை தங்களை ஆள தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். நீங்கள் இவர்கள் உள்ள களத்தில் இல்லவே இல்லை. ஆனால் நீங்களும் ரேஸில் இருப்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்க நினைத்து தோற்றுக் கொண்டிருக்கிறீர்கள். இந்த விஷயத்தில் உங்கள் நண்பர் கமல் பரவாயில்லை. களத்தில் இருக்கிறார்.
நீங்கள் மதித்த ”சோ சார்” என்பவருக்கு மாற்றாக சில்லறைத்தனமாகப் பேசி கைதட்டல் வாங்கும் ”ஆன்லைன் பிரபலங்களை” உங்களைச் சுற்றி நியமனம் செய்திருப்பதாக கேள்விப்படுகிறேன். இது உண்மையோ, பொய்யோ உங்களுடைய இன்றைய நிலை மிகவும் பரிதாபகரமானது.
நீங்கள் குறிப்பிட்ட வெற்றிடம் உருவாகிக்கொண்டிருக்கிறது. ஆனால் அரசியலில் அல்ல, சினிமாவில். சினிமா நீங்கள் விட்டுக் கொண்டிருக்கும் இடம், அரசியல் நீங்கள் தொடத் தயங்கும் இடம். உங்களுடைய இப்போதைய இடம் என்ன? மிகப் பெரிய கேள்விக் குறிதான் பதில்.
பி.கு - அண்ணாத்த படம் ரிலீசாகும்போது வழக்கம் போல பார்ப்பேன், அதே போல டிஸ்கவரில் சேனலில் ஒளிபரப்பாகும் ”Into the Wild" அட்வென்சர் (?) நிகழ்ச்சியையும் பார்ப்பேன்.
- ISR Selvakumar
பஹீரா - பிரபுதேவா படத்துக்கு நண்பர் சிவாவின் டைட்டில் டிசைன்.
ஐ.எஸ்.ஆர்.வென்சர்ஸ் தயாரித்து வரும் யாதெனக்கேட்டேன் பட டைட்டிலையும் இவர்தான் டிசைன் செய்தார்.
Title Design for the upcoming Tamil movie #Bagheera, Starring Prabhudeva Master. and directed by Adhik Ravichandran.
#யாதெனக்கேட்டேன் பட நாயகி விஷாலி, இயக்குநர் ஐ.எஸ்.ஆர் செல்வகுமார் மற்றும் சிவா (Siva Digital Art)
#யாதெனக்கேட்டேன் இயக்குநர் ஐ.எஸ்.ஆர் செல்வகுமார் மற்றும் டைட்டில் டிசைனர் சிவா (Siva Digital Art)
கே.எஸ்.இரவிகுமார் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போகிறார்! இப்படி ஒரு வதந்தி டிவிட்டரில், ஃபேஸ்புக்கிலும் சுற்றிக் கொண்டிருக்கிறது. அஜித் ரசிகர்கள் குஷியாக அதை டிரெண்டிங் செய்து கொண்டிருந்தார்கள். என்ன இருந்தாலும் சூப்பர் ஸ்டார் இயக்குநர் அல்லவா. ஆனால் அதை எல்லாம் மறுப்பது போல் இன்று கே.எஸ்.ரவிகுமார் தன்னுடைய ஃபேஸ்புக்கில் ஒரு அறிக்கை விட்டிருக்கிறார்.
Dear friends, my beloved fans, media & film fraternity, a rumor is on rounds right from yesterday in a twitter account on my name stating that I am directing a film with Mr.Ajithkumar under Sun pictures production. This a firm false news and a rumor. I do not own a twitter account & the existing twitter account on my name K.S.Ravikumar is a fake one. Pls do not support the fake account.
Ever Thankful
K.S.Ravikumar
இந்த அறிக்கை வெளியானபின்பும் அந்த வதந்தி சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது. நிறைய படங்கள் சரியாக ஓடாமலும், வெளியாகமலும் அஜித்த தடுமாறிக் கொண்டிருந்த நேரத்தில் வரலாறு படம் தந்து அவருடை ஸ்டார் அந்தஸ்தை உறுதி செய்தவர் கே.எஸ்.ஆர். அதற்குப் பின் வந்த வில்லன் அவருடைய ஸ்டார் ரேட்டிங்கை எகிற வைத்தது. அதனால் கே.எஸ்.ஆர் தங்கள் தல படத்தை இயக்குகிறார் என்றதும் அவருடைய இரசிகர்கள் குஷியாகிவிட்டார்கள். அதனால் அது வதந்தி என்றாலும் அதை இரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.