கர்ணன் படத்தில் வரும் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலை சித் ஸ்ரீராம் ஒரு மேடையில் பாடியது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. அது தொடர்பாக சீர்காழியின் மகன் சிவசிதம்பரம் கூறியுள்ள கருத்து அழகு. அதன் மூலம் தான் எவ்வளவு பண்புள்ளவர் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார். சித் ஸ்ரீராம் பாடியதை மசாலா காஃபி என்று எடுத்துக்கொள்ளவேண்டும்”, என்று சீர்காழி சிவசிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். 'சித் ஸ்ரீராம் ’உள்ளத்தில் நல்ல உள்ளம்’பாடலை அழகு சேர்த்து பாடியுள்ளார். நான் இரண்டு வரிகள்தான் கேட்டேன். என்னை அந்தப் பாடலை மாற்றிப் பாடச்சொன்னால் பாடமாட்டேன். என் அப்பா அளவுக்கு யாரும் பாடமுடியாது என்பது எனது தாழ்மையான கருத்து. "சித் ஸ்ரீராம் பாடியதை மசாலா காஃபி என்று எடுத்துக்கொள்ளவேண்டும்” - என்று மறைந்த பாடகர் சீர்காழி கோவிந்தராஜனின் மகன் பாடகர் சீர்காழி சிவசிதம்பரம் புதிய தலைமுறைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். #SidSriram | #Karnan | #SirkazhiGovindarajan | #sirkalisivachidambaram | #interview